Archive for the ‘உலக செய்திகள்’ Category
அல் குர்ஆன் பிரதிகளை எரித்த அமெரிக்க படைக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இன்று ஏழுபேர் வபாத்
ஆப்கானிஸ்தானி இன்று இடம்பெற்ற அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஆப்கான் கர்சாய் படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏழு பேர் வபாத்தாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read the rest of this entry »
பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை
மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த ஷெல் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.Video Read the rest of this entry »
யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு
OurUmmah: நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது. விரிவாக …
அத்னானை விடுவிக்க ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இணக்கம் !!
OurUmmah: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் -administrative detention-விசாரணை இல்லாமல் சிறையில் வதைக்கப்பட்டு வந்த பலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் Special Rapporteur on the situation of human rights in the Palestinian territories occupied since 1967.விரிவாக….
ஈரானை இப்போது தாக்கவேண்டாமாம் இஸ்ரேலை கோரும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
மேற்கு மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் மோதும் நிலை அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது . ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும், மேற்கும் களமிறங்கியுள்ள இந்த நிலையில் ஈரான் இரண்டு போர்க் கப்பல்களை சுவஸ் கால்வாயின்-Suez Canal- ஊடாக சிரியா தார்தூஸ் துறைமுகத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் ஈரான் தானும் எதற்கும் தயார் என்று தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்
எம்.ஐ.எம்.முஹிதீன்
கடந்த ஜனவரி மாதம் 21 திகதி நாம் பதிவு செய்திருந்த இந்த ஆக்கத்தை மீண்டும் இன்று பதிவு செய்கிறோம்: *கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இஸ்ரேலிய வதைமுகாமில் உண்ணாவிரதம் : நாட்கள் 63
ஏ. அப்துல்லாஹ் : இஸ்ரேல் வதைமுகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலஸ்தீன் விடுதலைப் போராளி அத்னான் என்பவருக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் மேற்கு கரையிலும், ராமல்லாவிலும் பேரணிகள் நடத்தியுள்ளனர். விசாரணை இல்லாமல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வதைமுகாமில் அடைக்கப்பட்டுள்ள 33 வயதான காதர் அத்னான் 63 தினங்களாக வதை முகாமில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். Read the rest of this entry »
இந்திய முஸ்லிம்கள 10 வீத தனி இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 14.02.12 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Video Read the rest of this entry »
இஸ்ரேலிய தூதரக வாகன குண்டு வெடிப்பு : ஊடக பரப்புரைகள் ஆரம்பம்
இஸ்ரேல், அமெரிக்கா அதன் நேசநாடுகள் ஈரானை குறிவைத்து அரசியல் இராணுவ நகர்வுகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்தியாவிலும், ஜோர்ஜியாவிலும், இஸ்ரேலிய தூதரக வாகனங்களை இலக்கு வைத்து இரு குண்டுத் தாக்குதல் முயற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேற்குலக ஊடகங்களில் ஈரானை தெளிவான பயங்கரவாதிதான் என்று சித்தரிக்கும் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்து இழுத்து செல்லப்பட்டார்
இணைப்பு-2: மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு வீதி ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். Video Read the rest of this entry »
சட்டப் பேரவையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த அமைச்சர்கள் ராஜினாமா
கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அமைச்சர்கள் லக்ஷ்மன் சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர் ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப்படுத்தின. Read the rest of this entry »
மாலைத்தீவில் துணை ஜனாதிபதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்பு
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் பதவி விலகியதை அடுத்து மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். Read the rest of this entry »
ஈரானை இஸ்ரேல் தாக்கும் சாத்தியம் ?
ஈரானைத் தாக்க முயற்சிக்கவோ அல்லது அதன் அணுத்திட்டத்தி்ற்கு எதிராக தடைகளை விதிக்கவோ கூடாது என்று ஈரானின் அதியுயர் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தம்மை அச்சுறுத்துவதோ அல்லது தம்மீது தாக்குதல் நடத்துவதோ அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தலாகவே வந்துமுடியும் என்றும் ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா அல் கமேய்னி கூறியுள்ளார். Read the rest of this entry »
குவைத் பாராளுமன்றத்தை இஸ்லாமிய அரசியல் கட்சி கைப்பற்றியுள்ளது
OurUmmah: குவைத்தில் நேற்று இடம்பற்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது , கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து அதன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றது . இதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது மொத்தமாக 50 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 34 ஆசனங்களை இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி விரிவாக…
ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூனின் துரோகம்
OurUmmah: அமெரிக்காவின் கைப்பாவை என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கீமூன், காஸா பகுதிக்கு சென்றபோதும் அங்கு இஸ்ரேலிய வதை முகாம்களில் வைக்கபட்டுள்ள கைதிகளின் உறவினர்களையும் ,இஸ்ரேலிய சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களையும் சந்திக்க மறுத்துள்ளதுடன் அந்த வதையுறும் மக்களின் எந்த பிரதிநிதியையும் தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதியையும் மறுத்துள்ளார். விரிவாக …
எகி்ப்து மக்கள் எழுச்சி ஏற்படுத்தாத இழப்பை விளையாட்டு ஏற்படுத்தியுள்ளது !!
