முஸ்லிம் தலைமையின் மௌனம் : பெளத்த தீவிரவாத்தின் முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத்திற்கு உதவுகிறது
எமது கடந்த மாத கட்டுரை ஒன்றின் மீள் பதிவு : ஏ.அப்துல்லாஹ்: தம்புள்ள மஸ்ஜிதுக்கு வெசக் முடிவடைந்ததும் ஜனாதிபதி தீர்வினை முன்வைப்பார் என்று ஜனாதிபதி தெவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. வெசக் முடிவடைந்து நாட்கள் பல சென்ற போதிலும் தம்புள்ள பள்ளிவாசல் குறித்து ஜனாதிபதி எந்த வொரு அறிவிப்பினையும் மேற்கொள்ளவில்லை.ஆனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ள மஸ்ஜித் அங்கருந்து அகற்றப் படாது என்று ஜனாதிபதி தன்னிடம் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். இது போதுமானது என்று கொள்ள முடியாது.








கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கட்டார் வந்திருந்த ஜனாதிபதியை சந்தித்த இங்குள்ள ஊடகத்துறையொன்றில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் இந்த சம்பவங்கள் குறித்து முஸ்லிம்கள் குழப்பமடையவோ அச்சம் கொள்ளவோ தேவையில்லை என்பதையும் தான் விடயங்களைக் குழப்பிக் கொள்ளாமல் எல்லாவற்றையும் உரிய முறையில் உரிய நேரத்தில் தீர்த்து வைப்பதாக கூறினார் என்ற நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்றது். ஆனாலும் இது குறித்து நமக்குள்ள ஆதங்கம் என்னவெனில் நடவடிக்கைகள் எடுக்க காலக்கெடு விதிக்கும் போது இது போன்ற சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரலாம். நமது பாஷையில் சொல்வதாக இருந்தால் நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது “பெரஹர” போய் முடிந்து விடும். ஜனாதிபதி மௌனம் கலைத்து “பிக்குகள் தமது அலுவல்களைப் பாருங்கள் நாட்டு விவகாரங்களை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று ஒரே வார்த்தையில் கூறினால் இந்த விட்டலாச்சாரியர்கள் கப்சிப் ஆகி விடுவது திண்ணம். சரி ஜனாதிபதி எந்த ஸ்டைலில் ஸ்டன்ட் பண்ணி இந்தக் காரியத்தை ஜமாய்க்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Ossan Salam - Doha
June 6, 2012 at 10:05 am