Lankamuslim.org

One World One Ummah

Archive for February 2012

சாய்ந்தமருதுவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு வீடுகள் !

leave a comment »

கல்முனைத் தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது பிரதேச சபை பிரிவில் சுனாமியால் பாதிக்கப்பட்டு இடம் பெயரந்தவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்வூ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 11:20 pm

ஐ.நா வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரை Video

leave a comment »

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை சார்பாக இலங்கை நிலவரம் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 9:24 pm

ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்கா ,மற்றும் இஸ்ரேல்

with one comment

துருக்கி மற்றும் இந்தியா, சீனா நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். நேற்று காங்கிரஸ் சபையில்  கிளின்டன் பேசிய ஹிலாரி துருக்கி மற்றும் இந்தியா, சீனா   நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவைக் குறைக்க வேண்டும் என, அமெரிக்கா அழுத்தமாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.  Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 9:20 pm

ஷியா முஸ்லிம்கள் மீது மற்றுமொரு சியோனிசத் தாக்குதல்

leave a comment »

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் 18 பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் ,வாகனத் தொடரணியாகச் சென்ற நான்கு பஸ்களை , இராணுவச் சீருடை அணிந்த துப்பாக்கித்தாரிகள் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய போதே இவர்கள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில்  பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் அடையாள ஆவணங்களை சோதித்த பிறகு, அந்த ஆயுததாரிகள் ஷியா முஸ்லிம்களை தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர் Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 10:04 am

இலங்கையில் தேர்தல் வருகின்றபோது எண்ணெய் கிணறுகள் வெளிப்படுகின்றன

with one comment

தேர்தல் முடிவடைந்த பின்னர் அவைகள் மறைந்து விடுவதோடு எரிபொருட்களின் விலைகள் அதிகத்து மக்களினால் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கப்படுகின்றது, என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 10:00 am

இந்து சமுத்திர கடற்படை மாநாடு கொழும்பில் ஆரம்பம்

leave a comment »

இந்து சமுத்திர கடற்படை மாநாடு கொழும்பு (Indian Ocean Naval Symposium) கலதாரி ஹோட்டலில் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. இரண்டு நாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த உயர்மட்ட மாநாட்டில் 14 நாடுகளைச் சேர்ந்த 60 ற்கும் மேற்பட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 8:10 am

அமெரிக்க பெண் உரிமை மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறார் சல்மா ஹம்ஸா

leave a comment »

F.M:பர்ஹான்: காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா அமெரிக்காக்காவில் நடைபெறும் பெண்களின் -உரிமை – மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெள்ளிக்கிழமை -2.3.2012- திகதி அன்று அமெரிக்காக்கா பயணமாகவுள்ளர். பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமைகள் அமைப்பின் இலங்கைக்கான “பெண்கள் விவாகார இணைப்பாளரும் காத்தான்குடி Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 8:09 am

மெதடிஸ்த திருச் சபை நீதிமன்றம் செல்கிறது

leave a comment »

மட்டக்களப்பு நகரில் 192 வருடங்களுக்கு முன்பு மெதடிஸ்த திருச் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் பிரதான நுழைவாயிலில் சரஸ்வதி சிலை வைக்கப்பட்டுள்ளமை பாடசாலையை கையளிக்கும் போது அரசாங்கத்தினால் திருச் சபைக்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்தை மீறும் செயல் Read the rest of this entry »

Written by lankamuslim

February 29, 2012 at 8:01 am

நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது . நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் இன்று  கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் கிழக்கு மாகாண சபை அதன் உறுபினர்களுக்கு குறித்த திருத்த சட்ட மூலம் மீதான  அமைர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறும் என்று அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.முபீன் lankamuslim.org க்கு தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 28, 2012 at 3:03 pm

உலகில் மிகவும் பழமையான பைபிள் துருக்கியில் கண்டுபிடிப்பு

leave a comment »

துருக்கியில் உலகின் மிகவும் பழமையான பைபிள் கண்டுபிடிப்பு. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோஸ்பெல் பர்னபாஸ் என்பவரால் தொகுக்கப்பட்ட பைபிள் அதாவது இன்ஜீல் வேத நூல் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது. அதை தான் பார்க்கவேண்டும் என்று வத்திகான் உத்யோகபூர்மமாக அறிவித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 28, 2012 at 1:25 pm

காணி நிலம் வேண்டும் , அந்த காணி நிலத்திடையே காவல் துறை வேண்டும்.!

