Archive for April 2012
ஜமிய்யத்துல் உலமாவின் தீர்மானத்தை அமுல்படுத்த முழு அரசியல் பலத்தையும் பிரயோகிப்போம் ..
இர்ஷாத் றஹ்மத்துல்லா, F.M.பர்ஹான்: தம்புள்ள ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் சர்ச்சை தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடம் கடந்த ஞாயிற்றுக் கிழமை கட்சியின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் கூடி விரிவாக ஆராய்ந்ததுடன்,தீர்மானங்கள் சிலவற்றையும் எடுத்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளர். Read the rest of this entry »
தம்புள்ளை பள்ளிவாசல் இடமாற்றப்படக் கூடாது: காத்தான்குடி நகரசபை
F.M.பர்ஹான்: தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை சில பேரினவாத பௌத்த தேரர்கள் உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தம்புள்ளை ஜும்ஆ பள்ளிவாயல் அதே இடத்தில் இருக்க வேண்டும் Read the rest of this entry »
‘துஆ’ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்த போது
F.M.பர்ஹான்: அஸ்லம் அலி : ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சி (துஆ), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்துள்ளதையடுத்து நடந்த ஊடகவியலாளர் மாநாடு திங்கள் கிழமை (30) முற்பகல் நடைபெற்ற பொழுது பிடிக்கப்பட்ட படங்கள். Read the rest of this entry »
PMGG புதிய உறுப்பினர் சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுப்பு
FM.பர்ஹான்: காத்தான்குடி நகர சபைக்கு PMGG சார்பாக புதிய நியமனம் பெற்றுள்ள உறுப்பினர் இம்மாத சபை அமர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியினை நகர சபை தவிசாளர் மறுத்துள்ளார். Read the rest of this entry »
தம்புள்ளை மஸ்ஜித் தொடர்பில்: ஆசாத் சாலி கலந்துகொண்ட இரண்டாவது மின்னல் நிகழ்ச்சி Video
கடந்த மின்னல் நிகழ்ச்சி யில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத் சாலி கலந்து கொண்ட மின்னல் நிகழ்ச்சி தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் சக்தி தொலைக்காட்சி நடத்திய இரண்டாவது மின்னல் நிகழ்ச்சி, இதில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களும் கலந்து கொண்டுள்ளார் இவற்றில் இரு பகுதி களை உங்களுக்கு தருகிறோம் Video Read the rest of this entry »
புலித் தமிழ் தேசியத்தின் போலிப் பரப்புரைகள்
ஏ.அப்துல்லாஹ்: அகில இலங்கை ஜம்இயதுல் உலமா இரண்டகாக பிளவு பட்டுள்ளதாக மிகைப் படுத்தப்பட்ட போலியான பரப்புரைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதேபோன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசில் இருந்து விலகப் போவதாகவும் உள்நோக்கம் கொண்ட பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழ் ஊடங்களில் இத்தகைய தகவல்கள் வெளிவந்துள்ளது. Read the rest of this entry »
ஐரோப்பிய பாராளுமன்ற குழுவொன்று இலங்கை வருகிறது
இணைப்பு-2: ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. குறித்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மே மாதம் ஐந்தாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
சாய்ந்தமருது உணவகங்கள், கடைகளுக்கு தரச்சான்றிதழ்
கல்முனை செய்தியாளர் : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தின் வழங்கும் நிகழ்வு இன்று (29) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. Read the rest of this entry »
தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டம் ஆனால் ..
