முர்ஸி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்
முஹமத் அம்ஹர்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சித் தலைவர் கலாநிதி முஹமத் முர்ஸி இன்று சனிக்கிழமை நாட்டின் முதல் சுதந்திரமாக மக்களினால் தெரிவான ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். முஹமத் முர்ஸி ஜனாதிபதியாக இன்று உச்ச நிதிமன்ற வளாகத்தில் பதவி பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
இராணுவம் மேலதிக அதிகாரத்துடன் நாட்டின் சிவில் நிர்வாகத்தில் தலையீடுகளை கொண்டுள்ள அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் இராணுவம் செயல்படுகிறது, மக்கள் எழுச்சியின் பின்னர் தெரிவான பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. என்ற அதிகராக சவால்களுக்கு மத்தியில் முஹமத் முர்ஸி பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் .
கட்டுரை:







