Archive for the ‘உலக செய்திகள்’ Category
எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இறுதி சுற்று தேர்தல் நடைபெறுகிறது
OurUmmah: எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் 498 ஆசனங்களுக்கான மூன்றாம் சுற்று தேர்தல் நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுற்று தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. இடம்பெற்ற இரண்டு சுற்றுத் தேர்தல்களிலும் இஸ்லாமிய கட்சிகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது. நீதிக்கும் சுதந்திரதிற்குமான கட்சி- கூட்டணியாக- 160 வரையான ஆசனங்களையும் அன் நூர் 83 வரையான ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது விரிவாக…
இமாம் யூசுப் அல் கர்ழாவியின் கண்டனம்
OurUmmah: நைஜீரியாவில் கிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச சர்வதேச ஜம்இயதுல் உலமா சபையின் தலைவரான கலாநிதி யூசுப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் யார் நடத்தினார்கள் என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது இதற்கு முன்னரும் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது அவை சில இஸ்லாமிய அமைப்புகள் அதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டபோதும் நாட்டின் இராணுவ உளவு அமைப்புதான் இதற்கு காரணம் என்று ஆதாரங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது விரிவாக..
ஹமாஸ் அரசியல் தலைவருக்கு இஹ்வான்களின் பலத்த வரவேற்பு
OurUmmah: பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.Video விரிவாக…..
எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரைய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. விரிவாக…
இந்திய முஸ்லிம்கள்:சிறுபான்மை ஒதுக்கீடு-ஆதரவும் எதிர்ப்பும்
BBC Tamil செய்தி :இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது. இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு Audio Read the rest of this entry »
இராணுவப் புரட்சி கிடையாது: பாக். இராணுவம்
பாகிஸ்தானின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்கப்போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று கூறி அவற்றை பாகிஸ்தானிய இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அஸ்பாக் கயானி நிராகரித்துள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கான சதி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று எச்சரித்திருந்தார். Read the rest of this entry »
எகிப்தின் அமைதியான தேர்தலும் ஆர்பாட்டமும்
OurUmmah: எகிப்து பாராளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்டம் நேற்று நாட்டின் ஒன்பது மாகாணங்களில் அமைதியான முறையில் தொடங்கி இன்றும் நடைபெற்றுள்ளது. ஜனவரி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான தேர்தல் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி முதல் கெய்ரோவில் நடந்து வரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் மோசமான முறையில் இராணுவத்தினால் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள் விரிவாக..
இன்று ஈராக்கில் இருந்து வெளியேறுவது அமெரிக்காவின் கடைசிப் பேய்யா ?
OurUmmah: ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு அழிவு நாசவேளை செய்துகொண்டிருந்த அமெரிக்க தாக்குதல் பேய்களின் கடைசி அணி இன்று ஈராக்கில் இருந்து வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது. ஆனால் ஈராக்கில் இன்னும் பல ஆயிரம் இராணுவ பிசாசுகள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது அந்த பேய்கள் இரண்டு முகாம்களில் சுமார் 4000 பேய்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. விரிவாக…
கொல்கத்தா மருத்துவமனை தீவிபத்து இதுவரை 89 பேர் பலி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ என்று அழைக்கப்படும் தனியார் மருத்துவமனையொன்றில் இன்று மாலை 3 .30 மணி அளவில் பெரிய அளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது . இந்த தீ விபத்தில் சிக்கி இது வரை 89 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Indian Hospital Fire Death Toll Rises to 89
ஈரான் கைப் பற்றியுள்ள அமெரிக்க உளவு விமானத்தின் காணொளி
ஈரானில் அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானமான அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானத்தை ஈரான் கைப்பற்றி அதன் காணொளியை அதன் தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்பியுள்ளது. ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளது.Video Read the rest of this entry »
போலியாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு நஷ்ட ஈடு !!