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“உண்மையான மனக்குறை ஏதாவது ஒரு சமூகத்திற்கு இருக்குமாயின் , அது கண்டிப் பிரதேச சமூகத்திற்கும் , அத்தோடு முஸ்லிம் சமூகத்திற்குமேயாகும் , இன்றுள்ள பிரதிநிதித்துவ முறை , நாலு லட்சம் முஸ்லிம்களுக்கு , ஐந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் இலங்கை தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்க்குமிடத்து , இந்த கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவத்தை பெற முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. இன்றுள்ள நிலைமை என்ன ? இராஜாங்கக் கவுன்சிலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏழு ஸ்தானங்கள் இருக்கின்றன. ஆனால் Read the rest of this entry »

Written by lankamuslim

February 28, 2012 at 10:33 am

குடிசனமதிப்பீடு களவேலைகள் ஆரம்பம்

leave a comment »

14ஆவது குடிசனமதிப்பீடு நேற்று -27- ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் குடும்பத்தவர்க ளதும் தகவல்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பெறப்பட்டன.30 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாடுபூராகவும் நேற்று குடிசன மதிப்பீடு ஆரம்பிக்கப்பட்டதோடு மார்ச் 19ஆம் திகதி வரை குடிசனமதிப்பீடு நடைபெறவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 28, 2012 at 9:48 am

மனித உரிமை பேரவையில் அமைச்சர் உரையாற்றியுள்ளார்

leave a comment »

BBC Tamil: ‘இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை’ – மஹிந்த சமரசிங்க: இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே உள்ளூர் வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் படிபினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று மாறு கோரும் பிரேரணைகள் எதுவும் Read the rest of this entry »

Written by lankamuslim

February 27, 2012 at 9:49 pm

நாடு பூராவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது

leave a comment »

ஜெனீவா நகரில் இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதைக் கண்டித்து தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.  வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்தி என அனைத்துப் பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் பெற்றுள்ளது. படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

February 27, 2012 at 8:17 pm

வின்சன்ட் தேசிய பாடசாலையில் மீண்டும் சரஸ்வதி சிலை

with one comment

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் வைக்கப்பட்டு அகற்றப்பட்ட சரஸ்வதி சிலை மாணவர்களினால்  திங்கட்கிழமை மீண்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி தாயை களஞ்சிய அறையில் வைத்து பூட்ட அனுமதிக்கமாட்டோம் என மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவிகள் தெரிவிக்கின்றனர் கடந்த 22 ஆம் திகதி சிலை வைக்கப்பட்டு அன்றே அகற்றப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 27, 2012 at 8:10 pm

மனித உரிமைகள் பேரவையின் மாலை 7.30 மணிக்கு இலங்கை விளக்கவுரை

leave a comment »

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை நேரப்படி இன்று மாலை 7.30  மணிக்கு இலங்கை சார்பாக இலங்கை நிலவரம் அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்க உள்ளதாக தெரிய வருகின்றது . Read the rest of this entry »

Written by lankamuslim

February 27, 2012 at 2:06 pm

இலங்கை ஆர்ப்பாட்ட மயம்

with one comment

ஐநா மனித உரிமை பேரவையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC)வின் சிபாரிசுகளை இலங்கை அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் பிரேரணையை அமெரிக்காவே கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் Read the rest of this entry »

Written by lankamuslim

February 27, 2012 at 10:02 am

நாளை மீண்டும் சபைக்கு வரும் நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம்

leave a comment »

