Archive for the ‘முஜாகிதீன்கள்’ Category
காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.
எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தொடர்ந்தும் நிலைகொள்ளுமாம்
ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ படை 2014 ஆம் ஆண்டுக்கு பின்னரும் நீண்டகாலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இது தொடர்பாக நேட்டோவின் தலைமை செயலரான அண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன் கூறுகையில், நேட்டோ நாட்டை விட்டு வெளியேற தாலிபான்கள் காத்திருந்தால் அது அவர்களுக்கு ஏமாற்றம் தான் என்றும், தாங்கள் நீண்டகாலம் அங்கிருக்க போவதாக கூறியுள்ளார்
அத்தோடு தாம் இராணுவ செயல்களோடு நிறுத்திவிடாமல் மற்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தாங்கள் உணர்ந்து கொண்டு விட்டதாகவும் அவர் கூறினார். போர்த்துகலில் நடைபெற்ற நேட்டோ மாநாடு ஒன்றில் அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
விக்கிலீக் மீண்டும் 391,832 ஆவணங்களை வெளியிட்டுள்ளது
M.ரிஸ்னி முஹம்மட்
ஈராக் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832 ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது (except for the months of May 2004 and March 2009)
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க
ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும் UK Defense Secretary Liam Fox
S.M.அப்துல்லாஹ்
ஈராக்கில் ஐதான யுரேனியத்தை -depleted uranium- கொண்ட ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பாவித்தமையை பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ்- Liam Fox- ஒத்துக்கொண்டுள்ளார் “UK forces used about 1.9 metric tons of depleted uranium ammunition in the Iraq war in 2003,” UK Defense Secretary Liam Fox said in a written reply to the House of Commons on Thursday, the Kuwait News Agency reported.
அதிகரித்துள்ள கேன்சர், பிறக்கும் குழந்தைகளின் ஊனம் போன்ற நோய்களுக்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு- The World Health Organization- ஆராய தொடங்கியுள்ளது ஈராக்கில் 2000 டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் பயன் படுத்த பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது இதில் குறிப்பாக அதிகமாக ஐதான யுரேனியம் பயன் படுத்தபட்டுள்ளதுVideo விரிவாக பார்க்க
முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது
M.ரிஸ்னி முஹம்மட்
காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் . வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…
Webster Tarpley: பாகிஸ்தானில் இடம்பெறும் கொலைகளை செய்வது அமெரிக்கா
Webster Tarpley அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான இவர் பாகிஸ்தான் மக்கள் சந்தைகளிலும் , பொது இடங்களிலும் கொல்லபடுவது அமெரிக்காவினால் என்று கூறுகின்றார்
அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான வேப்ச்ட்டர் தர்ப்லே- Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார் அமெரிக்கா பாகிஸ்தானில் தனது நலன்களை பேணும் இராணுவ குழுக்களை உருவாக்கியுள்ளதாகவும் அவற்றை பயன் படுத்தி அழிவு நாசவேலைகள் செய்வதாகவும் பாகிஸ்தானில் பரவலான குற்றசாட்டுகள் உள்ளன Webster Tarpley சில மாதங்களுக்கு முன்னர் வழங்கியுள்ள அவரின் பேட்டியை இங்கு பார்க்கவும் வீடியோ
பலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்ட தினம் :கலதாரியில்
இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயம் அல் நகபா என்று அழைக்கபடும் பலஸ்தீன மக்கள் இஸ்ரேல பயங்கரவாதத்தால் அகதிகளாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று மாலை புகைப்படக் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாறியுள்ளார் அங்கு பலஸ்தீன மக்களில் அவலங்களை சித்தரிக்கும் படங்களும் , பலஸ்தீன மக்களின் பூர்விகத்தை எடுத்து காட்டும் சான்றுகளும் காட்சிக்கு வைக்க பட்டிருந்தது , கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த விழா ஒன்றுக்காக விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது
பயங்கரவாத நாடான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பஸ்தான் காலனியை முற்றுமுழுதாக நிர்மூலமாக்குவதற்கான திட்டங்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளது’ என்று ஹமாஸ் பேச்சாளரான பவ்ஸி பர்ஹூம் குற்றஞ்சாட்டியுள்ளார் Read the rest of this entry »
உலகில் கிலாபத் ஏற்படுத்துவதை தடை செய்வதுதான் ஆப்கான் போரின் நோக்கம்

போரின் உண்மையான நோக்கத்தை உறுதிப் படுத்தியுள்ளார் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட் டன்னத்ட் General Richard Dannatt:
கடந்த வருடம் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட் டன்னத்ட் General Richard Dannatt – ஆப்கான மீதான போர் கிலாபத்- இஸ்லாமிய ஆட்சிமுறை – மீண்டும் ஏற்படுத்தப்படாமல் தடுக்கும் போர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் இவர் BBC’s Today program இக்கு கடந்த 14ஆம் திகதி வழங்கிய செவ்வியில் ‘ இஸ்லாமிய திட்டமுறை Islamist agenda ஒன்று இருக்கிறது அதை நாம் தென் ஆப்கானிஸ்தானில் அல்லது ஆப்கானிஸ்தானில் அல்லது தெற்கு அசியாவில் அவற்றை எதிர்க்காவிட்டால் , அதன் செல்வாக்கு வெளிப்டையாக வளரும் அது நன்றாக வளரக்கூடியது அது தெற்கு அசியாவில் இருந்து மத்திய கிழக்கு , வட ஆபிரிக்கா நோக்கி 14 ஆம் , 15 ஆம் நூற்றாண்டு கிலாபத்தின் பதிவுகளை கொண்டிடு நகர்வதை நாம் காணமுடியும்’ என்று கூறியுள்ளார்