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மீதான குண்டு தாக்குதல் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது அந்த வழக்கில் இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது செய்யப்படுபவர்கள் பின்னர் அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. Read the rest of this entry »
“டிசம்பர் 6“ பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் வெற்றி விழாக்களும் , ஆர்பாட்டங்களும்
OurUmmah: பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் பூர்தியடைகின்றது. பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற பயங்கரவாத அமைப்பு “டிசம்பர் 6“ பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளை . விரிவாக…
எகிப்தின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 61 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது .விரிவாக…
ஈரான் அமெரிக்காவின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது
ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி தெரிவித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்த அமெரிக்க அதிகாரிகள் தமது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர் . கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரின் வான் பரப்பில் அத்துமீறி இழவு பார்த்த அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
பாகிஸ்தான் அமெரிக்க முரண்பாடு
பாகிஸ்தான் இராணுவம் காவலரண் மீதான நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கோர முடியாது என அமெரிக்கா உறுதியாகக் கூறியுள்ளது. அதேநேரம், அமெரிக்க நேட்டோ படை பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்கினால் மேலிடத்தி உத்தரவுக்கு காத்திருக்க தேவையில்லை பாகிஸ்தான் படை திருப்பி தாக்கலாம் பாகிஸ்தான் இராணுவ தளபதி தெரிவித்திருந்தார். Read the rest of this entry »
எகிப்தில் போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகளுக்கு 60 வீதமான வாக்குகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கற் கிழமை இடம்பெற்று முடிவுகள் இன்னும் உத்தியோக பூர்வமாக வெளிவராத நிலையில் எகிப்தின் முன்னணி ஊடகங்களும், தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சிகளும் தேர்தல் முடிவுகளை வெயிட்டு வருகின்றது. அவ்வாறு வெளிவந்துள்ள தகவல்களின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 60 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 15 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.விரிவாக….
மன்னிப்பு மட்டும் போதாது :பாகிஸ்தான் இராணுவம்
பாகிஸ்தானில் “நேட்டோ படை தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்’ என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் இராணுவம் மறுத்துள்ளது. Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்ற தேர்தல் முறை ஒரு சிறு பார்வை
அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah:எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது வெற்றி யாருக்கு?: எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் சர்வாதிகார ஆட்சி மக்கள் எழுச்சி மூலம் அகற்றப்பட்டது. தற்போது இராணுவ அதிகாரத்தின் கீழ் இடைக்கால நிர்வாகம் நிர்வாகத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் 50 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஆயிரத்துக்கும் அதிகமான தமது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர். அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சிக்கு பின்னர் பிராந்தியம் காணும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். துனூசியாவிலும் , மொரோகோவிலும் விரிவாக ..
நேட்டோ தாக்குதல் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு , விநியோகப் பாதை மூடப்பட்டது
பாகிஸ்தான் வடமேல் மாகாண இராணுவ காவலரண் ஒன்றின்மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் ஊடாக செல்லும் இராணுவ உதவி விநியோகத்தை நிறுத்தியுள்ளது. Read the rest of this entry »
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சி காணும் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல்
OurUmmah:மொரோகோவில் இன்று பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுகின்றது. மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் என்று முன்னர் இணக்கம் காணப்பட்டது. அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் அந்த பிராந்தியம் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். விரிவாக
ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் குற்றவாளிகள்
பல லட்சம் மனிதர்களை படுகொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகளை சுமந்துள்ளது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றங்களில் “crimes against peace” குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
வெளிச்சத்துக்கு வரும் போலி என்கவுண்டர்
இஷ்ரத்தின் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக தூக்கில் போடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் போலி என்கவுண்ட்டர் மூலம்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் இஷ்ரத்தின் குடும்பத்தினர் இவ்வாறு கூறியுள்ளனர். Read the rest of this entry »
எகிப்தில் மீண்டும் ‘ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டம்’
OurUmmah:எகிப்தில் எதிர் வரும் 28 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , எகிப்தின் இராணுவம் கட்டுப்பாட்டிலான இடைக்கால நிர்வாகத்தையும் இராணுவ நிர்வாகத்தையும் எதிரித்து மக்கள ஆர்ப்பாட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். ஆர்பாட்டத்தில் 33 பேர் உயிரிழந்ததுடன் 1500பேர் காயம் அடைந்துள்ளனர். இன்று ‘ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டம்’ ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எகிப்து செய்திகள தெரிவிக்கின்றது. விரிவாக
”அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை”
”அமெரிக்காவின் கரங்களை துண்டிக்க ஈரானுக்கு அணு குண்டு தேவையில்லை” என ஈரானின் ஜனாதிபதி அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிக்கும் சக்தியை நிலையை நெருங்கி விட்டதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் Read the rest of this entry »
குஜராத் முஸ்லிம் படுகொலைகளின் சாட்சி படுகொலை
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும், 2002 இல் நடந்த மதக்கலவரம் தொடர்பான சாட்சிகளில் ஒருவருமான நதீம் அஹமத் சயீத் என்பவர்நேற்று காலை அடையாளம் தெரியாதவர்களால் குத்தி படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.இவர் ஆமதாபாத்தில், ஜுகுபுரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகில் சயீத் படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »
மேற்கு ஏகாதிபத்தியம் ஈரானை தாக்க தயாராகின்றதா ?
OurUmmah:முஸ்லிம் நாடுகளில் மேற்கின் ஏகாதிபத்திற்கு கட்டுப்படாத முதுகெலும்புள்ள நாடாக ஈரான் பல துறைகளில் மேற்கின் பொருளாதார தடைகளையும் மீறி வளர்ந்து வருகின்றது. இஸ்ரேல் என்ற நாடு சட்டவிரோதமானது என்ற நிலைபாட்டில் மிகவும் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது. இதனால் மேற்கின் அடுத்த இலக்கு ஈரான் என்று பல ஆய்வளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர் விரிவாக…
யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை
பலஸ்தீனத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. யுனெஸ்கோ மன்றக் கூட்டம் பலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read the rest of this entry »
கருப்பு ஒக்டோபா
முஹம்மத் சரீப்
பாகம்-3: இந்நிலையில் 1991 ஜூலை 10 ஆம் திகதி ஆனையிரவு படைத்தளம் மீதான தாக்குதலை புலிகள் ஆரம்பித்திருந்தனர். முப்பத்தொரு நாற்கள் நடைபெற்ற இச்சண்டையில் 575க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருந்தனர். ஏறக்குறைய 1500 பேர் காயமடைந்திருந்தனர். இப்பெருமிழப்பினால் தமிழீழ கோரிக்கையை வலுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் பற்றி பல மாதங்களாக புலிகள் ஆராய்ந்து கொண்டிருந்தனர் . அந்தவேளையில்தான் 29.04.1992 அன்று பொலனறுவை மாவட்டத்திலுள்ள அழிஞ்சிபொத்தான கிராமம் தாக்கப்பட்டது. Read the rest of this entry »
கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்படப்போகும் காட்சிகள்
OurUmmah:லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி புரிந்து வந்த கடாபி, உயிருடன் பிடிக்கப்பட்ட பின்னர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். சர்வாதிகாரம் அழிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றுள்ளது. மேற்கு ஏகாதிபத்தியம் வழிகாட்டிய போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் லியியாவின் சாதாரண மக்கள்தான். இஸ்லாமிய தாகத்துடன் இருக்கும் அந்த மக்கள் எப்படி வழிகாட்டப்படபோகின்றார்கள்.Videos
கடாபி கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
லிபிய தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி போராளிகளினால் கொல்லப்பட்டமையை லிபிய தேசிய கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது. இவர் உயிருடன் பிடக்கப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். இவருடன் பல முக்கிய முன்னாள் அதிகாரிகளும் கொல்லபட்டுள்ளனர். இவரின் ஒரு மகன் பிடிபட்டுள்ள நிலையில் சைபுல் இஸ்லாம் தப்பி சென்றுள்ளதாக சர்வதேச Read the rest of this entry »
பலஸ்தீனில் கைதிகள் பரிமாற்றம் சற்று முன்னர் ஆரம்பித்துள்ளது
பலஸ்தீனில் கைதிகள் பரிமாற்றம் ஆரம்பித்துள்ளது ஹமாஸ் இஸ்ரேலின் வதை முகாம்களில் கைதிகளாக வதைபட்ட பலஸ்தீனர்களை வரவேற்க காஸாவில் இன்று பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. முதல் கட்ட பலஸ்தீனர்கள் விடுதலையில் 27 பெண் கைதிகளும் விடுவிக்கப்படவுள்ளனர். சற்றுமுன்னர் ஹமாஸின் பிடியில் இருந்த இஸ்ரேலிய சிப்பாய் எகிப்து நோக்கி அனுப்பப்பட்டுள்ளான். Read the rest of this entry »
முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு உதவ மறுக்கும் வெளிநாடுகள் !
