தமது கலாச்சாரத்தைப் பேணும் பெண்கள் ஆண்களைத் தூண்டுவதில்லை: மேர்வின் சில்வா
சஹீத் அஹமட் ,F.M.பர்ஹான்: பாலியல் பலாத்காரத்திக்கு காரணம் அரைகுறை ஆடைகளே.முஸ்லிம் பெண்களைப் உடல் முழுவதையும் மூடியுள்ளனர். தமது கலாச்சாரத்தைப் பேணும் பெண்கள், ஆண்களைத் தூண்டுவதில்லை என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு ரிதீதென்ன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மறைவானவற்றை தூக்கிக் காட்டும் வகையில் பெண்கள் ஆடை அணிகின்றார்கள். பாலியல் பலாத்தாத்திக்கு யார் காரணம் அநாகரீகமாக ஆடைகளை அணியும் பெண்களே இதற்குக் காரணம்.
எங்களது யுவதிகளைப் பாருங்கள். ஒன்று கைகள் இல்லாத அல்லது மிகவும் குட்டையான ஆடைகளை அணிகின்றனர். அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் . முஸ்லிம் பெண்களைப் பாருங்கள் உடல் முழுவதையும் மூடியுள்ளனர். தலையும் மூடப்பட்டுள்ளது. சில முஸ்லிம் பெண்கள் தங்களது முகத்தையும் மூடிக் கொள்கின்றனர். இவ்வாறு தமது கலாச்சாரத்தைப் பேணும் பெண்கள், ஆண்களைத் தூண்டுவதில்லை என்று தெரிவித்துள்ளார்.








