வாக்காளர் பட்டியலில் இருந்து முல்லைத்தீவு முஸ்லிம்கள் புறகணிப்பு ?
யாழ் ஆஷிக்: தம்மையும் பதியுமாறு அரச அதிபரிடம் வேண்டுகோள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்களை வாக்காளராக பதிவுசெய்ய தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப் படுகிறது. புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வசித்து கடந்த 2010 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களில் மீள்குடியேறிய முல்லைத்தீவு முஸ்லிம்களையே இவ்வாறு வாக்காளர்களாகப் பதிவுசெய்ய முடியாது ௭ன தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது .
மீள்குடியமர்வுக்கான பதிவுகள் முல்லைத்தீவில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் குடும்பமாக இங்கு வாழாமையினாலேயே வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள முடியாதுள்ளதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து 23 வருடங்களாக புத்தளம் அகதி முகாமில் வசித்த இந்த முஸ்லிம்கள் தமது வாக்குரிமையினை தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பதிந்துள்ளனர். ஆனால் இந்த முஸ்லிம்கள் 2010, 2011, 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பட்டியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர் என்று விசனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.








when the majority singhlese against the tamil civilians rights, thats the time tamil youth taken the arms on thier hand and it leads to 30 years civil war and loosing too much . so now tamil politician and authorities opposing to thier minorty muslim rights in eastern and northern provinces, so they wanted one more civil war in north and east?these muslims lived thier for long long time, ur leadership taken everything from them , when they chased out thier home land over night order, so now they come back , give thier land and properties leave them live with thier rights.
siddeeks
August 7, 2012 at 3:52 pm