பல்துறைகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இலவசமாக உம்ரா ஏற்பாடு
பல்துறைகளில் தேர்ச்சிபெற்ற முஸ்லிம்களை இலவசமாக உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை என்.எம்.ட்ரவல்ஸ் என்ட் டுவர்ஸ் நிறுவனம் செய்யவுள்ளது இந்நிறுவனத்தின் 12 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.எச்.மொஹமட் இதனைத் தெவித்துள்ளார். அங்கு அவர் கருத்துத் தெவிக்கையில், எமது நிறுவனத்தால் வருடாந்தம் இலவசமாக 25 மாணவர்கள் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.
இதற்காக நாடு பூராகவுள்ள அரபுக் கலாசாலைகளிலிருந்து நேர்முகப் பட்சை மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.அடுத்த வருடத்திலிருந்து 25 என்ற தொகையை ஐம்பதாக உயர்த்தி பலதரப்பட்ட துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவசமாக உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கவுள்ளோம். இதில் ஊடகவியலாளர்களும் உள்ளீர்க்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார் .










Masha Allah…Innovative thinking towards the society….
Eng.Nishath
February 28, 2012 at 6:33 pm