இந்த நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் நாளை 2012 பெப்ரவரி 28 ஆம் திகதி மீண்டும் கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரத்திற்காக முன் வைக்கப்படவுள்ளது. கடந்த 2012 பெப்ரவரி 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் முன் வைக்கப்படபோது எழுந்த எதிர்ப்பால் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சட்ட மூலத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையிலும் பாராளுமன்றத்திலும் எதிர்க்கும் என்று அதன் பொதுச் செயலாளர் Read the rest of this entry »

Written by lankamuslim

February 27, 2012 at 8:52 am

இலங்கை எதிர்கொள்ளப்போகும் பிரேரணை

leave a comment »

நாளை 27ஆம் திகதி ஜெனீவாவில் ஐநா மனித உரிமைகள் அவை தொடங்குகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை தோல்வியடையச் செய்ய இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகள் ஆதரவை வழங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை பல நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் பிரேரணைக்கு அமெரிக்காவை பின்பற்றி ஆதரவு வழங்கலாம் Read the rest of this entry »

Written by lankamuslim

February 26, 2012 at 10:34 pm

மு.கா வெள்ளி, ஞாயிறு என்ற விடுமுறைகளுக்கு உடன்பட்டு பிரிவினைக்கு வழிசமைத்துள்ளது

leave a comment »

சஹீட் அஹமட்:  கல்முனை நகரில் விடுமுறை முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையும் தமிழர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் என தீர்மானித்திருப்பது இரு சமூகங்களை தொடர்ந்தும் பிரித்து வைப்பதற்கு ஏதுவாக இருப்பதுடன் இன ஐக்கியத்திற்கும் ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது என கல்முனை வர்த்தக சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 10:06 pm

29 பேர் உயிரிழப்புடன் தொடரும் ஆப்கான் மக்களின் ஆர்பாட்டம்

with 2 comments

ஆப்கானிஸ்தானி ஐந்தாவது நாளாக இடம்பெற்றுவரும் அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இது வரை 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிகிழமை மட்டும் 11 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வபாத்தாகியுள்ளனர்.Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 5:07 pm

7000 உயிரிழப்புடன் தொடரும் சிரியா மக்கள் போராட்டம்

leave a comment »

சிரியா சர்வாதிகாரி ஆஸாதிக்கும் அவரின் கட்சியான பாஸ் கட்சிக்கும் எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த வருடன் மார்ச் மாதம் தொடங்கிய மக்கள் ஆர்ப்பாட்டம் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றது. இதுவை 7000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மக்கள் ஆர்பாட்டங்களை பஷர் அல் ஆஸாத் நிர்வாகம் Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 3:46 pm

ஹஜ் பதிவுகளுக்கான கால எல்லை நீடிப்பு

leave a comment »

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளு வதற்கான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப் பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்துள்ளார். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்காக இம்மாதம் 29 ஆம் திகதி வரையும் Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 10:22 am

பல்துறைகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இலவசமாக உம்ரா ஏற்பாடு

with one comment

 பல்துறைகளில் தேர்ச்சிபெற்ற முஸ்லிம்களை இலவசமாக உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை என்.எம்.ட்ரவல்ஸ் என்ட் டுவர்ஸ் நிறுவனம் செய்யவுள்ளது இந்நிறுவனத்தின் 12 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 8:01 am

தந்தையின் சித்திரவதையால் வபாத்தான சிறுவன்

leave a comment »

இம்ரான் பாரூக் : தந்தையின் சித்திரவதையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு, சில மணிநேரத்தில் வபாத்தானதாக அறிய முடிகிறது. பண்டாரவளையைச் சேர்ந்த மகில்வெல்ல பகுதியின் முஹம்மத் காசிம் என்ற ஐந்து வயது நிரம்பிய சிறுவனே வபாத்தானதாகியுள்ளான். Read the rest of this entry »

Written by lankamuslim

February 25, 2012 at 8:00 am

இலங்கை அரச தகவல் : இறுதிப் போரில் 9000 பேர் பலி:BBC

leave a comment »

BBC Tamil: இலங்கையின் அரசாங்க புள்ளி விபரங்களின் அடிப்படையில், அங்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்ச்சைக்குரிய போரின் இறுதிக்கட்டத்தில் வடக்கில் போர்ப் பகுதியில் 9000 மக்கள் இறந்ததாக பிபிசிக்கு அறியகிடைத்திருக்கிறது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 24, 2012 at 11:32 pm