இந்த ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட் டன்னத்ட் General Richard Dannatt பிரிட்டிஷ் புதிய பிரதமரான கமிரோனின் – Prime Minister Cameron-தற்போதைய ஆலோசகர் என்பதும் இஸ்லாமிய கிலாபத் முறைமையை கடுமையாக எதிர்ப்பவர் என்பதும் குறிபிடதக்கது. இவர் BBC’s Today program க்கு வழங்கிய செவ்வியை கேட்பதற்கு -: OurUmmah.org
அமெரிக்க படுகொலையின் மற்றுமொரு புதிய பதிவு

ஈராக்கின் வட பகுதி பிரதேசம் ஒன்றை அமெரிக்க ஆக்கிரமிப்பு படையும் , ஈராக்கிய அமெரிக்க கூலிப்படைகளும் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டன , இதன் போது பல பொதுமகள் ஆக்ரமிப்பு படைகளால் சுட்டு கொல்லபட்டனர் என்று தெரிவிக்க படுகின்றது இந்த சம்பவத்தில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு மருந்துகளை வாங்கி தனது வீட்டுக்கு அவசரமாக போக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது ஆனால் அவரின் தேவைதையை மறுத்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படை தனது வீட்டுக்கு போக முற்பட அந்த குறித்த நபரை பலதடவைகள் சுட்டு கொலை செய்துள்ளது பலதடவைகள் சுட்டு கொலை செய்யும் காட்சி பதிவு செய்யப்பட்டு தற்போது வெளிவந்துள்ளது வீடியோ விரிவாக பார்க்க…
இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க படுகின்றது

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தது தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியிருந்தது
இஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகாம்களில் வதையுருகின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க பட்டுவருகின்றது விரிவாக பார்க்க…
இலங்கை அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளது
இந்த வீடியோவில் பொதுமக்கள் படு கொலை செய்யப்படுவது மிகவும் தெளிவாக பதிவாகியுள்ளது
25 வரையிலான பொது மக்களை அமெரிக்க இராணுவ அப்பாச்சி ஹெலி கொப்டர்கள் சுட்டும், குண்டுவீசியும் கொலைசெய்யும் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளன இந்த வீடியோ காட்சிகள் எந்த பதிவும் இல்லாத இலச்ச கணக்கான் ஈராக் மக்கள் படுகொலையை மீண்டும் ஒரு முறை உலகிக்கு நினைவூட்டி வழமை போன்று .”This is shocking News” என்ற மேற்கின் வார்த்தைகளை மீடியாக்களில் உலா வர மட்டும் செய்துள்ளது
இலங்கையும் தனது பங்கிற்கு அமெரிக்க மனித உரிமை மீறல் பற்றியும் , யுத்த குற்றங்கள் பற்றியும் இலங்கையை நோக்கி தனது விரலை நீட்டாது அமெரிக்கா தனது இரத்த கறைபடிந்த கரங்களை பார்க்கவேண்டும் என்று சற்று கடுமையான தொனியில் கூறியுள்ளது இது பற்றி தேசிய பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல கடுமையாக அமெரிக்காவை சாடியுள்ளார் அமெரிக்கா மற்ற வளர்முக நாடுகளை பற்றி பேசாமல் தனது இரத்த கறைபடிந்த கரங்களை பார்க்க வேண்டும் என்றும் தனது இராணுவத்தை யுத்த குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஐ நா சபை பொதுச் செயலர் பான் கீ மூன் இன்னும் ஈராக்கில் அமெரிக்கா நடந்து கொண்டவிதம் பற்றி தனக்கு ஆலோசனை கூறும் நிபுணர்கள் குழுவினை இன்னும் ஏன் அமைக்க வில்லை என்றும் விரிவாக பார்க்க…
இன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்
கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…
ஆப்கானிஸ்தானில் குழந்தைகளும் பெண்களுமாக 33 பேர் படுகொலை
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை நடத்திய மிகவும் மோசமான வான் தாக்குதல் ஒன்றில் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டதை நேட்டோ ஒப்புகொண்டுள்ளது தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள உருஸ்கான் மாகாணத்தில் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதலில் அதிகமான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிய பொம்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக வந்து கொண்டிருந்த போராளிகளை தாம் அழித்து விட்டதாக நேற்று நேட்டோ படை தெரிவித்தமை குறிபிடதக்கது . விரிவாக பார்க்க…
நேற்று “கஷ்மீர் தினம்”

நேற்று “கஷ்மீர் தினம்” பாகிஸ்தானில் அனைத்து பிரதான நகரங்களிலும் பாரிய மக்கள் தொகையை கொண்ட கஷ்மீர் விடுதலைப் போராட்டத்திக்கு ஆதரவான ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 5ம் நாள் கஷ்மீர்,பாகிஸ்தான் மக்களால் “காஷ்மீர் தினம்” கொண்டாடுவது வழக்கம் கஷ்மீர் கடந்த 150 ஆண்டுகளாக கஷ்மீர் விடுதலைப் போராட்ட பாதையில் நடக்கிறது இந்தியா என்ற நாடு தோன்றுவதற்கு முன்பு காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது என்பது வரலாறு
இஸ்ரேலுக்கு துருக்கியின் கடும் எச்சரிக்கை

துருக்கியப் பிரதமர் ரெசெப் தையிப் அர்டோகன் Recep Tayyip Erdogan, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார் இஸ்ரேல், காஸாவில் செய்யும் பொதுமக்களை படுகொலை, பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்கள் என்பன வற்றை அங்காரா அமைதியாக பார்த்துகொண்டு இருக்காது என எச்சரித்துள்ளார் மேலும் அவரின் எச்சரிகையில் காஸாவில் உட்கட்டமைப்பை நிர்மூலமாக்கி, அதனை ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதை அங்காரா கண்களை மூடி அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று எச்சரித்துள்ளார் . விரிவாக பார்க்க
பலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது
அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.
கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.
1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..