வடக்கிலிருந்து புலிகள் வெளியேற்றிய முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய முற்படும்போது வெளிநாடுகள் நிதி வழங்குவதிலிருந்து விலகிக்கொள்ளும் நிலை காணப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மன்னார் மடு பிரதேசத்தில் உலகவங்கி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பஷில் ராஜபக்ஸ மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் நிம்மதியாக Read the rest of this entry »
பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் ராஜினாமா
பிரிட்டனின் பாதுகாப்புச் செயலர் லியம் ஃபாக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ஆலோசகரான ஆடம் வெரிட்டியுடன் பேணியிருந்த நட்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையால் அவர் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பதும் தெளிவற்றதாகிப்போக தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘நம்பிக்கை துரோகி… அரசியல் புரோக்கர்… மோடி ஜால்ரா!’ – ஹஸாரேவுக்கு எதிராக வெடித்தது எதிர்ப்பு
OurUmmah:ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் அன்னா ஹஸாரேவும் அவரது கோஷ்டியினரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அவரை ஆதரித்தவர்களில் பலரும் அவரை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
ஹஸாரே எங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டார் என்றும், ஹஸாரே ஒரு நம்பிக்கை துரோகி, அரசியல் புரோக்கர் என்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத் தளங்களில் எதிர்ப்புக் கருத்துக்களை அவரது ஆதரவாளர்களே வெளியிட்டு வருகின்றனர் விரிவாக
துருக்கி பிரதமர் ரஜப் தையூப் அர்துகானின் தாயார் வபாத்தானார்
OurUmmah:துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகானின் தாயாரான டெண்ஜிலே அர்துகான் தனது 88 டாவது வயதில் வபாத்தானார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று துருக்கியின் இஸ்தன்பூல் பாத்தி மஸ்ஜிதில் இடம்பெற்றுள்ளது.
அதில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளானர். உலகின் பல இடங்களில் அவருக்காக ஜனாஸா தொழுகை இடம்பெற்றுள்ளது சோமாலியா மக்களும் சோமாலியாவில் பல பிரதேசங்களில் ஜனாஸா தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்Pic,Video
ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்கு ஜனாதிபதி செயலகம் அனுதாபம்
பிரபல்ய அப்பிள் நிறுவன நிறுவுனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸின் உயிரிழப்பிற்கு ஜனாதிபதி செயலகம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, துறையில் ஸ்டீவ் ஜாப்ஸின் சிறந்த பங்கெடுப்பினையும் ஜனாதிபதி செயலகம் பாராட்டியுள்ளது. இவர் தனது 56 ஆறாவது வயதில் கேன்சர் காரணமாக உயிர் இழந்தார் என்பது குறிபிடத்தக்கது.
மோடிக்கு எதிராக இருந்த ஒரே சாட்சி கைது
இந்தியா குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இனவெறி வேட்டையை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி அம்மாநில காவல்துறைக்கு உத்திரவு வழங்கியதாக உச்சநீதிமன்றத்தில் சாட்சிப் பிரமாணம் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாதத்தை ஏற்கமறுக்கிறார் குஜராத் மாநிலத்ததின் முன்னாள் டி ஜி பி ஸ்ரீகுமார். நரேந்திரமோடிக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் வரை சென்று சாட்சியமளித்ததற்காகவே சஞ்சீவ் பட் பொய் வழக்கில் கைது Read the rest of this entry »
ஓபாமா: அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?
