Archive for the ‘உலக செய்திகள்’ Category
எகிப்து “பூர் ஸஈத்” (portsaid) வழக்கில் 21 பேருக்கு மரண தண்டனை.
இர்பான் ஷிஹாபுத்தீன் (இஸ்லாஹி)
சென்ற வருடம் “பூர் ஸஈத்” மற்றும் “அஹ்லி” இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற உதைப்பந்தாட்டப் போட்டியின் போது பூர் ஸஈத் ஆதரவாளர்களினால் 73 அஹ்லி ஆதரவாளர்கள் பரிதாமான முறையில் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து பூர் ஸஈத் மாவட்டத்தில் Read the rest of this entry »
காஸா மீதும் சூடான் மீதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தாக்குதல்
ஏ.அப்துல்லாஹ்: இஸ்ரேலிய விமாங்கள் சூடான் தலைநகர் காட்மண்டுவில் அமைந்துள்ள ஆயுத தொழில்சாலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. என சூடான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக கருது வெளியிட்ட சூடான் கலாசார ,மற்றும் தகவல் அமைச்சர் Read the rest of this entry »
கட்டார் தலைவரின் விஜயத்தால் கடுப்பாகியுள்ள இஸ்ரேல்
ஏ.அப்துல்லாஹ்: கட்டார் தலைவர் ஷேக் ஹமாத் பலஸ்தீனில் ஹமாஸ் நிர்வாகத்தில் இருக்கும் காஸாவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டு அங்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை ஹமாஸ் நிர்வாகத்துக்கு வழகியமை தொடர்பாக இஸ்ரேல் கடுப்பாகியுள்ளது.Video Read the rest of this entry »
‘முற்றுகையை நீங்கள் இன்று அதிகாரபூர்வமாக உடைத்துள்ளீர்கள்’: ஹனியா
ஏ.அப்துல்லாஹ்: காஸாவுக்கு எகிப்தின் ரfபாஹ் எல்லையின் ஊடாக வந்த கட்டார் நாட்டின் தலைவர் (அமீர்) ஷேக் ஹமாத்தை காஸா ஹமாஸ் நிர்வாகத்தின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா மற்றும் ஹமாஸ் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர். அங்கு அபிவிருத்தி பணிகளை Read the rest of this entry »
5700 கி.மீ கால்நடையாக 07 நாடுகள் கடந்து 314 நாட்களில் மக்கா வந்துள்ள பொஸ்னியர்
ஏ.அப்துல்லாஹ்: பொஸ்னியாவை சேர்ந்த 47 வயதான சனாத் ஹாத்சிக் என்பவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பொஸ்னியாவில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற கால்நடை பயணமாக புறப்பட்ட இவர் 314 நாட்களில் 5700 கிலோ மீட்டார்கள் பொஸ்னியா , சேர்பியா , பல்கேரியா , துருக்கி , சிரியா , ஜோர்டான் ஆகிய நாடுகளில் ஊடாக நடந்துமக்காவை கடந்த சனிக்கிழமை வந்தடைந்துள்ளார். Read the rest of this entry »
கட்டார் அமீர் ஷேக் ஹமாத் காஸா விஜயம் ‘அரசியல் முற்றுகையை உடைக்கும் முதல் அரபு தலைவர்’
ஏ.அப்துல்லாஹ் : கட்டார் நாட்டின் தலைவர் (அமீர்) ஷேக் ஹமாத் பின் கலீபா அல் அல்தானி, இன்று பலஸ்தீனில் ஹமாஸ் நிர்வாகத்தில் இருக்கு காஸாவுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தை மேற்கொள்கிறார். கட்டார் நாட்டின் 254 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான Read the rest of this entry »
ஜெருசலம் மக்கள் தொகையை மாற்றியமைப்பதில் பென்ஜமின் நெதன்யாஹூ பிடிவாதம்
ஏ.அப்துல்லாஹ்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு ஜெருசலதையும் முஸ்லிம்களிடம் இருந்து முழுமையாக அபகரிக்கும் திட்டத்தை வேகப்படுத்தியுள்ளது. கிழக்கு ஜெருசலத்தில் புதிதாக 797 புதிய குடியிருப்பு தொகுதிகளையும் ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான கல்லூரியையும் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. Read the rest of this entry »
ஹஜ்ஜு பெருநாள் நாட்களில் சிரியாவில் யுத்த நிறுத்தத்துக்கான அழைப்பு
ஏ.அப்துல்லாஹ் : இன்று வெள்ளிக்கிழமை துருக்கி வெளிநாட்டு அமைச்சர் அஹ்மெட் - Ahmet Davutoğlu- சிரியாவில் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் ஹஜ்ஜு பெருநாள் நாட்களில் Read the rest of this entry »
