Archive for July 9th, 2012
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் UNP சந்திப்பு
F.M.பர்ஹான் :ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் மற்றும் மஹ்ரூப், மேல்மாகான் சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கொழும்பு மேயர் முசம்மில் ஆகியோர் கிழக்கு மாகான சபைத் தேர்தல் தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்துடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர் . Read the rest of this entry »
தியத்தலாவை பயிற்சியை முடித்த இலங்கை ராஜதந்திரிகள் மட்டக்களப்புக்கு விஜயம்
இலங்கையின் 51 வெளிநாடுகளுக்கான 59 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் குழு இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்புக்கு வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர்எப்.எம்.பர்ஹான் தெரிவிக்கிறார் . Read the rest of this entry »
பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் அடித்துக் கொலை
மூதூர் செய்தியாளர் ,எஸ். எச். அமீர்: திருகோணமலை – தம்பலகாமம் – ஜயந்திபுர பகுதியில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் வீட்டிலிருந்தவர் ஒருவரால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக Read the rest of this entry »
தலைவர் ஹகீம் முதன்மை வேட்பாளரானால் அவரை முதலமைச்சராக்கப் பாடுபடுவேன்
M.ரிஸ்னி முஹம்மட்: கிழக்கு மாகாண தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹகீம் கிழக்கு மாகாணத்தில் முதன்மை வேட்பாளராக களமிறங்கினால் எனது முழு சக்தியையும் அர்ப்பணித்து அவரை முதலமைச்சராக்க பாடுபடுவேன் என வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் சற்று முன்னர் lankamuslim.org க்கு தெரிவித்தார். Read the rest of this entry »
கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் நாமேதான் !
எஸ். எம். சறூஜ், F.M.பர்ஹான், சஹீத் அஹமட், பூ.பிரசாந்தன்: முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் என்ற வகையில் தான் போட்டியிடுவதில் எதுவித சந்தேகமும் இல்லை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் நசீர் அஹமட். அலிசாஹீர் மௌலானாவுக்கு எதிர் வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில்.கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் Read the rest of this entry »
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுவது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாம்
இன்றைய-09.07.2012- வீரகேசரி பத்திரிகையின் முன்பக்க தலைப்புச் செய்தி: கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு: அஷ்ரப் இருந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும் என்கிறார்:இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான காலம் கனிந்துள்ளது. இந்நிலையில் ௭திர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் Read the rest of this entry »
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இனவாத பிரசாரத்தில். இந்திய உளவாளிகள் ஊடுருவல் : ஜாதிக ஹெல உறுமய
கிழக்கு மாகாண சபை தேர்தலில் இந்திய உளவாளிகள் ஊடுருவியுள்ளனர். பிரிவினைவாத சக்திகள் பல்வேறு முகங்களுடனும் பின்னணிகளுடனும் கிழக்கை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக செயற்படுகின்றன ௭னவே அரசு நிலைமையை புரிந்து அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணியாது செயற்பட வேண்டும் ௭ன்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. Read the rest of this entry »
SLMC ,TNA பேச்சு: கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு…
சூரியன் நியூஸ் : கிழக்கு மாகாண சபை மற்றும் வடக்கு மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி Read the rest of this entry »