ஹமாஸ் உயர் பீட உறுப்பினர் இஸ்ரேல் உளவு ஏஜண்டுகளால் துபாயில் படுகொலை
பலஸ்தீன் விடுதலை போராட்டத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரும் ஹமாஸ் இராணுவ கட்டமைப்பான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை பெற்றவருமான மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ் -Mahmoud Abdul Raouf al-Mabhouh- துபாயி நாட்டில் இவர் தலையில் நவீன கருவி ஒன்றினால் மின்சாரம் செலுத்தபட்டு கொலை செய்யபட்டார் இந்த கொலையின் பின்னணியில் இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்-Mossad-இருபதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் அடக்கு முறைக்கு எதிரான முதல் இன்திபாழாவின் போதும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தை சேர்ந்த இருவரை கைப்பற்றிய நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்காற்றியுள்ளார் இவர் 1989 முதல் சிரியாவில் வாழ்ந்து வந்தார். விரிவாக பார்க்க..
நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் இருளில் மூழ்கும் காஸா
ஐரோப்பிய யூனியன் எரிபொருளுக்கான தனது நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளதால் இதுவரை காஸாவில் இயங்கிவந்த ஒரேயொரு மின்னுற்பத்தி நிலையமும் எதிர்வரும் வியாழக்கிழமை (28.01.2010) முதல் இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளதென பலஸ்தீன் எரிசக்தி அதிகாரசபையின் பிரதித் தலைவர் கினான் உபைத் தெரிவித்துள்ளார்.
அவர் பலஸ்தீன் ஊடகமையத்தினூடே வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த இக்கட்டான நிலையிலிருந்து காஸா மக்களைப் பாதுகாக்குமுகமாகத் துரித நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு அரபுநாடுகளையும் உலகெங்கிலுமுள்ள சுயாதீன அமைப்புக்களையும் நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவாக பார்க்க….
அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் 55,000 பலஸ்தீனர்களும் இஸ்ரேலுக்குக் கூஜாதூக்கும் எகிப்தும்
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்குக் கிழக்குப் பகுதியைச் சுற்றியுள்ள பிராந்தியம் இஸ்ரேலிய பிரிவினைச் சுவரினால் துண்டாடப்பட்டுள்ளமையால், அப்பிரதேசங்களில் வசித்துவரும் 55,000 பலஸ்தீனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அடிப்படை வசதிகள் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சமய விவகாரங்களுக்கான பலஸ்தீன் அமைச்சர் கலாநிதி தாலிப் அபூ ஷஅர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி அபூ ஷஅர் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில், மேற்படி பிரதேசங்களில் வாழ்ந்துவரும் பலஸ்தீன் மக்கள் வேறுவழியின்றித் தாமாகவே தமது வீடுகளையும் நிலங்களையும் கைவிட்டுச் செல்வதற்கு நிர்ப்பந்திப்பதே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் ‘பலஸ்தீனரைத் தனிமைப்படுத்தும் கொள்கை’யின் அடிப்படை நோக்கமாகும் என்று விபரித்துள்ளார். விரிவாகக் பார்க்க..
நான் இன்னும் சஹிதாக வில்லை Dr. அன்வர் அல் அவ்லாகி
இன்றைய முஸ்லிம் போராளிகளின் முதன்மையான இஸ்லாமிய போரியல் வழிகாட்டிகளில் இமாம் அன்வர் அல் அவ்லாகி ஒரு தனித்துவமான ஒரு இடத்தை பெறுகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன இவர் யமனில் அமெரிக்க தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக யமனும் , அமெரிக்காவும் கூறி வந்தன , இதை முழுமையாக இமாம் அன்வர் அல் அவ்லாகி தானே நேரடியாக மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன , அமெரிகாவில் பிறந்து அமெரிகாவில் பொறியியல் பட்டம் பெற்று பின்னர் விரிவாக பார்க்க
யூதக் குடியேற்றவாசிகளின் அடாவடித்தனத்திக்கும் ஆக்கிரமிப்புப் படையின் ..
யூதக் குடியேற்றவாசிகளின் அடாவடித்தனத்திக்கும் ஆக்கிரமிப்புப் படையின் அட்டூழியங்களுக்கும் நடுவில் தவிக்கும் பலஸ்தீனர்கள்
கல்கிலியா – கடந்த வியாழக்கிழமை (14.01.2010) அதிகாலை கல்கிலியா பிரதேசத்தின் இமாதின் கிராமத்தினுள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயுதந்தாங்கிய யூதக் குடியேற்றவாசிகளின் அட்டகாச நடவடிக்கைகளால் முழுக்கிராமமும் அல்லோலகல்லோலமடைந்தது. இதே கிராமத்தினுள் கடந்த இரு வாரகாலமாக இவர்களின் அட்டகாசம் கட்டுமீறிப்போவதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கிராம மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அயலில் உள்ள யூதக் குடியேற்றத்திலிருந்து திடீரென்று மேற்படிக் கிராமத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளான யூதக்குடியேற்றவாசிகள் தமது அட்டகாசங்களை அரங்கேற்றிவிட்டுப் பின்வாங்கிச் செல்கையில், மூன்று கார்களையும் ஒரு டிரக்டர் வண்டியையும் தீவைத்துக் கொளுத்தினர் என சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.விரிவாக பார்க்க …
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் எதேச்சதிகாரம்: அநாதரவுநிலையில் 50,000 பலஸ்தீனர்கள்
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – மேற்குக் கரையிலிருந்து கிழக்கு ஜெரூசலத்தைத் துண்டாடும் பிரிவினைச் சுவருக்கு அப்பால் வசிக்கின்ற அனைத்துப் பலஸ்தீனர்களும் இனிமேல் ஜெரூசலவாசிகளாகக் கருதப்படமாட்டார்கள் என்ற தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை முடிவுசெய்துள்ளது.