அர்துகான், அஹமத் நஜாத் திடீர் சந்திப்பு ‘மூன்று வழி பேச்சு’ என்ற பொறிமுறை முன்மொழிவு
M.ரிஸ்னி முஹம்மட்: துருக்கி பிரதமர் அர்துகான் யுத்தத்தினால் சீரழிந்து போகும் சிரியாவில் இரத்த களறியை முடிவுக்கு கொண்டுவர ‘மூன்று வழி பேச்சு’ என்ற பொறிமுறை ஒன்றை தீர்வுக்காக இன்று முன்மொழிந்துள்ளார். துருக்கி பிரதமர் அர்துகான் நேற்று ஈரான் ஜனாதிபதி அஹமத் நஜாத்தை திடீர் என்று சந்தித்து பேசியுள்ளார். Read the rest of this entry »
இரும்பு பாதுகாப்பு அரணை உடைத்து இஸ்ரேலுக்குல் ஆழ ஊடுருவிய ஹிஸ்புல்லாஹ்வின் விமானம்
ஏ.அப்துல்லாஹ் : லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேலுக்குல் நூற்றுகணக்கான மையில்கள் எந்த அதிநவீன ரேடார்களுக்கும் சிக்காமல் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) அனுப்பியுள்ளமை இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் இணைந்து இஸ்ரேலில் உருவாக்கியுள்ள இரும்பு அரண் video Read the rest of this entry »
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை காஸா மீது கனரக தாக்குதல்களை நடத்திவருகிறது
ஏ.அப்துல்லாஹ்: இஸ்ரேல் பலஸ்தீன காஸா பிராந்தியத்தின் மீது விமான மற்றும் கனரக மோட்டார் குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் நேற்றும் விமான தாக்குதலை மேற்கொண்டு காஸா பிராந்தியத்தில் ஒருவரை கொன்றுள்ளதுடன் சிறுவர், சிறுமியர் உட்பட ஒன்பது பேரை படுகாயப்படுத்தியுள்ளது. இன்று Read the rest of this entry »
சிரிய பிராந்தியத்தின் மீது ஆறாவது நாளாக துருக்கி தாக்குதல்
ஏ.அப்துல்லாஹ்: துருக்கி ஆறாவது நாளாக இன்றும் சிரியா மீது சிறிய ரக மோட்டார் தாக்குதலை நடத்தியுள்ளது. துருக்கிய கிராமமொன்றில் சிரியாவின் மோட்டார் குண்டொன்று வெடித்ததற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே துருக்கி மேற்படி தாக்குதல்களை நடத்தி வருகிறது. Read the rest of this entry »
துருக்கி:கட்சியின் மாநாட்டில் பிரதமர் அர்துகான் , ஜனாதிபதி முர்ஸி, ஹமாஸ் தலைவர் உரை
M.ரிஸ்னி முஹம்மட்: இஸ்லாமிய பின்புலத்தை கொண்ட துருக்கியை ஆளும் நீதிக்கும் ,அபிவிருத்திக்குமான கட்சியின் மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் இடம்பெற்றுள்ளது .அதில் துருக்கி பிரதமர் ரஜப் தையூப் அர்துகான் உரையாற்றியுள்ளார். அந்த மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார் . Read the rest of this entry »
ஒஸ்கார் விழாவை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவிப்பு
முஸ்லிம்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தை கண்டித்து ஒஸ்கார் விருது விழாவை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது.முஹம்மது நபியை கேவலமாக சித்தரித்து அமெரிக்காவில் வெளியான திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. Read the rest of this entry »
நபிகள் குறித்த படத்துக்கு எதிராக போராட்டம் தொடர்கிறது
BBC Tamil: இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது நபியைத் தவறாக சித்தரித்திருப்பதாகக்கூறப்படும் ஆங்கிலத் திரைப்படத்திற்கெதிராக நான்காவது நாளாக இன்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 21 முஸ்லீம் அமைப்புக்கள் இணைந்து Read the rest of this entry »
மேற்கின் இரட்டை நிலைப்பாட்டால் உலகம் பூராவும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகிறது
ஏ.அப்துல்லாஹ்: மனிதர்களுக்கான இறைவனின் இறுதித் தூதரை மிக மோசமான முறையில் அவதூறுக்கு உட்படுத்தி அமெரிக்காவில் தயாரிக்கப் பட்ட திரைப்படத்துக்கு எதிராகவும் , அமெரிக்கா குறித்த திரைப்படத்தை தடை செய்யாமையை கண்டித்தும் இன்று வெள்ளிகிழமை உலகின் பல நாடுகில் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகிறது. Read the rest of this entry »