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அதன் நிரந்தர இருப்பு மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஜெனிவா. நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பிரதித் தலைவர் அல்ஹாஜ் முயிஸ் வஹாப்தீன் எமக்கு ஈமெயில் மூலமாக அனுப்பிவைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் கடிதம்
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: தம்புள்ள பள்ளிவாயல் தொடர்பில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தினை கண்டித்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்த நிலையில், Read the rest of this entry »
பிரிட்டன் பௌத்த விகாராதிபதி மஸ்ஜித் தாக்குதலுக்கு கடும் கண்டனம்
எஸ்.எம் நஸீம் SLMDI UK: இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் 28/04/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள கிங்க்ஸ்பரி பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.மேற்படி விஜயத்தின் போது SLMDI UK இன் தலைவர் M.L நஸீர் உட்பட அதன் Read the rest of this entry »
மஸ்ஜித் தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியாவில் நேற்றும் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் இருந்து அபூ பைசல்: இலங்கை தம்புல்லவில் உள்ள பள்ளிவாசலை தாக்கிய புத்த பிக்குகளைக் கண்டித்து சென்னையில் INTJ சார்பாக 28-04-2012 சனிக்கிழமை அன்று இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் முஹம்மது முனீர் சேட் தலைமை தாங்கினார். Read the rest of this entry »
தீவிரவாத அமைப்புகள் இலங்கையில் இல்லை
அல் – கைடா மாற்றும் தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்த நாட்டில் செயற்பட வில்லை என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இவ்வாறான அமைப்புகள் இலங்கையில் செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு பதில் வழங்கும் வகையில் கருத்துரைத்த இராணுவத்தின் Read the rest of this entry »
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குமா ?
அஸ்ரப் ஏ ஸமத், ஏ.அப்துல்லாஹ்: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2012 இலங்கையில் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் கொழும்பில் நடாத்துவதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழு ஒன்று நேற்று (28) நீதி அமைச்சில் வைத்து அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. Read the rest of this entry »
ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: காத்தான்குடி சம்மேளனம்
நமது செய்தியாளர் : கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கேட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. Read the rest of this entry »
தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
சென்னை, ஏப். 29: இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: Read the rest of this entry »
அபிவிருத்தி பணிகளை சில குழப்பவாதிகள் குழப்ப முயற்சிக்கின்றனர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனை திட்டங்களை நடை முறைப்படுத்துகின்ற விடயத்தில் சில அரச அதிகாரிகள் செய்யும் கயிறு இழுப்பால் தேவை கொண்ட எமது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகுவது அதிகரித்துவருவதாக வடமாகா அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் Read the rest of this entry »
தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது: முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார் . இந்த முடிவு இன்று கூடிய முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
பிரதமருடன் சந்திப்பு இடம்பெறவில்லை ஜனாதிபதியுடன் சந்திப்பு விரைவில்
M.ரிஸ்னி முஹம்மட்: ஜனாதிபதி நேற்று நாடு திரும்பியுள்ளார் இந்த நிலையில் தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் விடயத்தை கையாள முஸ்லிம் சமூகத்தின் ஆங்கீகாரம் பெற்ற தரப்பை இன்னும் ஓரிரு தினங்களில் சந்திப்பார் என்று எதிர்பர்கப்படுகிறது எதிர்வரும் திங்கட்கிழமை சாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியானபோதும் இன்னும் சந்திப்புக்காக நாள் தீர்மானிக்கப் படவில்லை என்று அறியமுடிகிறது. Read the rest of this entry »
ஈரானின் உயர்மட்ட கலாசார ஆலோசகர ஜனாதிபதியுடன் சந்திப்பு
தம்புள்ளை மஸ்ஜித் முற்றுகை தாக்குதல் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அரசாங்கத்துடன் ஈரானின் உயர்மட்ட கலாசார ஆலோசகரும் ஆன்மீக பிரமுகருமான அயதுல்லா மொஹமட் அலி தஸ்கிரி கலந்துரையாடியுள்ளார். Read the rest of this entry »
”இலங்கையில் மத சகிப்புத் தன்மை குறைந்துள்ளது” -BBC