OurUmmah: எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாள் துக்க தினம் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது எகி்ப்து நாட்டில் உதைபந்தாட்ட போட்டியின் போது இடம்பெற்ற மோதலி்ல் காரணமாக 74 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் விரிவாக…
சில நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்: ஈரான்
“சில நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்’ என, ஈரான் எண்ணெய் வள அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் எண்ணெய் வள அமைச்சர் ருஸ்தும் கசொமி அளித்த பேட்டியில்,”சில நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எண்ணெய் நிறுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவை எந்த நாடுகள் என அவர் குறிப்பிடவில்லை. கடந்த 23 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது Read the rest of this entry »
அமீர்கான்: சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை
இந்திய முஸ்லிம் வாலிபன் அமீர்கான்: எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி Read the rest of this entry »
உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்
OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள் விரிவாக….
ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குத்தான் பாதிப்பு: ஐ.எம்.எப்
ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குதான் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு சக்தி திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் மேற்குலக நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் Read the rest of this entry »
மக்கள் எழுச்சியின் பின்னர் முதல் முறையாக எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு
இணைப்பு-2 எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும் மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video Read the rest of this entry »
தடை தாண்டுமா ஈரான்
மேற்கு நாடுகள் ஈரான் மீது ”அமெரிக்காவின் வழிகாட்டலிலும் இஸ்ரேலின் தூண்டளினாலும்” மற்றுமொரு பொருளாதார தடையை விதித்துள்ளது , அந்த பொருளாதர தடை அறிவிப்பில் மேற்கு நாடுகள் ஈரானிடமிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது . ஆனால் ஈரான் பொருளாதார தன்னிறைவை கொண்ட நாடு அதனால் ஈரானை இந்த தடை பாதிக்க போவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அமெரிக்காவும் , இஸ்ரேலும் ஐரோப்பிய நாடுகளில் Read the rest of this entry »
இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?
OurUmmah: ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது. இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர். விரிவாக….
பாகிஸ்தான் அரச மற்றும் இராணுவ முறுகல் நிலை
பாகிதான் பாதுகாப்புச் செயலரின் பதவி நீக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாகிதான் இராணுவம் கூறியுள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கிறது. இருந்தாலும் நாட்டில் இராணுவப் புரட்சியின் மூலம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. Read the rest of this entry »
ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை
OurUmmah: ஈரானில் மற்றுமொரு அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ளார் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அணு விஞ்ஞானிகள் படுகொலை வரிசையில் மற்றுமொரு அணுத்துறை விஞ்ஞானி கார் குண்டின் மூலம் கொல்லப்பட்டுள்ளார். ஈரான் நதான்ஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள யுரேனிய செறிவாக்கல் மையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி முஸ்தபா அஹ்மதி ரோஷன் இன்று படுகொலைச் செய்யப்பட்துள்ளார். விரிவாக….
சல்மான் ருஷ்டிக்கு தடை இல்லை: இந்திய மத்திய அரசு
சர்ச்சைக்குரிய வியாபர எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இந்திய வருகையை தடைச்செய்ய இயலாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வியாபர எழுத்தாளர் என்று பெயர் பெற்ற சல்மான் ருஷ்டியிடம் வம்சாவழியை சார்ந்தவர்களுக்கு அளிக்கும் பெர்ஸன் ஒப் இந்தியன் அனுமதி இருப்பதால் இத்தகைய அனுமதி அட்டையை வைத்திருப்பவர்களுக்கு Read the rest of this entry »
எகிப்தில் மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும் அன் நூர் கட்சி ஆகியன 62.2.வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்று எகிப்தின் தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது . இது தவிர மற்றுமொரு இஸ்லாமிய கட்சியான அல் வசத் என்ற கட்சி 2 வீதமான வாக்குகளை கைப்பற்றியுள்ளது.விரிவாக…
எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான இறுதி சுற்று தேர்தல் நடைபெறுகிறது
OurUmmah: எகிப்தில் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் 498 ஆசனங்களுக்கான மூன்றாம் சுற்று தேர்தல் நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பமாகி இன்றும் இடம்பெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு சுற்று தேர்தல்கள் முடிவுற்றுள்ளது. இடம்பெற்ற இரண்டு சுற்றுத் தேர்தல்களிலும் இஸ்லாமிய கட்சிகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியுள்ளது. நீதிக்கும் சுதந்திரதிற்குமான கட்சி- கூட்டணியாக- 160 வரையான ஆசனங்களையும் அன் நூர் 83 வரையான ஆசனங்களையும் கைப்பற்றி உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது விரிவாக…
இமாம் யூசுப் அல் கர்ழாவியின் கண்டனம்
OurUmmah: நைஜீரியாவில் கிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச சர்வதேச ஜம்இயதுல் உலமா சபையின் தலைவரான கலாநிதி யூசுப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள் யார் நடத்தினார்கள் என்பது தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றது இதற்கு முன்னரும் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது அவை சில இஸ்லாமிய அமைப்புகள் அதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டபோதும் நாட்டின் இராணுவ உளவு அமைப்புதான் இதற்கு காரணம் என்று ஆதாரங்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது விரிவாக..