யூசுப் அல் கர்ழ்தாவி இறுதித் தூதருக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபடுமாறு அழைப்பு
ஏ.அப்துல்லாஹ்: அல்லாஹ்வின் இறுதித் தூதர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அவதூறுகளை கண்டித்தும் இறுதித் தூதருக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (14.09.2012) ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபடுமாறு சர்வதேச ஜம்இயதுல் உலமாவின் தலைவர் அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி அழைப்பு வித்துள்ளார். Read the rest of this entry »
லிபியாவின் புதிய பிரதமராக முஸ்தபா அபூ ஷக்கூர்
முஹம்மட் அம்ஹர்: லிபியாவின் புதிய பிரதமராக முஸ்தபா அபூ ஷக்கூர் புதிய லிபிய பாராளுமன்ற உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . கடாபிக்கு ௭திராக கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் ௭ழுச்சியைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக சேவையாற்றிய Read the rest of this entry »
திரைப்படத்துக்கு பின்னால் அமெரிக்க சியோனிச அரசியல் அமுக்க சக்திகள்
முஹம்மட் அம்ஹர்: இறைவனின் இறுதித் தூதரை மிகக் கேவலமாக விமர்சிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகளாவிய அளவில் பாரிய எதிர்ப்பு வலுத்து வருகிறது. இன்று வெள்ளிகிழமை உலகில் பல பகுதிகளில் பாரிய ஆர்பாட்ட பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது . Read the rest of this entry »
அஸ்ஸாம் வன்முறை நீடிக்கிறது: அகதிகளுக்கு உதவிய 3 பேர் படுகொலை
சற்று இடைவேளைக்குப் பிறகு போடோ பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல் அரங்கேறும் அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) மேலும் நான்குபேர் பலியானார்கள். ஏற்கனவே சனிக்கிழமை(நேற்று முன்தினம்) 5 பேர் கொல்லப்பட்டனர். Read the rest of this entry »
நீல் ஆம்ஸ்ட்ராங் மரணமானார்.
நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர் (first man on the moon) என்ற பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல் ஆம்ஸ்ரோங் தனது 82-வது வயதில் மரணமானார். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த நீல் ஆம்ஸ்ரோங் Read the rest of this entry »
ஆங்கிலம், ரஷ்யன், ஹிந்தி இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் துருக்கி: ஆய்வுத் தகவல்
ரஷ்யன் ,ஆங்கிலம் ஹிந்தி , அல்பானியன் , டச் உள்ளிட்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் இன்றைய துருக்கி என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. நியூசிலாந்தின் ஆக்லந்து பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியல் விஞ்ஞானியான குவென்டின் அட்கின்ஸன் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் “ஸயன்ஸ்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. Read the rest of this entry »
சமூக அடிமட்டத்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள்: பாகம் 1,2,3
BBCTamil: பாகம் 01, பாகம் 02, பாகம் 03: இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலமாய் இஸ்லாமியர் நிலை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார சூழல், பண்பாட்டு விழுமியங்கள், Read the rest of this entry »
77 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிக்கு 21 வருட சிறை
நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 77 பேரை சுட்டுக் கொன்ற அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிப்பு இல்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவனுக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது. Read the rest of this entry »
அஸ்ஸாம் கலவரத்திற்கு காரணம் வங்காளதேச குடியேற்றக்காரர்கள் அல்லர்:சிறுபான்மை கமிஷன்!