மேற்படி பிரதேசத்தில் வசித்துவரும் மக்கள் ஜெரூசல நகரவாசிகளுக்குரிய நீலநிற அடையாள அட்டைகளைக் கொண்டிருந்த போதிலும், இனிமேல் அவர்கள் அந்நகரவாசிகளாகக் கருதப்பட மாட்டார்கள் என இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஜெரூசல நகரசபையின் உத்தியோகபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய நாளேடு ஹாரெட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.விரிவாக பார்க்க
எகிப்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து ஐரோப்பாவிலும் துருக்கியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம்
கடந்த செவ்வாய்க்கிழமை (05.01.2010) இரவு அல் அரிஷில் இருந்த லைஃப் லைன் -3 சர்வதேச நிவாரண உதவிக்குழு உறுப்பினர்கள்மீது எகிப்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்குமுகமாக ஐரோப்பியத் தலைநகரங்களிலுள்ள எகிப்தியத் தூதுவராலயங்கள் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பாவிலுள்ள பலஸ்தீன் ஆதரவாளர் கூட்டணி அழைப்புவிடுத்துள்ளது. 14 ஐரோப்பிய அமைப்புக்களை உள்ளடக்கிய மேற்படி கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பாவின் பல பாகங்களிலும் தாம் மேற்கொள்ளவிருக்கும் எதிர்ப்புப் பேரணிகள் யாவும் ஒரே நேரத்தில் இடம்பெறும் என்றும் விரிவாக பார்க்க…
சிறுவர்களை கொடுரமாக கொன்று சாதனை படைக்கும் ஆப்கான் ஆக்கிரமிப்பு படை
ஆறு, ஒன்பது மற்றும் 10 ஆம் தரங்களில் கல்வி கற்கும் 8 சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேரை மூன்று வீடுகளிலிருந்து அழைத்து வந்து சுட்டுக் கொன்றுள்ளமை தெரியவந்துள்ளதுஆப்கானிஸ்தான் வீடொன்றில் தூக்கத்திலிருந்த 8 சிறுவர்கள் உட்பட 10 பேரை வெளியே இழுத்து வந்து ஒரு அறைக்குள் வைத்து பின்புறமாக கைகளை கட்டி சுட்டுக் கொன்றதாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மீது கடந்த புதன்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 8 பேர் பாடசாலை சிறுவர்களென அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கொல்லப்படுவதற்கு முன்னர் சிலருக்கு கைவிலங்கு இடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர் .ஆனால் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரிவாக பார்க்க
2009 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை 1,594 பலஸ்தீனர்களைப் படுகொலை செய்துள்ளது

ரமல்லா – 2009 ஆம் ஆண்டு 473 குழந்தைகள், 126 பெண்கள் உட்பட 1594 பலஸ்தீனர்களைகாஸா மீதான இஸ்ரேலிய யுத்தத்தில் உயிருடன் எரிந்துபோன பலஸ்தீன் குழந்தைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கொன்று குவித்துள்ளது என Tadamun எனும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (30.12.2009) மேற்படி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 1460 பேர் காஸா மீதான அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் போதும், ஏனைய 134 பேரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்குக் கரை, காஸா பிரதேசங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதும் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்துவரும் அரபு- இஸ்ரேலிய மோதல் வரலாற்றில் கடந்த ஜனவரி மாதம் மிக மோசமான படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள மாதமாகும். அந்த மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 30 பேர் என்ற வீதத்தில் 1076 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. விரிவாக பார்க்க…
ஓர் எரியும் தேசத்தின் முடிவிலித் துயரங்கள்…
2008 டிசம்பர் மாதத்தின் அந்தக் கடைசி நாட்கள் உங்கள் ஞாபகத் தை மெல்லத் தட்டி திறந்து பாருங்கள். உலகின் மனசாட்சி செத்துப்போய்விட்ட ஒரு தருணத்தில் எதேச்சதிகார ஆதிக்கச் சக்திகளின் கொடூரமான மறுபக்கத்தைத் தோலுரித்துக் காட்டிய அந்தப் இருபத்தி இரண்டு நாட்கள்… இன்றுவரை கடலெனப் பெருகி ஓடும் எம் சொந்தங்களின் ரத்தம் இந்தப் புகைப்படங்களை நினைவிருக்கிறதா? இவை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகவோ ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காகவோ பற்பல வர்ணங்களில் வெடித்துச் சிதறும் வானவெடிகளா? இல்லை. விரிவாக பார்க்க
இஸ்ரேல் பயங்கரவாத ஆக்கிரமிப்பு இராணுவ தாக்குதல் ஒரு வருட பூர்த்தி
பலஸ்தீன காஸா பகுதி மீது இஸ்ரேல் பயங்கரவாதிகள் கண்முடித்தனமான, போர் விதிமுறைகளுக்கு எதிரான பயங்கர வாத ஆக்கிரமிப்பு இராணுவத் தாக்குதல் நடத்தி. ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி கொன்று குவித்து கொல்லபட்டவர்களின் உறுப்புகளை திருடி அமெரிக்காவுகும் ஐரோப்பிய நாடுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்து கொலை தாண்டவம் ஆடி ஒரு வருடம் பூர்த்தி அடைகின்றது தற்போதைய நிலையில், பாலஸ்தீன நிலப்பரப்புகளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் தொடர்ந்து கடைபிடித்துவரும் கொலைகள் , உடல் உறுப்பு திருட்டு , மற்றும் பொருளாதார தடைகள் என்பன தொடர்கிறது அங்கே உடல் உறுப்பு திருட்டுகளை தான் செய்வதை வேறு வழி இல்லாமல் ஒத்து கொண்டுள்ளது ஆனால் அதை பற்றி பெரிதாக கருதாத ஐ.நா பொது சுகாதார சேவைகள் அழிந்துபோகும் ஓர் அபாய நிலையை உருவாக்கியுள்ளதாக .மட்டும் ஐ.நா மன்றத்தின் கூறுகிறது விரிவாக பார்க்க.