BBC TAMIL:இலங்கையில் மதச் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, அங்கு சக மதங்களை மதிக்கும் சகிப்பு மனப்பான்மை குறைந்துவரும் போக்கு அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருவதாக அக்கறைகொண்ட பிரஜைகள் என்ற குழுவினர் அறிக்கையொன்றில் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். Read the rest of this entry »
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஆத் நடாத்திய கண்டனபேரணி
அம்ஹர்,FM.பர்ஹான்: தம்புள்ள மஸ்ஜித் தாக்கப்பட்டமையை கண்டித்தும் குறித்த தம்புள்ள மஸ்ஜித் அதே இடத்தில் தொடந்தும் இயங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் கொழும்பு தலைமையகக் கிளையின் ஏற்பாட்டில் Read the rest of this entry »
பள்ளியை தாக்கி சேதப்படுத்திவிட்டு, சேதமில்லை என்ற அறிவிப்பு வேறு
இஸ்லாமிய சகோதாரர்களின் மத நிறுவனங்களின் மீது சமகாலத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவல்ல. பலாங்கொடையில் மலையேறி சென்று தாக்கினார்கள். அனுராதபுரத்தில் தாக்கி அழித்தார்கள். Read the rest of this entry »
ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு தென்கொரியா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ , இன்று மாலை நாடு திரும்பியுள்ளார். இன்று பிற்பகல் 3.40 மணியளவில் இலங்கைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் ஜனாதிபதி நாடு திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »
காணி உரிமைகளை பறிகொடுத்தவர்கள் மீள அவற்றை பெற்றுக்கொள்ள விரைவில் சட்டம்
FM.பர்ஹான்: யுத்தகாலத்தில் நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் தமது காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யும் விதத்திலான சட்டம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நீதியமைச்சரும், Read the rest of this entry »
ஹைரியா மஸ்ஜிதில் சர்வதேச ஊடகங்கள் பார்க்க ஜும்ஆ இடம்பெற்றது
தம்புள்ளையில் இருந்து எமது செய்தியாளர் : இன்று தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ இடம்பெற்றது அதில் சுமார் ஆயிரம் பேர்வரை கலந்துகொண்டனர், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா வேண்டிகொண்டமைக்கு அமைவாக துவா பிராத்தனையும் இடம்பெற்றது . இன்று மஸ்ஜிதுக்கு சர்வதேச மற்றும் தேசிய ஊடங்கள் வந்திருந்தது , அல் ஜசீரா தொலைகாட்சி ஊடகவியலாளர்கள் காட்டார் நாட்டில் இருந்து வந்திருந்தனர்.படங்கள் Read the rest of this entry »
நாடுபூராவும் முற்றவெளி பிராத்தனை மற்றும் அமைதி ஆர்ப்பாட்டம்
இன்று நாட்டின் சகல ஜும்ஆ மஸ்ஜிதுக்களிலும் முற்றவெளி பிராத்தனை இடம்பெற்றுள்ளது. அதேவேளை கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களும் எழுச்சிகரமான அதேவேளை அமைதியான ஆர்பாட்ட பேரணிகள் இடம்பெற்றுள்ளது இந்த பேரணிகள் தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பள்ளிவாசலை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிரப்பு தெரிவித்தும் மேற்கொள்ளபட்டுள்ளது. படங்கள் Read the rest of this entry »
முஸ்லிம் சமூகத்தின் அவதானதிற்கு
இலங்கை முஸ்லிம் சமூகம் என்பது சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு பகுதி இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கலாம் ஆனால் உலகலாவிய உம்மாவின் ஒரு பகுதி என்ற வகையில் நாம் தனியாக விடப்பட்டவர்கள் அல்லர் எமக்கு துணையாக ஒரு பிரமாண்டமான ஈமானிய சமூகம் இருக்கிறது . என்ற எண்ணம் எம்போதும் எமக்கு வேண்டும் இது எமக்கு இஸ்லாம் போதிக்கும் மிகப் பிரதானமான சகோதரத்துவ தத்துவம். Read the rest of this entry »
தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல் : பிரிட்டனில் எதிரொலி
சோனகர்.கொம் என்ற வலைத்தளம் எமக்கு அனுப்பிவிதுள்ள செய்தி போருக்குப் பிந்திய இலங்கை கண்டு வரும் இனவாத வன்செயல்களின் தொடர்ச்சியாக இலங்கை, மத்திய மாகாணம், மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை பிரதேசத்தில் சுமார் 60 வருட காலம் பழமை வாய்ந்த மஸ்ஜித் (தொழுகைக்காக இஸ்லாமியர்கள் கூடும் இடம்) Read the rest of this entry »
ஆளுநர் அலவி மௌலான இராஜினாமா செய்ய தயாராகிறார்
ஏ.அப்துல்லாஹ்: மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான தம்புள்ள மஸ்ஜிதை இடிப்பதற்கு அல்லது அதை தம்புள்ளையில் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிப்பார்களானால் தான் தனது ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
பிரிட்டனில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் கலந்துரையாடல்
லண்டனில் இருந்து ரிஷான் அலி, ஷமீர் நயீம்: தம்புள்ள மஸ்ஜித் தாக்குதல் சம்பந்தமான UK High commissioner உடன் நேற்று இடம் பெற்ற கூட்டத்தை முன்னிற்று Bolton மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் சகோதரர்களுடனான கலந்துரையாடல் ஒன்று Read the rest of this entry »
இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மை முஸ்லிம்கள் ?