இந்தியா அஸ்ஸாமில் போடோ பயங்கரவாதிகளுக்கும், மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களுக்கும் இடையே உருவான கலவரத்தில் பங்களாதேஷ் குடியேற்றக்காரர்களுக்கு பங்கில்லை என்று தேசிய சிறுபான்மை கமிஷன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
ஜனாதிபதி முர்ஷி அதிரடி: அதியுயர் இராணுவத் தளபதிகளுக்கு கட்டாய ஓய்வு !!
ஏ.அப்துல்லாஹ் : எகிப்து ஜனாதிபதி முர்ஷி எகிப்தின் அதியுயர் இராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுத்ததுடன் , ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் இராணுவ யாப்பு மாற்ற அறிவிப்பையும் அதிரடியாக உடன் அமுலுக்கு வரும்விதமாகஇரத்து செய்துள்ளார் Read the rest of this entry »
மியன்மார் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பில் அரச படைகள்: பிரஸ் டிவி
ஏ.அப்துல்லாஹ் : மியன்மாரில் அரச ஆதரவுபெற்ற பௌத்தர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை படுகொலை செய்து, அவர்களின் மஸ்ஜிதுக்களை எரித்தும் வருவதாக பிரஸ் டிவி தனது மியன்மார், ரோஹிங்கியா செய்தியாளரை ஆதாரமாக கொண்டு மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது .Video Read the rest of this entry »
ஈரானில் பாரிய பூமி அதிர்வு
இணைப்பு-2: ஈரானில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட பாரிய பூமி அதிர்வு காரணமாக சுமார் 180 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1300 பேர் கயமடைந்துள்ளதாகவும் ஈரானிய செய்திகள தெரிவிக்கின்றது. Read the rest of this entry »
துருக்கி தூதுக்குழு மியன்மார் விஜயம், கண்ணீர் சிந்திய பிரதமர் மனைவி அமீனா
ஏ.அப்துல்லாஹ்: துருக்கியின் வெளிநாட்டு அமைச்சர் , மற்றும் துருக்கி பிரதமரின் மனைவி அடங்களான துருக்கிய அரச குழுவொன்று மியன்மார், ரோஹிங்கியா சென்று அங்குள்ள பதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் அமர்வுகளை நடத்தி அவர்களின் அவலங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளது.Video Read the rest of this entry »
லிபியாவில் புதிதாக இடைக்கால நிர்வாக தலைவர் தெரிவு
ஏ.அப்துல்லாஹ் : லிபியாவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றமானது முன்னாள் ௭திரணி செயற்பாட்டாளரான மொஹமட் அல் மகாரீப்பை தலைவராக தெரிவுசெய்துள்ளது. மேற்படி பாராளுமன்றம் அதிகாரத்தைக் கையேற்று ஒரு நாளில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »
எகிப்து இராணுவ அதிகாரத்தின் முதல் பல் பிடுங்கப்படுகிறது
உளவுத்துறை தலைவர் முராத் முவாஃபியிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி முர்ஸி உத்தரவிட்டுள்ளார். ஸினாயில் இராணுவத்தினருக்கு எதிராக மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 எகிப்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. Read the rest of this entry »
பலஸ்தீன் எகிப்து உறவை உடைக்க இஸ்ரேல் சதி
எகிப்தில் 16 படையினரை சுட்டுக்கொன்ற ஆயுததாரிகளை தேடி இராணுவம் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இத்தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்காத நிலையில் இது இஸ்லாமிய ஆயுத குழுவின் செயல் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. Read the rest of this entry »
எகிப்தில் மியன்மார் இனச் சுத்திகரிப்புக்கு எதிரான குரல் வலுப்பெறுகிறது
எகிப்தில் மியன்மார் இனச் சுத்திகரிப்புக்கு எதிரான குரல் வலுப்பெறுகிறது என்று எகிப்திய பத்திரிகைகள் தெரிவிக்கிறது , மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், அவர்களது உரிமைகளை பாதுகாக்க கோரியும் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள மியன்மார் தூதரத்திற்கு முன்னால் மிகப் பாரிய ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »
சமூக அடிமட்டத்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள்
BBCTamil: பாகம் 1: இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலமாய் இஸ்லாமியர் நிலை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார சூழல், பண்பாட்டு விழுமியங்கள், கடந்த ஒரு தசாப்தமாக அடிப்படை வாதம், மற்றும் தீவிரவாதம் என்று பல கூறுகள் அலசப்பட்டு வந்திருக்கின்றன. Read the rest of this entry »
முஸ்லிம்களின் நோன்பை கண்டு பீதி கொள்ளும் கம்யூனிச சீனா!
சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்சியாங்கில் முஸ்லிம்கள் வேதனையுடன் இவ்வாண்டு ரமலானை வரவேற்றுள்ளனர். புண்ணியமிக்க மாதத்தில் மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு நோற்க அரசு தடை விதித்துள்ளது. Read the rest of this entry »
இஸ்ரேலின் இரகசியப் போர்கள்: ஈரானில் அணுசக்தி விஞ்ஞானிகள் படுகொலை இஸ்ரேலின் யுத்தம்
ஆசிரியர் Haaretz: ஆர்மகெடோனுக்கு எதிரான உளவாளிகள்: இஸ்ரேலின் இரகசியப் போர்கள்’ என்னும் புத்தகம் சந்தேகத்திற்கு இடமின்றி, இஸ்ரேலின் உளவுத்துறைப் பிரிவான மொசாட் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரானின் உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானிகளை அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்தை சேதப்படுத்துவதை நோக்கம் கொண்டு அதன் பரந்த செயற்பாடுகளின் ஒரு பகுதியாக படுகொலை செய்துள்ளது எனத் தெரிவிக்கிறது. Read the rest of this entry »
பிரான்ஸ் பள்ளிவாசலுக்கு முன்னால் பன்றித் தலை
பிரான்ஸில் பள்ளிவாசல் வாயிலில் இரு பன்றித் தலைகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பிரான்ஸில் வளர்ந்து வரும் முஸ்லிம் எதிர்ப்பு செயல்களில் ஒன்று என அந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். Read the rest of this entry »
மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமை அமைப்பு கோரிக்கை
ஏ.அப்துல்லாஹ்: மியன்மார் படுகொலைகளை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் இலக்குவைக்கப் பட்ட படுகொலைகளை சுதந்திரமான முறையில் விசாரணை நடாத்தவேண்டும் Read the rest of this entry »
அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போடோ விடுதலைப் புலிகள்
குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். Read the rest of this entry »
இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்தான்: அமெரிக்க பேராசிரியர்
முஹம்மத் அம்ஹர்: இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ரொபேர்ட் எப்.ஷெடிங்கர்-Robert F. Shedinger – இயேசு ஒரு முஸ்லிம் என்று தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »
மியன்மாரில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம்
ஏ.அப்துல்லாஹ்: ஆசியாவின் பலஸ்தீன் என்று ஐநா வினால் இன்று வர்ணிக்கப்படும் மியன்மாரில் முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப் படுவதை கண்டித்தும் ,மியன்மார் முஸ்லிம்களை நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் மியன்மார் அரசை கண்டித்தும் , மியன்மாரி அரச தலைவர்களின் செயல்களை கண்டித்தும் Read the rest of this entry »
ஹமீதா குதுப் வபாத்
ஷஹீத் செய்யத் குதுபின் சகோதரியும் பிரபல முஸ்லிம் பெண் மார்க்க அறிஞருமான ஹமீதா குதுப் மரணமடைந்தார். அவருக்கு வயது 75. பிரான்சு தலைநகர் பாரிஸில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்றம் கூடியது
முஹம்மத் அம்ஹர்: எகிப்தின் முக்கிய அதிகாரத்தை இன்னும் கையில் வைத்திருக்கும் இராணுவ கவுன்சிலின் உத்தரவுகளை புறக்கணித்து எகிப்து பாராளுமன்றம் நேற்று கூடியது. சில தினங்களுக்கு முன்னர் எகிப்தின் ஜனாதிபதி முர்ஷி பாராளுமன்றத்தை கூடுமாறு கட்டளை யிட்டார். எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இராணுவ வழிகாட்டலில் எகிப்து உச்சநீதிமன்றத்தால் இஹ்வான்கள் பெரும்பான்மை பெற்ற புதிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. Read the rest of this entry »