பலஸ்தீன் பெண் தொடந்து 100 நாட்களுக்கும் மேலாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
தொடர்ந்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பெண் கைதி வஃபா அல் பெஸ்ஸின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மனிதாபிமான அமைப்புகள் தலையிட்டு, தமது மகள் மீது இஸ்ரேலிய சிறை நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பெண் கைதியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.விரிவாக பார்க்க
ஈராக் ஆக்கிரமிப்பு ஒரு தமிழ் ஆவணபடம்
ஈராக்கில் பேரழிவை தரக்கூடிய ஆயுதங்ககள் இருகின்றன . அதனால் உலக மக்களையும் ஈராக் மக்களையும் நாங்கள் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி ஆடிய புஷ், அத்துமீறி ஈராக்கில் நுழைந்து ஈராக்கை தகர்த்தான் பல லட்சம் பேரை கொன்று குவித்தான் இன்று அந்த மனித மிருகம் உல்லாசமாக வாழ்கின்றது ஆனால் ஈராக் மக்கள் வாழ்வதற்காக தங்கள் உடல் உறுப்புகளை விற்கும் கொடூரம் ஈராக்கில் நடந்துக்கொண்டிருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பு தமிழ் ஆவணபடம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
ஈராக் மக்கள் மீது அமெரிக்க பயங்கரவதிகள் நடத்தும் பயங்கரவாத தாக்குதல்
இந்து பயங்கரவாதம் !
1
2
முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைக்க எளிய வழி!
ஒரு முஸ்லிம் நான்கு பெண்கள் வரை திருமணம் புரிய இஸ்லாம் அனுமதிக்கின்றது. தங்களது மதம் கொடுக்கும் அனுமதியை அப்படியே பின்பற்றும் இந்திய முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நான்கு பெண்களை மணம் முடித்து இஷ்டத்திற்கு குழந்தைகளைப் பெற்றுப் போடுகின்றனர். இதனால் இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை வருடம் தோறும் மிக அதிக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஒருசில வருடங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ஆகி, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இந்தியா இஸ்லாமிய நாடாக மாறி விட்டால், இஸ்லாமிய நாட்டில் காஃபிர்கள் எவருமே வாழ முடியாது. ஏனெனில், இஸ்லாம் “காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லக் கட்டளை இடுகின்றது”.
அவ்வாறு ஒரு நிலை நிகழாமல் இருக்க வேண்டுமெனில், இந்தியாவில் முஸ்லிம்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழி?
இதோ அதற்குரிய எளிய வழி!
வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைகளில் உள்ள இழி மிருகங்கள் சிலர் முஸ்லிம்களைக் குறித்தும், முஸ்லிம்களின் வளர்ச்சியைக் குறித்தும் அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளை நம்பி, அந்தப் பன்னாடைகளால் உருவாக்கி விடப்பட்டுள்ள மூளையற்ற காட்டுமிராண்டி சங்க் கூட்டம் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு செய்யும் தெய்வீகப் பணியினை மேலே கண்டிருப்பீர்கள்.
ஆனந்தமாக உள்ளது. பார்க்கப்பார்க்க ஆனந்தமாக உள்ளது.
மேலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. அவ்வளவுச் சிறப்பாகத் தங்களுக்கு இடப்பட்டப் பணியினைக் காட்டுமிராண்டிக் கூட்டம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.
பிஞ்சுக் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் எரித்து கரிக்கட்டையாக்கியிருக்கும் மிருகத்தை விடக் கேவலமான இழி ஜந்துக்கள், ஜாட்டான்கள் அனைத்து வித பாதுகாப்பு மரியாதைகளுடன் மக்கள் மத்தியில் தெனாவெட்டாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். இருக்கட்டும்.
ஆனால், ஒன்று மட்டும் இந்த காட்டுமிராண்டிக் கூட்டம் நினைவில் வைக்க வேண்டும். எப்பொழுதானாலும் தான் செய்யும் காரியத்திற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். எப்படிப்பட்டப் பாதுகாப்புடன் எந்த மூலையில் போய் ஒழிந்துக் கொண்டாலும்…. செய்த வினைகளுக்குப் பலன் வந்தடைந்தே தீரும்.
எரியும் மனங்கள் இங்கு எண்ணிலடங்காதவை இன்னும் உள. இந்தியாவிலிருந்து கடைசி முஸ்லிம் துடைத்தெறியப்படும் வரை(மீனாட்சி புரங்கள் இருக்கும் வரை அந்த எண்ணம் பலிக்கப்போவதில்லை), இந்த ஈனச்செயல்களை செய்தக் காட்டுமிராண்டிகள் நிம்மதியாக வாழலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம். அந்த மனங்களின் தீச்சுவாலை இறுதிவரை பற்றி எரிந்து கொண்டே தான் இருக்கும் – பரிகாரம் காணப்படும் வரை!.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு!
2002ஆம் ஆண்டு குஜராத் சபர்மதி எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் இராம பக்தர்களாக வந்த சங் பரிவார் தொண்டர்களையும் அப்பாவி இந்து மக்களையும் தீவைத்துக் கொளுத்திவிட்டு நிமிட நேரத்தில் அதனை ‘முஸ்லிம் தீவிரவாத’மாகத் திசை திருப்பி, 3000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் காவுகொண்ட மோடியும் அவனது கொலைவெறிக் கூட்டமும் இன்றுவரை வெகு சுதந்திரமாக பவனி வரும் நாடு, நம் நாடு.
கடந்த 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டட் நகரத்தில் சங்பரிவார் அமைப்பு உறுப்பினர் ஒருவரது வீட்டில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு வெடித்த நிகழ்வின்போது அங்கு முஸ்லிம்கள் அணியும் தொப்பிகளும் ஒட்டுத் தாடிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இது போன்ற நிகழ்வுகளால் பலமுறை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார குழுக்களின் பயங்கரவாத முகம் அம்பலப்பட்டாலும் பயங்கரவாதத்தை முஸ்லிம்கள் மட்டும் ஒட்டு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்டு செயல்படுவதாகக் காட்டுக் கூச்சல் போடும் பேச்சுரிமைச் சுதந்திரம் மிளிரும் நாடு, நம் நாடு.