ஹமாஸ் அரசியல் தலைவருக்கு இஹ்வான்களின் பலத்த வரவேற்பு
OurUmmah: பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.Video விரிவாக…..
எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரைய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. விரிவாக…
இந்திய முஸ்லிம்கள்:சிறுபான்மை ஒதுக்கீடு-ஆதரவும் எதிர்ப்பும்
BBC Tamil செய்தி :இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது. இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு Audio Read the rest of this entry »
இராணுவப் புரட்சி கிடையாது: பாக். இராணுவம்
பாகிஸ்தானின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்கப்போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று கூறி அவற்றை பாகிஸ்தானிய இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அஸ்பாக் கயானி நிராகரித்துள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கான சதி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று எச்சரித்திருந்தார். Read the rest of this entry »
எகிப்தின் அமைதியான தேர்தலும் ஆர்பாட்டமும்
OurUmmah: எகிப்து பாராளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்டம் நேற்று நாட்டின் ஒன்பது மாகாணங்களில் அமைதியான முறையில் தொடங்கி இன்றும் நடைபெற்றுள்ளது. ஜனவரி 11 ஆம் திகதி பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான தேர்தல் முடிவடைகிறது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி முதல் கெய்ரோவில் நடந்து வரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மிகவும் மோசமான முறையில் இராணுவத்தினால் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள் விரிவாக..
இன்று ஈராக்கில் இருந்து வெளியேறுவது அமெரிக்காவின் கடைசிப் பேய்யா ?
OurUmmah: ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு அழிவு நாசவேளை செய்துகொண்டிருந்த அமெரிக்க தாக்குதல் பேய்களின் கடைசி அணி இன்று ஈராக்கில் இருந்து வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றுள்ளது. ஆனால் ஈராக்கில் இன்னும் பல ஆயிரம் இராணுவ பிசாசுகள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது அந்த பேய்கள் இரண்டு முகாம்களில் சுமார் 4000 பேய்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. விரிவாக…
கொல்கத்தா மருத்துவமனை தீவிபத்து இதுவரை 89 பேர் பலி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ என்று அழைக்கப்படும் தனியார் மருத்துவமனையொன்றில் இன்று மாலை 3 .30 மணி அளவில் பெரிய அளவில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது . இந்த தீ விபத்தில் சிக்கி இது வரை 89 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.Indian Hospital Fire Death Toll Rises to 89
ஈரான் கைப் பற்றியுள்ள அமெரிக்க உளவு விமானத்தின் காணொளி
ஈரானில் அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானமான அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானத்தை ஈரான் கைப்பற்றி அதன் காணொளியை அதன் தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்பியுள்ளது. ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளது.Video Read the rest of this entry »
போலியாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு நஷ்ட ஈடு !!