எகிப்து பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி முர்ஸி உத்தரவு
M.ரிஸ்னி முஹம்மட்: எகிப்தின் ஜனாதிபதி கலாநிதி முஹமத் முர்ஸி உச்சநீதிமன்றத்தால் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எகிப்தின் புதிய பாராளுமன்றத்தை கூட்டுமாறு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இராணுவ வழிகாட்டலில் எகிப்து உச்சநீதிமன்றத்தால் இஹ்வான்கள் பெரும்பான்மை பெற்ற புதிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. Read the rest of this entry »
லிபியாவில் இன்று பொதுத் தேர்தல்
BBC Tamil: லிபியாவில் மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சுதந்திரமாக வாக்களிக்கின்ற முதல் தேர்தல் இதுதான் என்று சொல்லலாம். சென்ற வருடம் நேட்டோ சர்வதேச படைகளின் ஒத்துழைப்புடன் இந்நாட்டில் நடந்த கிளர்ச்சியில் முவம்மர் கடாஃபி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதை Read the rest of this entry »
அரபாத்தை கொன்றது அணுக்கதிர்வீச்சு நச்சுப்பொருள் ‘பொலோனியம் 210′
1957ஆம் ஆண்டில் இஸ்ரேல் விஞ்ஞானிகள் பலர் புற்றுநோய் வந்து இறந்ததற்கும் இந்த பொலோனியம் நச்சு காரணமாக இருக்கக் கூடும் என்று இஸ்ரேல் எழுத்தாளர், மிசால் கார்பின் என்பவர் கூறினார். 2006ஆம் ஆண்டு ரஷ்ய உளவு ஏஜென்சியான கேஜிபி-யின் உளவாளி லிட்வெனென்கோ லண்டனில் கொலை செய்யப்பட்டபோது இந்த பொலோனியம் 210 என்ற நச்சுப்பொருள் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. Read the rest of this entry »
லிபியாவில் சனிக்கிழமை தேர்தல்
முஹம்மட் அம்ஹர்: லிபியாவில் உள்ளநாட்டு முறுகல் நிலைக்கும் மத்தியில் இந்த மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை தேசிய பேரவைக்கான தேர்தல் இடம்பெற உள்ளது. உருவாக்கப்படும் தேசிய பேரவை பிரதமர் ஒருவரையும் , அமைச்சர்களையும் தெரிவு செய்யவுள்ளதுடன், நாட்டின் புதிய அரசியல் அமைப்பை வரைவதற்காக Read the rest of this entry »
முர்ஸி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்
முஹமத் அம்ஹர்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சித் தலைவர் கலாநிதி முஹமத் முர்ஸி இன்று சனிக்கிழமை நாட்டின் முதல் சுதந்திரமாக மக்களினால் தெரிவான ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். முஹமத் முர்ஸி ஜனாதிபதியாக இன்று உச்ச நிதிமன்ற Read the rest of this entry »
முர்ஸிக்கு பராக் ஒபாமா வாழ்த்து
எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற முர்ஸிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்போது எகிப்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் எனவும் ஒபாமா உறுதியளித்துள்ளார் .’ஜனநாயகத்தை நோக்கிய எகிப்தின் மாற்றத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவியளிக்கும் எனவும் எகிப்திய Read the rest of this entry »
கலாநிதி முஹமத் முர்ஸி ஜனதிபதியாக வெற்றிபெற்றுள்ளார்
ஏ.அப்துல்லாஹ்:இணைப்பு-2 கலாநிதி முஹமத் முர்ஸி வெற்றிபெற்றுள்ளார் என்று எகிப்து தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது . எகிப்திய ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ முடிவு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சித் தலைவர் கலாநிதி முஹமத் முர்ஸி வெற்றிபெற்றுள்ளார். Read the rest of this entry »