கடந்த 2007 ஜனவரி மாதம் 24ஆம் நாளிரவில் தென்காசி RSS அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் நிறுத்தப் பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலையக் குண்டு வெடிப்பில் ஒரு வெற்றிலை வியாபாரி உள்பட இருவர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக்காத குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்டப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. என்றாலும், செய்வதையும் செய்துவிட்டு, “இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் பயங்கரவாதிகளே காரணம்; அவர்களைக் கைது செய்ய வெண்டும்” என்று அறிக்கைகளை அள்ளி விடுவதற்கும் அவற்றைப் படித்துப் பார்க்காமலே பதிப்பதற்கும் பரபரப்புப் பத்திரிகைகள் நிறைந்த கருத்துச் சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கும் நாடு, நம் நாடு.
கேரளத்திலிருந்து வெளியாகும் “தேஜஸ்” என்ற தினசரியில், “நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே” என்று பிரபல தலித் சிந்தனைவாதியும் “தலித் வாய்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T இராஜசேகர் உரக்க உண்மையைப் போட்டுடைத்த போதிலும் பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற இன்னபிற புண்ணாக்கு வாதங்களெல்லாம் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் கடமைகளாக நிறைவேற்றப் படுவதுபோல் உலகமுழுதும் உருவாக்கப்பட்டு வரும் மாயையை ஒழித்துக் கட்டுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலொன்றாக, இந்திய முஸ்லிம் அறிஞர்களும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவினரும் இணைந்து ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்’ Movement Against Terrorism (MAT) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்திருக்கின்றனர்.
“முஸ்லிம்களுக்குக் கல்வியூட்டும் கடமையோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை என்பதை ஊடகங்களுக்கும் பிறமதச் சகோதரர்களுக்கும் உரியவகையில் புரிய வைப்பதைக் கடமையாகக் கையிலெடுத்துள்ளோம்” என்று கூறுகிறார் ப.எ.இ.யின் ஒருங்கிணைப்பாளரும் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான காலித் ரஷீத் ஃப்ராங்கி மஹல்லீ.
“அண்மையில் நடைபெற்ற ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய முஜாஹிதீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியவரையும் அதைப்போன்ற பெயர் தாங்கிகளையும் எதிர்த்துப் போராடி முறியடிப்போம்” என்றும் அவர் சூளுரைத்தார்.
மேலும், கடந்த ஃபிப்ரவரி 2ஆம் நாள் லக்நவ்வில் இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் குழுமிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டு, இப்போது செயலுக்கு வருவதாகவும் IANS க்கு அளித்த தொலைபேசிப் பேட்டியின்போது ஆயிஷ்பக் ஈத்காவின் துணை இமாமான மஹல்லீ கூறினார்.
“நாட்டில் நிகழ்த்தப் படும் பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் சுமத்தி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்” என்று கூறிய மஹல்லீ, நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இயக்கம்’ பற்றி, ஒவ்வொரு பள்ளியின் வெள்ளிமேடைகளிலும் அறிமுகப் படுத்தி, எங்கள் சமுதாயத்தவரைத் தவறான வழிகாட்டுதலின் பக்கம் செல்ல விடாது தடுத்து, வெற்றியின் இலக்கை நிச்சயம் அடைவோம்” என்று உறுதியோடு கூறும் மஹல்லீயின் அவாவும் இலட்சியமும்தான் கோடானு கோடி இந்திய முஸ்லிம்களின் அவாவும் இலட்சியமுமாகும்.
நாட்டின் அமைதியே நமது அவா!
muslimpage.blogspot.com
தெளிவான தீவிரவாதி…!
இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப் படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!
தேர்தலில் “தீவிர”ப் பிரச்சாரம் செய்பவர், அரசியல்வாதி.
என்கவுண்டரில் கொல்லப் பட்ட வீரப்பனை இரு மாமாங்கங்களாகத் “தீவிர”மாகத் தேடியவர்கள், காவல் துறையினர்.
நடிக-நடிகையரின் வீட்டில் கருப்புப் பணத்தைத் “தீவிர” வேட்டையாடுபவர்கள், வருமான வரிச் சோதனையாளர்கள்.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றத் “தீவிர” முயற்சியில், மத்திய அரசு.
Terrorism, Terrorist ஆகிய ஆங்கிலச் சொற்களை முறையே தீவிரவாதம், தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தினால் மேற்காணும் அரசியல்வாதி, காவல்துறையினர், வருமான வரிச் சோதனையாளர்கள், மத்திய அரசு மட்டுமின்றித் தற்போது தமிழகத்தில் “தீவிர”மாகி விட்ட பருவமழையும் தீவிரவாதிப் பட்டியலில் இடம் பெற்று விடும்.
Terrorism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘பயங்கர ஆட்சிமுறை’, ‘பயங்கரக் கொள்கை (இயக்கம்)’, ‘அச்சுறுத்திப் பணிய வைத்தல்’ ஆகிய தமிழ்ப் பொருள்களும் Terrorist என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘பயங்கரவாதி’, ‘வன்முறைப் புரட்சிக்காரன்’, ‘அச்சுறுத்தி ஆள்பவன்’ ஆகிய பொருள்களும் அகராதியில் காணப் படுகின்றன.
ஆனால், தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களும் Terroristஐத் தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தி, “ஈடுபடும் காரியத்தில் தெளிவுடனும் உறுதியுடனும் செயல்படுபவன்” என்ற அகராதி பொருளைப் அர்த்தமற்றதாக்கி, “ஆயுதங்களால் மக்களை அநியாயமாகக் கொல்பவன்” என்ற ஒரே பொருள் சார்ந்த அச்சத்தை மக்களின் மனதில் விதைத்து விட்டன.
இந்தத் ‘தீவிரவாதி’ என்ற பூச்சாண்டியைக் காட்டியே நாட்டில்-உலகில் “தெளிவான தீவிரவாதிகள்” செய்து முடித்துள்ள, செய்ய எண்ணியுள்ள செயல்களும் திட்டங்களும் எழுத்தில் வடிக்க இயலாதவை.