AC.நவாஸ்தீன்: இலங்கையின் இடண்டாவது பெரும்பான்மையாக முதல் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வரக்கூடிய நிலை இருப்பதாக இந்த ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுவதாக தெரிவிக்கபடுகிறது . கடந்த சக்தி தொலைக்காட்சி மின்னல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினரும் Video Read the rest of this entry »
இன்று நாடு பூராவும் முஸ்லிம்கள் நோன்பு நாளை 2500ஜும்ஆ மஸ்ஜிதுகளின் முற்றவெளி பிராத்தனை
இன்று நாடுபூராவும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்றுள்ளனர். ரமழான் நோன்புக்காலம் போன்று இன்றைய அதிகாலை சஹர் நேரம் காணப்பட்டதாகவும் சுபாஹ் தொழுகைக்கு அதிகமான முஸ்லிம்கள் பங்கு பற்றியதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தின் பரவலாக நோன்பு நோற்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
அம்பாறை மட்டகளப்பு முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தால்
அம்பாறை,மட்டகளப்பு மற்றும் மாவட்டங்களில் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன. காத்தான்குடி ,கல்முனை பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. Read the rest of this entry »
பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது: Video
தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும் கோயிலும் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளன. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது. அது சட்ட விரோத கட்டிடமல்ல. மூன்று முஸ்லிம்களின் பெயரிலே பள்ளிவாசல் காணி உள்ளது. மத ஸ்தலம் என்பதால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சோலை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது Video Read the rest of this entry »
இஸ்லாமிய மரபுகளுக்குள் நின்று எமது ஆட் சேபனைகளை தெரிவிப்போம்!
அஷ்-ஷேய்க் கலாநிதி மஸி ஹுதீன் இனாமுல்லாஹ்
தம்புள்ளை பள்ளிவாயல் மீதான அத்துமீறல் இலங்கை வாழ் முஸ்லிம்களை மாத்திரமன்றி முழு முஸ்லிம் உலகையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது, இலங்கை முஸ்லிம்கள் ஆத்திரமடைந்துள்ளனர், பௌத்த தர்மத்தின் பெயரால் அரசியல் உள் நோக்கங்களையுடைய ஒரு மிகச் சிறிய குழுவினர் பௌத்த மதம் போதிக்கும் உயர் தர்மங்களையும் இந்த நாட்டின் அரசியல் யாப்பு நீதித் துறை என்பவற்றிற்கு மதிப்பளிக்காது கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேற்றிய காடைத் தனங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். Read the rest of this entry »
காத்தான்குடி சம்மேளன காரியாளையத்தை தீவைக்க முயற்சி
F.M.பர்ஹான்: மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை 02.05மணியளவில் சம்மேளனத்தின் முன்நுழைவாயில் கதவு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் Read the rest of this entry »
பள்ளிவாசலை அகற்ற முடியாது தற்போது பிரச்சினை பாரதூரமான நிலைமையை அடைந்துள்ளது
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார் என தான் நம்புவதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
முரண்பட்டுச் செல்வது தான் பொருத்தமென்றால் முரண்படுவதற்கும் தயங்க மாட்டோம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: கடந்த 2012.04.20 வெள்ளிக்கிழமை தம்புள்ள ரங்கிரிய ஹைரியா பள்ளிவாசல் மீது தொடுக்கப்பட்ட மிலேச்சனத்தனமான தாக்குதல் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் வெகுவாக பாதித்திருக்கின்றது.முஸ்லிம்கள் தமது உயிர்கள் மற்றும் உறவுகளை விடவும் தமது மார்க்கத்தை உயர்வாக மதிக்கின்றார்கள். Read the rest of this entry »
பாரபட்சம் காட்டாதீர்கள்-ஏறாவூர்: காணி அபகரிப்பு
சஹீட் அஹமட் : மட்டக்களப்பு மயிலம்பாவளிப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான தென்னங்காணிகளைப் பயன்படுத்துவதில் நிர்வாக ரீதியாக பல்வேறு தடைகளை முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தடைகளை உடன் நீக்கி அம்மக்களின் காணி உரிமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என வேண்டுகோள் விடுத்தார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ULMN முபீன் Read the rest of this entry »
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்
