Archive for February 22nd, 2012
நீதிமன்ற நியாயாதிக்கம் ஆராய்வதற்காக குழு நியமனம்
F.M.பர்ஹான்: நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பாக 2010 நவம்பர் மாதம் 10 ஆம் திகதிய 1679/40 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள சிக்கல்களை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோரிடம் கலந்தாலோசித்த Read the rest of this entry »
மாலைதீவின் விசேட பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு
மாலைதீவின் விசேட பிரதிநிதி மொஹமட் வஹீதுடீன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது மாலை தீவின் புதிய ஜனாதிபதி பேராசிரியர் மொஹமட் வஹீடினால் அனுப்பப்பட்ட மகஜர் ஒன்றை மாலை தீவின் விசேட பிரதிநிதி Read the rest of this entry »
புத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்
புத்தளம் செய்தியாளர்: புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் இன்று பிற்பகல் பழைய இரும்பு சேகரிக்கும் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து பொலிஸார் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிழந்த செல்லுகள் மற்றும் ஆர்.பி.ஜி. ரக குண்டுகளை உந்தித்தள்ளும் பழுதடைந்த கருவிகள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர். Read the rest of this entry »
முஸ்லிம் மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த போன்று உடையணிவது நக்கலடிப்பதாக உள்ளதாம்
ஸ்ரீ லங்கா மிரர்: பொது மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போதுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று உடையணிந்து மாணவர்கள் தோற்றம் அளிக்க அனுமதிக்கக் கூடாது என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க மத்திய மாகாண பாடசாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். Read the rest of this entry »
அல் குர்ஆன் பிரதிகளை எரித்த அமெரிக்க படைக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இன்று ஏழுபேர் வபாத்
ஆப்கானிஸ்தானி இன்று இடம்பெற்ற அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஆப்கான் கர்சாய் படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏழு பேர் வபாத்தாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read the rest of this entry »
பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை
மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த ஷெல் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.Video Read the rest of this entry »
ஈராக்கில் மீண்டும் இலங்கைத் தூதரகம்
ஈராக்கில் இலங்கைத் தூதரகத்தை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளுக்காக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யூ.எம்.செனவிரத்ன, ஈராக் சென்றுள்ளதாக அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் Read the rest of this entry »
யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு
OurUmmah: நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது. விரிவாக …
ஜனாதிபதி சம்பந்தரிடம் என்ன கூறினார் ?
ஜனாதிபதியின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பன குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. Read the rest of this entry »
அத்னானை விடுவிக்க ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இணக்கம் !!
OurUmmah: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் -administrative detention-விசாரணை இல்லாமல் சிறையில் வதைக்கப்பட்டு வந்த பலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் Special Rapporteur on the situation of human rights in the Palestinian territories occupied since 1967.விரிவாக….
ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளவர்கள் உடன் பதிவு செய்துகொள்ளவேண்டும்
2012 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறை வேற்ற தயாராகவுள்ளவர்கள் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு செய்யாதவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வது கஷ்டமாகும் என்று Read the rest of this entry »
இறுதித் தூதர் :கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்
மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார். சமய கலாசார கல்விக்கான மன்றம் மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிங்கள மொழி பேசும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நடத்திய கட்டுரை போட்டியொன்றை நடத்தியது. Read the rest of this entry »