யார் இந்தத் தெளிவான தீவிரவாதிகள்?.
தீவிரவாதிக்கான புதிய அர்த்தத்தின்படி, “தான் கருவறுக்க நினைப்பவர்களைப் பூண்டோடு அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முறையாகத் திட்டமிட்டு இறுதிவரை அதனைச் செயல்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்பவன்”ஐத் தமிழிதழியலின் சம்பிராதயத்தைப் பின்பற்றி, “தெளிவான தீவிரவாதி” என்றே தற்காலிகமாகச் சொல்லி வைப்போம்.
அந்த வகையில் இன்று கண்முன் நிழலாடுபவர்கள் இருவரே. முதலாமவர், இருபதாம் நூற்றாண்டிற்குத் தீவிரவாதத்தைப் பரிசளித்த உலகத் தீவிரவாதி ஜார்ஜ் புஷ். இரண்டாமவர், இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே “நவீன நீரோ” எனப் புகழ்மாலை சூட்டப்பட்ட இந்தியாவின் ஒரே மாநில முதல்வர் நரேந்திர மோடி.
“இஸ்லாமியத் தீவிரவாதம்” எனத் தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தை அடைமொழி கொடுத்த புஷ், இஸ்லாமிய மக்கள் நிறைந்து வாழும் ஆப்கான் மற்றும் ஈராக்கில் கொன்று குவித்த அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிகை மில்லியன்களைத் தாண்டும்
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்தியத் தலைநகரம் டில்லியில் நடந்த மத-அரசியல் தலைவர்களின் சர்வதேசத் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்த தலாய்லாமா, “இஸ்லாம் என்பது சமாதானத்தின் மார்க்கமாகும். அது ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததில்லை. அப்படியிருக்கையில் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் குறிவைப்பது வேதனைக்குரியதாகும். முஸ்லிம்கள் உலகில் சமாதானத்தை விரும்புபவர்களாவர். ஓர் உண்மையான முஸ்லிமிற்கு ஒரு போதும் தீவிரவாதி ஆக இயலாது” எனக் கூறினார்.
தலாய் லாமா கூறியதில், “அமைதியைப் போதிக்கும் / விரும்பும் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிமால் தீவிரவாதியாக ஒருபோதும் இயலாது” என்ற சொற்கள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை.
ஆனால் இவையெல்லாம் தெளிவான திட்டங்களுடன் அரசு இயந்திரங்களை உபயோகித்து தீவிரவாதத்தில் ஈடுபடும் புஷ் மற்றும் மோடி போன்ற தெளிவான தீவிரவாதிகளுக்கு மூளையில் ஏறப்போவதில்லை.
அந்த மாநாட்டிற்குப் பின்னர் டில்லி ஜுமா மஸ்ஜிதின் இமாம் புகாரி பேசியதில் சில வாசகங்களும் இங்கு கவனிக்கத்தக்கவை..
“நரேந்திரமோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்வரை அங்கு இன அழித்தொழிப்பு ஓயாது. இன்றுவரை தீவிரவாதி என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களை மோடி என்கவுண்டர் என்ற பெயரில் அழித்து வருகிறார். ஆனால் உண்மையான தீவிரவாதி மோடிதான்.
குஜராத் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதியாக்கப்பட வேண்டும். ஆனால் அது மோடி முதல்வராக இருக்கும்வரை நம்மால் எதிர்பார்க்க இயலாத ஒன்று. தங்களை அநியாயமாக அழிப்பவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோபமே பலரைத் தீவிரவாதத்தில் கொண்டு சேர்க்கின்றது.
தன் சொந்தச் சகோதர-சகோதரிகள், பெற்றோர், பச்சிளம் பாலகர்கள் தன் கண் முன்னே வைத்து கொடுமைப் படுத்தப்பட்டும் மானபங்கப் படுத்தப்பட்டும் கொல்லப்படும்போது தடுக்க வேண்டிய காவல்துறையே தீவிரவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும் ஒருவன் – இறுதியாக நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, அங்கும் எவ்வித நீதியும் கிடைக்காமல் போனால் அவன் என்ன தான் செய்வான்ர்?. யாருக்காக வாழ வேண்டுமோ அவர்கள் அனைவரும் தன் கண் முன்னால் அநியாயமாகக் கொலையுண்ட பின்னர், தனக்கு நீதியும் மறுக்கப் பட்ட அத்தகைய நிலையில் அவன் தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தீவிரவாதச் செயல்களின் பக்கம் திரும்பாமல் இருந்தாலே அது அற்புதமாகும்.
கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கு நீதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க இயலும்” என இமாம் புகாரி கூறினார்.
இமாம் புகாரியின் கருத்தை நாம் இங்கு எடுத்தெழுதுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.
கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது தோழர் வாஜ்பாயின் வெற்றிக்காக பாஜகவுக்கு ஓட்டு கேட்டவர்தான் இவர். முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட எவனும் இந்தியத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாஜகவிற்காக ஓட்டு கேட்க மாட்டான் என்பது திண்ணம்.
அப்படியிருக்க பாஜக அனுதாபியான இவர், அதே பாஜகவின் மாநில முதல்வர் மோடியினைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கின்றார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமேயாகும்.
தனது தலைமைபீடம் பயிற்றுவித்த, “முஸ்லிம்களை அடியோடு அழித்தல்” என்ற அடிப்படை அஜண்டாவை அப்படியே உள்வாங்கி, துவக்கம் முதல் மிகச் சரியாகத் திட்டமிட்டு அதனை குஜராத்தில் நடைமுறைப் படுத்துபவர்தான் மோடி.
அதற்காகத் தனது இன மக்களைக்கூட காவுகொடுக்கத் தயாரானவன் தெளிவான தீவிரவாதியல்லாமல் வேறென்ன?
உலகில் இஸ்லாமியர்களின் தலைமீது தீவிரவாதச் சுமையைத் தூக்கி வைத்து, அவர்களை அழிக்கத் தன் சொந்த நாட்டு மக்களையே காவு கொடுக்கும், உலகத்திலேயே தெளிவான தீவிரவாதியான புஷ்ஷை அடியொற்றி, குஜராத் முஸ்லிம்களை அழிக்கத் தன் இன மக்களான “கரசேவகர்களையே ரயிலில் வைத்துப் பூண்டோடு எரித்த” மோடி, தொடர்ந்த முஸ்லிம் மக்களின் இன அழிப்பிற்காகப் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி இருந்தது இன்று வெளிக்கொணரப் பட்டுள்ளது.
குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை போலி என்கவுண்டர் மூலம் காவல்துறையால் சுட்டுத் தள்ளப் பட்ட – சொஹ்ரப்தீன் தம்பதியினர் உட்பட - முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்குகிறது. படுகொலை செய்யப் பட்ட அனைவர் மீதும் “மோடியைக் கொல்லச் சதி செய்தார்கள்” என்ற ஒரேயொரு போலியான குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. நாட்டுத் துப்பாக்கிகள் ‘வைத்து’ எடுக்கப் பட்டன. ஆனால், நேர்மையான சில பத்திரிகைகளாலும் நல்ல மனம் படைத்த நடுநிலையாளர் சிலராலும் உண்மை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப் பட்டது. போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளிய குற்றத்துக்காக மூன்று IPS கொலைகார அதிகாரிகள் கைது செய்யப் பட்ட செய்தி, நாட்டையே ஓர் உலுக்கு உலுக்கி எடுத்தது. பள்ளிப் படிப்பைப் படிப்பதற்குக்கூட வசதியில்லாமல் முஸ்லிம்கள் போட்ட பிச்சையில் படித்தவனும் பதின்மூன்று முஸ்லிம்களைப் போலி என்கவுண்டரில் கொன்றவனுமான டி.பி. வன்சாரா என்ற அயோக்கியக் கொலைகாரன் IPS-க்கு 150 கோடி வரை சொத்துகள் பரிசளிக்கப் பட்டுள்ளன.
கருவறுக்கப்பட்டது போக, அனைத்தையும் இழந்து சொந்த மண்ணில் அகதி முகாம்களில், அடிமனதில் அடங்காத பீதியுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குத் தினசரி வாழ்வாதார உரிமைகளைக்கூட கொடுக்காமல் மறுத்து வருவது மோடியின் திட்டத்தின் மற்றொரு கட்டத்தைச் செயல்படுத்துவதன் ஒரு பாகமே.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதும் அதன் மற்றொரு கட்டம்தான். இதனைத் தான் இமாம் புகாரி அடிகோடிட்டுள்ளார்.
இதோ இன்று தனது நாட்டில் நடைமுறைபடுத்திய அதே திட்டத்தைக் கர்நாடகத்திலும் “குஜராத் மாடல் பின்பற்றப்படும்” எனத் தனது மற்றொரு சக சங்கத்தோழனான எடியூரப்பாவிற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் மோடி.
இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் வகுத்தளித்த “முஸ்லிம் இன அழிப்பை”த் திட்டமிட்டு நடைமுறைபடுத்த முயலும் மோடியை இந்தியாவின் நம்பர் ஒன் தெளிவான தீவிரவாதி என்று தாராளமாகக் கூறலாம்.
“கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்” என்ற உவமைச் சொலவடையை உண்மைப் படுத்துவதுபோல் பெரும்பாலும் தீவிரவாதிகளுக்கு இறுதி முடிவு என்பது “என்கவுண்டர்” போன்று ஏதாவது விரும்பத்தகாத துர்முடிவாகவே இருக்கும்.
இன்று உலகிலும் இந்தியாவிலும் தெளிவான தீவிரவாதிகளாக வலம் வரும் புஷ் மற்றும் மோடி தீவிரவாதிகளின் முடிவு…?
இவர்களால் பாதிக்கப்பட்டு இன்றும் நீதி மறுக்கப்பட்டு மனதில் அடங்காக் குமுறலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கான நீதி கிடைப்பதைப் பொறுத்தே இவ்விருவரின் முடிவும் அமையும்.
இந்தத் தெளிவான தீவிரவாதிகளால் அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டு, மறுக்கப்பட்ட நீதியுடன் உலாவரும் எண்ணிலடங்கா அப்பாவி மக்களை, இவர்களைப் போன்றவர்களுக்கு எதிரான மற்றொரு தீவிரவாதக் கூட்டமாக மாற்றாமல் இருப்பதற்கான கடமை இவ்வுலகில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு.
muslimpage.blogspot
ஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்
மத்திய-கிழக்கில் இஸ்ரேல் உருவாகுவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, 1928ல் சோவியத் யூனியனில், ஸ்டாலினால் யூத சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இன்று மறக்கப்பட்டு விட்ட, பலர் அறிந்திருக்காத, “பிரோபிஜான்” என்ற பெயரிடப்பட்ட சோவியத் யூதர்களின் தாயகம், இன்று வரை நிலைத்து நிற்கின்றது. 70 வருடங்களுக்கு முன்னர், ரஷ்யாவின் ஆசியப்பகுதியில், ஸ்டாலின் வழங்கிய சைபீரிய நிலத்தில், பல்லாயிரக்கணக்கான சோவியத் யூதர்கள் சென்று குடியேறினார்கள்.
பல வருட உழைப்பின் பலனாக பிரோபஜான் நகரம் உருவாகியது. இன்று வரை யூதர்கள், தமது மொழி, கலாச்சார தனித்துவங்களை அந்தப் பிராந்தியத்தில் பேணி வருகின்றனர்.
அதனை இங்கே இணைக்கப்பட்டுள்ள ஆவணப்படத்தை பார்க்கும் போதே தெரியவரும்
விருந்தினர்


























