கிணற்றில் தவறி விழுந்து சிறுமி வபாத்
அக்கரைப்பற்று செய்தியாளர்: அக்கரைப்பற்று முதலியார் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றில் நீர் அள்ளுவதற்கு முயற்சித்த போது றிஜாஸ் நுஷ்பா என்ற 8 வயது சிறுமி கிணற்றினுள் தவறி விழுந்து வபாதாகியுள்ளது .இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிர் இழந்த சிறுமி அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்று வரும் ௭ன்பவராவார். சிறுமியின் ஜனாஸா நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .








Its crime to allow a small girl sent to fetch water from well. Allah knows well.
nizamhm1944
August 7, 2012 at 7:22 pm