பாணின் விலை அதிகரிப்பு

leave a comment »

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது 450 கிராம் எடை கொண்ட பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிப்புச் செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் செயலாளர் Read the rest of this entry »

Written by lankamuslim

February 24, 2012 at 10:39 pm

கிறிஸ்தவ பாடசாலையில் சரஸ்வதி உருவச்சிலை வைத்தமையும், அகற்றியமையும்: கண்டங்கள்

leave a comment »

எமது காத்தான்குடி செய்தியாளர்கள்: மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையினுள் சரஸ்வதி உருவச்சிலை நிர்மாணித்த விவகாரமானது கிஸ்த்தவ மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் செயலாகுமென வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் செயலாளரான அருட்தந்தை ஷாம் சுரேந்திரன் தெரிவித்தார்.  இந்த உருவச்சிலையை உடனடியாக அகற்றுமாறு Read the rest of this entry »

Written by lankamuslim

February 24, 2012 at 10:37 pm

குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி முன் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

leave a comment »

ஆப்கானிதானில் அல் குர்ஆன்  பிரதிகளை அமெரிக்க இராணுவம் எரித்ததை கண்டித்தும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்தும். சிரியாவில் கிளர்ச்சியை தூண்டுவதை கண்டித்தும் Read the rest of this entry »

Written by lankamuslim

February 24, 2012 at 5:53 pm

மனித உரிமை திட்டங்களை முழுமையான அமுல்படுத்தலுக்கு யாப்பை திருத்தத் தயார்

leave a comment »

அரசாங்கம் தயாரித்துள்ள மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு ரீதியான திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 24, 2012 at 10:24 am

ஒபாமாவின் மன்னிப்பு கோரல் போதுமானதா ?

leave a comment »

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தளத்தில் அல் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 24, 2012 at 12:11 am

மக்களை மேற்கிற்கு எதிராக வீதியில் இறங்குமாறு அரசு அழைப்பு

leave a comment »

இலங்கைக்கு எதிரான மேற்கு உலக சக்திகளை தேசிய ரீதியில் எதிர்கொள்வதற்காக பொது மக்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலும் Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 23, 2012 at 8:29 pm

இஸ்லாமிய பண்புகளை இழந்துசெல்லும் தவ்ஹீத் குழுக்கள் ?

with 7 comments

கடந்த 50 ஆண்டுகாலமாக இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பலமான ஈமானிய உறுதி, கொள்கைப்பற்று, தியாகம், அர்ப்பணம், சமூகவியல் பக்குவம் விட்டுகொடுப்பு, புரிந்துணர்வு போன்றவற்றை அடித்தளமாக கொண்டு பல்வேறுபட்ட இன்னல்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

February 23, 2012 at 10:01 am

வடமேல் மாகாண பாடசாலைகள் அபிவிருத்திக்கு 7620 மில்லியன்

leave a comment »

புத்தளம் செய்தியாளர் :இந்த ஆண்டு வடமேல் மாகாணத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுக்ப்பட்டுள்ளதாகவும். இந்த நடவடிக்கைக்காக மாகாண சபை நிதியில் 7620 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் Read the rest of this entry »

Written by lankamuslim

February 23, 2012 at 8:46 am

நீதிமன்ற நியாயாதிக்கம் ஆராய்வதற்காக குழு நியமனம்

leave a comment »

F.M.பர்ஹான்: நீதிமன்ற நியாயாதிக்கம் தொடர்பாக 2010 நவம்பர் மாதம் 10 ஆம் திகதிய 1679/40 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள சிக்கல்களை ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சிப்லி அஸீஸ் ஆகியோரிடம் கலந்தாலோசித்த Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 8:39 pm

மாலைதீவின் விசேட பிரதிநிதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

leave a comment »

மாலைதீவின் விசேட பிரதிநிதி மொஹமட் வஹீதுடீன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது மாலை தீவின் புதிய ஜனாதிபதி பேராசிரியர் மொஹமட் வஹீடினால் அனுப்பப்பட்ட மகஜர் ஒன்றை மாலை தீவின் விசேட பிரதிநிதி Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 8:37 pm