இன்று -25-வெளியாகியுள்ள தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்பு செய்தியாக வெளிவந்த செய்தியை இங்கு தருகிறோம் :தமிழ்ச் சமூகம் தமது பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியதைப் போன்று தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும். Read the rest of this entry »
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி: கடந்த வாரம் தம்புள்ளையில் நடந்து முடிந்த பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நாடெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் மிகுந்த கவலையிலும் இதுவரை காலமாக நிலவி வருகின்ற சமூக ஒற்றுமை சீர்குழைந்து விடுமோ என்ற அச்சத்திலும் இருந்து வருகின்றனர். Read the rest of this entry »
தம்புள்ள மஸ்ஜித் தொடர்பில் சென்னையில் கண்டன பேரணி
இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள ஹைரிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் பெளத்த தேரர்கள் கொண்ட ஆர்பாட்ட காரர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியாவில் இயங்கிவரும் The Popular Front of India (PFI) என்ற அமைப்பின் சென்னை கிளை . கண்டன பேரணி ஒன்ரையும், முற்றுகை போராட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளது என்று அதன் www.popularfronttn.org தகவல்கள் தெரிவிக்கின்றது. Read the rest of this entry »
தம்புள்ள ஜூம்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் போலியானது !!
தம்புள்ள ஜூம்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ , மற்றும் படங்கள் போலியானவை , சோடிக்கப்பட்டு மாற்றதுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது என்று தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
தனது அறிக்கை தொடர்பில் மனம் வருந்துகிறார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா
F.M.பர்ஹான்: தம்புள்ளை மஸ்ஜித் தொடர்பான தனது செய்தியில் தவறான உனர்வுகள் சிந்தனைகள் ஏற்பட்டிருந்தால் அதற்காக பிரதியமைச்சர் தான் மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். கண்டனங்கள் எழுந்தன Read the rest of this entry »
தம்புள்ள மஸ்ஜித் தாக்குதலுக்கு பின்னரான முரண்பாடான அறிவிப்புகள்
தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பில் நேற்று இரண்டு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த இரண்டு தீர்மானத்துடனும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தொடர்பு படவில்லை என்பது குறிப்பிடதக்கது .ஒன்று வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று மற்ற அறிவிப்பில் முஸ்லிம்கள் மூன்று மாத காலங்களுக்கு பள்ளியை பயன்படுத்தலாம் என்று பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தன்புள்ள இனாமலுவ மகா நாயக்க தேரரை தெரிவித்தார் என்ற செய்தியுமாகும் Read the rest of this entry »
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஜம்இய்யதுல் உலமா சபை கண்டனம்!
தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை சந்தித்த பின்னர் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன. Read the rest of this entry »
பள்ளிவாலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை
பிரதமர் தலைமையில் கண்டி கம்பளையில் நடந்த கலந்துரையாடலில் நான் கலந்துகொள்ளவுமில்லை பள்ளிவாலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுமில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்று மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
மதப் பேரினவாத சக்திகள் சற்று பின்வாங்கியுள்ளது
தம்புள்ள நகரில் இன்று பிரதேச செயலகத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தமையால் அசம்பாவிதம் இடம்பெறலாம் என்பதால் பெருந்தொகையான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர் என்று அங்கிருந்து எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது . சுமார் 1500 போலீஸ் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்ததாக அந்த தகவல்கள் தெரிவிக்கிறது. Read the rest of this entry »
ரங்கிரி FM தடை செய்யப்பட வேண்டும் அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
F.M.பர்ஹான், அஸ்லம் அலி :தம்புள்ள ரன்கிறி பிரதேசத்தில் அமைந்துள்ள ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் மீது மெற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும்,அவர்களின் தராதரங்களுக்கு அப்பால் சட்ட நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் Read the rest of this entry »







