மியன்மார் இனவன்முறை : பங்களாதேஸ் அரசின் மனிதநேயமற்ற நடவடிக்கை
ஏராளமான மக்களின் மரணத்திற்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் புலம்பெயர்வுக்கும் காரணமான வடக்கு மியன்மார் இனக் கலவரம் கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரின் ராக்கினில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே பிரச்சினை ஆரம்பமாகியது.
இந்த இன வன்முறையை தொடர்ந்து பௌத்தர்களின் தாக்குதலில் இருந்து தப்பி பங்களாதேசுக்கு பாதுகாப்பு தேடிச் சென்ற பெண்கள் சிறுவர் ,சிறுமியரை கொண்ட முஸ்லிம் குடும்பங்களை பங்களாதேஸ் அரசு மனிதநேயமற்ற முறையில் திருப்பி அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் புலம் பெயர்ந்தோருக்கான ஐ.நாவின் உயர் நிறைவேற்று அதிகாரி , பங்களாதேஷ் புலம் பெயர்ந்தோருக்கு புகலிடம் அளித்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும், மருத்துவ உதவியையும் வழங்குமாறு கோரியுள்ளார் .
12 படகுகளில் வந்த பெண்களும், குழந்தைகளும் அடங்கிய 300 பேரை பங்களாதேஷ் அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக நேரில் கண்டோர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர் .
இன வன்முறையை காரணமாக 25 பேர் படுகொலைச் செய்யப்பட்டு 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக AFP செய்தி கூறுகிறது.











இவ்வாறான நிலை இலங்கையில் ஏற்படாதிருக்க இரு கரம் ஏந்தி இறையாசிப்போம்.
meenavan
June 14, 2012 at 9:02 am