அஷ்ஷெய்க் எஸ் .எம் மஸாஹிம்(இஸ்லாஹி)
OurUmmah:பலஸ்தீன அபாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் திகதி கோரியுள்ளது அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளை கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது விரிவாக பார்க்க
சவூதி அரேபியாவில் பெண்களும் வாக்களிக்கலாமாம் !
சவூதி அரேபியாவில் அரசாங்க உயர் நிர்வாகங்களை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கபடவில்லை அங்கு மன்னர் ஆட்சி நடைபெறும் என்பதால் சிறிய அதிகாரம் குறைந்த அலகுகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கபட்டது அதில் ஆண்கள் பங்குகொள்ளும் நிலை தோன்றினாலும் பங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை தற்போது பெண்களும் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி முழுவதும் அதன் நிர்வாகம் எங்கும் மன்னர் குடும்பம் என்ற நிலைதான் இருக்கிறது. இஸ்லாத்தின் முக்கிய மக்கா, மதீனா தளங்களை கொண்டுள்ள Read the rest of this entry »
ஐநா பொதுச் சபையை அதிரவைத்த ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத்
ஏ.அப்துல்லாஹ்: ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் நியூயோர்க் ஐநா தலைமையகத்தில் உலக பொருளாதார அபிவிருத்தி பற்றி உரையாடியுள்ளார் இங்கு உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் உலகம் தொடர்பான இஸ்லாமிய கோட்பாட்டை முன்வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார்.
பொதுச் சபையை கேள்வி கணைகளினால் அதிரவைதுள்ளார். உலகம் புதிய ஒழுங்கு முறை ஒன்றுக்கு வரவேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று உரையை ஆரம்பித்தவர் Video Read the rest of this entry »
அன்னா ஹஸாரே யார் இந்த அன்னா ?
OurUmmah: அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே, அன்னா ஹஸாரே என்று இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பலர் எழுதினார்கள் எழுதுகின்றார்கள் ஏன் எங்கள் முஸ்லிம் ஊடகங்களும் அன்னா ஹஸாரே என்பவர் மனித சமூகத்தின் விடிவுக்கான உதயாமாகியுள்ள சூரியன் என்று சொல்லாமல் சொன்னார்கள் ஆனால் அவர் RSS பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதியாக செயல்பட்டுள்ளார் என்ற உண்மைகள் தற்போது வெளியாயுள்ளது.
ஹஸாரேவுக்கு இந்தியாவின் பல பிரதான ஊடகங்கள் மிகவும் முக்கிய இடத்தை வழங்கி மக்களின் உள்ளங்களில் அவரை உயர்ந்த மனிதராக பதிவு செய்யும் திட்டமிட்ட வேலைகளை விரிவாக
தமிழ்நாட்டை போன்று நாங்களும் தீர்மானம் நிறைவேற்றி அப்ஸல் குருவை விடுவிக்கலாமா?- கஷ்மீர்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கான மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று தமிழக சட்டசபை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியது. செப்டெம்பர் 9 ஆம் திகதி இத்தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுமுள்ளது. Read the rest of this entry »
லிபிய போராளிகள் தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றியுள்ளனர்
OurUmmah: லிபிய தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியிலுள்ள சதுக்கத்தினை -Libyan rebels in Tripoli’s central square- லிபிய போராளிகள கைப்பற்றியுள்ளனர் கடாபியின் ஆதிக்கம் எஞ்சியுள்ள பாப் அல் அஸிஸியா நகரை தவிர அனைத்து பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக போராளிகள தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன விரிவாக
ஆபிரிக்க தேசங்களில் வறட்சியால் பல்லாயிரக் கணகானவர்கள் மரணம்
ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, எத்தியோபியா, கென்யா போன்ற நாடுகளில் பெருமளவு பட்டினி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்தொகையானவர்கள் மரணம் அடைந்து வருகின்றனர். பட்டினி ஏற்பட தற்போதைய கடும் வறட்சியான காலநிலை பிரதான காரணமாகவுள்ளது மேலும் உள்நாட்டு போர், வேலையில்லா பிரச்சினை, சுத்தமான குடிநீர் இன்மை மற்றும் ஏனைய சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் இந்த பஞ்சம் மேலும் அதிகரித்துள்ளது. Read the rest of this entry »
துருக்கிய இராணுவத்தின் அதிகாரப் பற்கள் பிடுங்கப் படுகின்றது
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah:துருக்கியை சிவில் தேசமாக மாற்றும் போராட்டத்தில் மூன்றாவது தடவையாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ள துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான அரசு தொடர்ந்தும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது. துருக்கியின் அதிமுக்கிய நான்கு இராணுவ தளபதிகள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தாமாக இராஜினாமா செய்தார்கள் என்பதை விடவும் துருக்கி அரசாங்கம் அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது என்பதுதான் சரியானது. விரிவாக
ஒஸ்லோ தாக்குதலுக்கு பின்னால் Knights Templar
OurUmmah: நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் மத்திய பகுதியில் நடாத்தப்பட்ட குண்டு தாக்குதல்கள் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து 20 மையில் துரத்தில் அமைந்துள்ள தீவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்துள்ளனர். இவற்றுக்கு பின்னால் ஐரோப்பாவை இணைக்கும் கிஸ்தவ வலது சாரி பயங்கரவாதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக