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மீதான குண்டு தாக்குதல் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது அந்த வழக்கில் இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது செய்யப்படுபவர்கள் பின்னர் அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. Read the rest of this entry »
“டிசம்பர் 6“ பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள் வெற்றி விழாக்களும் , ஆர்பாட்டங்களும்
OurUmmah: பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 ஆண்டுகள் இந்த டிசம்பர் 6 ஆம் திகதியுடன் பூர்தியடைகின்றது. பாபர் மஸ்ஜித் டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற பயங்கரவாத அமைப்பு “டிசம்பர் 6“ பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளை . விரிவாக…
எகிப்தின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளது அந்த முடிவின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 61 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 13.4 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றது .விரிவாக…
ஈரான் அமெரிக்காவின் இரண்டாவது உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது
ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா இராணுவத்தின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் பாதுகாப்பு விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக அந்நாட்டு அராபிக் அல்-அலாம் தொலைக் காட்சி தெரிவித்துள்ளது . இது தொடர்பாக கருத்துரைத்த அமெரிக்க அதிகாரிகள் தமது ஆளில்லா உளவு விமானம் ஒன்றை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர் . கடந்த ஜூலை மாதம் ஈரானின் கூவாம் நகரின் வான் பரப்பில் அத்துமீறி இழவு பார்த்த அமெரிக்க உளவு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »
பாகிஸ்தான் அமெரிக்க முரண்பாடு
பாகிஸ்தான் இராணுவம் காவலரண் மீதான நேட்டோ தாக்குதல் விவகாரத்தில், பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கோர முடியாது என அமெரிக்கா உறுதியாகக் கூறியுள்ளது. அதேநேரம், அமெரிக்க நேட்டோ படை பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்கினால் மேலிடத்தி உத்தரவுக்கு காத்திருக்க தேவையில்லை பாகிஸ்தான் படை திருப்பி தாக்கலாம் பாகிஸ்தான் இராணுவ தளபதி தெரிவித்திருந்தார். Read the rest of this entry »
எகிப்தில் போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகளுக்கு 60 வீதமான வாக்குகள்
M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த திங்கற் கிழமை இடம்பெற்று முடிவுகள் இன்னும் உத்தியோக பூர்வமாக வெளிவராத நிலையில் எகிப்தின் முன்னணி ஊடகங்களும், தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சிகளும் தேர்தல் முடிவுகளை வெயிட்டு வருகின்றது. அவ்வாறு வெளிவந்துள்ள தகவல்களின் படி எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்காக போட்டியிட்ட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் 60 வீதமான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் லிபரல்வாத கட்சி 15 வீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.விரிவாக….
மன்னிப்பு மட்டும் போதாது :பாகிஸ்தான் இராணுவம்
பாகிஸ்தானில் “நேட்டோ படை தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும்’ என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் இராணுவம் மறுத்துள்ளது. Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்ற தேர்தல் முறை ஒரு சிறு பார்வை
அஷ்ஷெய்க் எஸ்.எம். மஸாஹிம் (இஸ்லாஹி)
OurUmmah:எகிப்தில் பாராளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது வெற்றி யாருக்கு?: எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் சர்வாதிகார ஆட்சி மக்கள் எழுச்சி மூலம் அகற்றப்பட்டது. தற்போது இராணுவ அதிகாரத்தின் கீழ் இடைக்கால நிர்வாகம் நிர்வாகத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் 50 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஆயிரத்துக்கும் அதிகமான தமது வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளனர். அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சிக்கு பின்னர் பிராந்தியம் காணும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். துனூசியாவிலும் , மொரோகோவிலும் விரிவாக ..
நேட்டோ தாக்குதல் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு , விநியோகப் பாதை மூடப்பட்டது
பாகிஸ்தான் வடமேல் மாகாண இராணுவ காவலரண் ஒன்றின்மீது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பாகிஸ்தான் ஊடாக செல்லும் இராணுவ உதவி விநியோகத்தை நிறுத்தியுள்ளது. Read the rest of this entry »
அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சி காணும் இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல்
OurUmmah:மொரோகோவில் இன்று பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுகின்றது. மொரோகோவில் அரசியல் கட்சிகளுக்கும் ஆளும் மன்னர் தரப்புக்கும் இடையிலான உடன்பாட்டை அடுத்து ஏற்பட்ட முடிவுகளின் படி நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் என்று முன்னர் இணக்கம் காணப்பட்டது. அரபு முஸ்லிம் மக்கள் எழுச்சியின் பின்னர் அந்த பிராந்தியம் சந்திக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும். விரிவாக
ஜோர்ஜ் புஷ், டொனி பிளேயர் குற்றவாளிகள்
பல லட்சம் மனிதர்களை படுகொலை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகளை சுமந்துள்ளது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோர் சமாதானத்துக்கு எதிரான குற்றங்களில் “crimes against peace” குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
வெளிச்சத்துக்கு வரும் போலி என்கவுண்டர்
இஷ்ரத்தின் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக தூக்கில் போடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இஷ்ரத் உள்ளிட்ட நான்கு பேரும் போலி என்கவுண்ட்டர் மூலம்தான் கொல்லப்பட்டுள்ளனர் என்று எஸ்.ஐ.டி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால் இஷ்ரத்தின் குடும்பத்தினர் இவ்வாறு கூறியுள்ளனர். Read the rest of this entry »
எகிப்தில் மீண்டும் ‘ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டம்’
OurUmmah:எகிப்தில் எதிர் வரும் 28 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , எகிப்தின் இராணுவம் கட்டுப்பாட்டிலான இடைக்கால நிர்வாகத்தையும் இராணுவ நிர்வாகத்தையும் எதிரித்து மக்கள ஆர்ப்பாட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். ஆர்பாட்டத்தில் 33 பேர் உயிரிழந்ததுடன் 1500பேர் காயம் அடைந்துள்ளனர். இன்று ‘ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டம்’ ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எகிப்து செய்திகள தெரிவிக்கின்றது. விரிவாக









