உயர் கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்
உயர் கல்வி முறைமையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு நல்லாட்சி அரசு தீர்மானித்துள்ளதுடன் விசேடமாக தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட்டு அதனூடாக மேலதிக மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு உயர்கல்வி பிரதி அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார்
கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .
அவர் அங்கு மேலும் ………
வருடாந்தம் ஒரு இலட்சத்து 40ஆயிரத்துக்கும் அதிகமான பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர். எனினும் 26 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயர்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதனால் மீதமுள்ள மாணவர்கள் சரியான வழிகாட்டல்கள் இன்றி தவறான திசைகளில் செல்கின்றனர்.
அதேவேளை, சர்வதேசத்தரத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய – எதிர்பார்க்கின்ற சில பாடத்திட்டங்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். கலைப் பீடங்களில் சில பாடங்கள் எந்தவித பிரயோஜனமும் இல்லை. இதனாலேயே வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக விடயங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு ஆணைக்குழு ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். தனியார் கல்வி நிறுவனங்களும் இதன் கீழ் செயற்படும் என தெரிவித்துள்ளார் ..-TC
மறுமொழியொன்றை இடுங்கள்