நம்பிக்கை கொண்ட ஒருவன் ஒரு இலட்சம் பேரின் சக்திக்கு நிகரானவன்:ஓஸ்லோ குண்டு
OurUmmah:நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நேற்று மத்திய பகுதியில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் தலைநகர் பகுதியில் இருந்து சற்று தொலைவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் ஆகிய இரண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 91 பேர் கொல்லப்பட்துள்ளனர்.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் நிகழ்ந்த குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து உடோயா-Utoya.- தீவுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 84 பேர் கொல்லபட்டுள்ளனர். இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவும் இந்த சம்பவங்களுடன் தொடர்பு பட்ட வலது சாரி தீவிரவாத அமைப்பு ஒன்றின் கிஸ்தவ அடிப்படைவாதியான 32 வயதான ஆண்டெர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்-Anders Behring Breivik- விரிவாக
பாகிஸ்தானை முடிந்தவரை நிர்ப்பந்திப்போம்: ஹிலாரி
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பாகிஸ்தானை முடிந்தவரை நிர்ப்பந்திப்போம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் புது டில்லியில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியபின் இருவரும் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது ஹிலாரி தெரிவிக்கையில்;
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முதன்மையானதும் முன்னுரிமை அளிக்க வேண்டியதுமான பிரச்சினை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது. Read the rest of this entry »
அமெரிக்க இந்திய பேச்சில்
தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்கா முழுமையாகத் துணை நிற்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உறுதியளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவர் செவ்வாய் கிழமை காலை, இந்திய வெளியுறவு அமைச்சருடன் இரு நாடுகளுக்கிடையிலான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, இந்தியா – அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை அமல்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல், தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை வற்புறுத்துதல், Read the rest of this entry »
மும்பை குண்டு வெடிப்பு – ஆர்.எஸ்.எஸ் க்கு தொடர்பு?
மும்பையில் மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இது வரை 19 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மும்பை குண்டு வெடிப்பு குறித்து தீவிரவாத தடுப்பு படை மற்றும் மும்பை காவல் துறை புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் – இந்து பயங்கரவாத அம்மைப்பு- இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்றும் தீவிரவாத நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் திக் விஜய்சிங்.விரிவாக Read the rest of this entry »
சீனா பாகிஸ்தான் உறவு மேலும் வலுப்பெறும் வாய்ப்பு
பாகிஸ்தானுக்கு அமெரிக்க வழங்கி வரும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஒபாமா நிர்வாகத்திற்கும் பாகிஸ்தானுக்குமான உறவுகளில் ஏற்பட்டுவரும் விரிசல்களை காட்டுவதாக பார்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் உஸாமா இருப்பிடம் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய தாக்குதல், அமெரிக்கப் படையினரின் இரகசிய ட்ரோன் விமான தாக்குதல்கள், அமெரிக்கா பாகிஸ்தான் தேசத்தில் அளவு கடந்த சுதந்திரத்துடன், அடாவடித்தனமாக பாகிஸ்தானின் இறைமையை மீறி செயல்படுகின்றமை போன்றவை பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரிதும் தாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. விரிவாக Read the rest of this entry »
அமெரிக்காவை விசாரணை நடத்தக் கோரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
அமெரிக்காவில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப் பட்டவர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ், முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ் பீல்ட், சீ.ஐ.ஏ. பணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையாயின் ஜோர்ஜ். புஷ் காலத்தில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் உரிமைகள் மீறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகம் மேற்கொள்ளவேண்டுமெனவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது விரிவாக Read the rest of this entry »
“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”
எஸ்.எம்.எம்.பஷீர்
“நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் நேரு மென்று நினைத்திடல் வேண்டா” – சுப்ரமணிய பாரதி – புலிகளின் யுத்த பயிற்சி கையேடு பல தரப்பட்ட படையணிகளையும் அதற்க்கான பயிற்சி பொறிமுறைகளையும் கொண்டிருந்தது சகலரும் அறிந்ததே.
அவ்வாறான யிற்சிகளையும் தாக்குதல்களையும் நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களின் கீழ் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வெளியிட்ட கையேட்டில் மிகக் கவனமாக தலைமைத்துவத்தை போற்றும், அத்தலைமைத்துவத்தின் கீழ் கட்டுப்படும் “போராளிகள்’ எதனை தலைமைத்துவத்திடம் எதிர்பார்க்கலாம் எவ்வாறு தலைமைத்துவத்துக்கு பக்தியோடு இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் புலிகளின் “வழிகாட்டி” (Guidelines) கூறுகிறது. ஆனால் மிகக் கவனமாக அவ்வழிகாட்டியின் (கையேட்டின்) தலைமைத்துவம் பற்றிய தலைப்பு மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »
வெதுப்பகத்தில் தனது குழந்தையை போட்டு கொலை செய்த அமெரிக்கத் தாய்
ஏ.அப்துல்லாஹ்:அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தின் சாக்ரமென்டோ நகரில் ஒரு தாய் தனது குழந்தையை மைக்ரோவேவ் அவனில் -வெதுப்பகத்தில்- வைத்து மூன்றாவது டிக்ரீ – 3rd degree burn- வரை வெதும்ப செய்யது கொலை செய்துள்ளார். தான் பெற்று 6 வாரங்களே ஆன தனது குழந்தை அழுது கொண்டே இருந்த காரணத்தால் மைக்ரோவேவ் வெதுப்பகத்தில் போட்டு கொலை செய்துள்ளார் இந்த கொலை அமெரிக்காவில் அறியப்பட்ட மூன்றாவது மைக்ரோவேவ் வெதுப்பக குழந்தை படுகொலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு காரணமான தனது நண்பர் தொடர்பை துண்டித்தமையால் குழந்தையின் அருமை தாய் இந்த நாகரீக ! முடிவை எடுத்துள்ளார். 29 வயதான கா யேன்ங். என்ற இந்த அமெரிக்க பெண் தற்போது கைதாகியுள்ளார் கடந்த மார்ச் 17ஆம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது விரிவாக Read the rest of this entry »
துருக்கியில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெருகின்றது
OurUmmah:துருக்கியில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுகொண்டிருகின்றது. இதில் ஐந்து கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டாவது தடவையாகவும் ஆட்சியில் இருக்கும் இஸ்லாமிய பின்னியை கொண்டுள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான -Justice and Development – கட்சி மீண்டும் இன்று நடை பெரும் தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும் என்று துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றது.
இன்று காலை 7.00 மணி தொடக்கம் நடை பெற்றுவரும் வாக்களிப்பில் மக்கள் மிகவும் உச்சாகத்துடன் பங்குபற்றி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது துருக்கி பிரதமர் ரஜப் தையிப் அர்பகான் தலைமயிலான அரசாங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் செய்து வரும் பொருளாதார அபிவிருத்தி துருக்கியை உலகின் முன்னணி நாடாக உலக அரங்கில் நிறுத்தியுள்ளது விரிவாக