புத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்

leave a comment »

புத்தளம் செய்தியாளர்: புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் இன்று பிற்பகல் பழைய இரும்பு சேகரிக்கும் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து பொலிஸார் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிழந்த செல்லுகள் மற்றும் ஆர்.பி.ஜி. ரக குண்டுகளை உந்தித்தள்ளும் பழுதடைந்த கருவிகள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 8:30 pm

முஸ்லிம் மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த போன்று உடையணிவது நக்கலடிப்பதாக உள்ளதாம்

with one comment

ஸ்ரீ லங்கா மிரர்: பொது மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போதுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று உடையணிந்து மாணவர்கள் தோற்றம் அளிக்க அனுமதிக்கக் கூடாது என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க மத்திய மாகாண பாடசாலைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 8:29 pm

அல் குர்ஆன் பிரதிகளை எரித்த அமெரிக்க படைக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இன்று ஏழுபேர் வபாத்

leave a comment »

ஆப்கானிஸ்தானி இன்று இடம்பெற்ற அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது ஆப்கான் கர்சாய் படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஏழு பேர் வபாத்தாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 6:55 pm

பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை

leave a comment »

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த ஷெல் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.Video Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 6:35 pm

ஈராக்கில் மீண்டும் இலங்கைத் தூதரகம்

leave a comment »

ஈராக்கில் இலங்கைத் தூதரகத்தை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளுக்காக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யூ.எம்.செனவிரத்ன, ஈராக் சென்றுள்ளதாக அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 6:01 pm

யெமனுக்கு புதிய ஜனாதிபதி தெரிவு அப்துல்லாஹ் ஸாலிஹிக்கு முடிவு

leave a comment »

OurUmmah: நேற்று யெமனில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுள்ளது. இடம்பெற்ற இத்தேர்தலில் போட்டியிடும் ஒரே வேட்பாளரான உப ஜனாதிபதி அப்துர் ரப் மன்ஸூர் ஹாதி மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்று உத்தியோகபூர்மாற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  உத்தியோகபூர் முடிவு வெளியாக சில நாட்கள் ஆகும் என்று யெமன் செய்திகள் தெரிவித்துள்ளது.   விரிவாக …

Written by lankamuslim

February 22, 2012 at 10:27 am

ஜனாதிபதி சம்பந்தரிடம் என்ன கூறினார் ?

leave a comment »

ஜனாதிபதியின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள்  என்ன என்பன குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 9:14 am

அத்னானை விடுவிக்க ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இணக்கம் !!

leave a comment »

OurUmmah: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வதை முகாமில் -administrative detention-விசாரணை இல்லாமல் சிறையில் வதைக்கப்பட்டு வந்த பலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னான் தனது 66 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார். ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் Special Rapporteur on the situation of human rights in the Palestinian territories occupied since 1967.விரிவாக….

Written by lankamuslim

February 22, 2012 at 9:00 am

ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளவர்கள் உடன் பதிவு செய்துகொள்ளவேண்டும்

leave a comment »

2012 ஆம் ஆண்டு  ஹஜ் கடமையை நிறை வேற்ற தயாராகவுள்ளவர்கள் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு செய்யாதவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வது கஷ்டமாகும் என்று Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 8:56 am

இறுதித் தூதர் :கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்

leave a comment »

மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார். சமய கலாசார கல்விக்கான மன்றம் மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிங்கள மொழி பேசும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நடத்திய கட்டுரை போட்டியொன்றை நடத்தியது. Read the rest of this entry »

Written by lankamuslim

February 22, 2012 at 8:45 am

முஸ்லிம் அமைச்சர்களின் முயற்சிகளையும் மீறி அஷ்ரப் நகர் காணிகள் சூவீகரிக்கப் படுகிறதா ?

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷரப் நகருக்கு உட்பட்ட 87 ஏக்கர் நிலப் பரப்பைச் சூவீகரித்து தீகவாவி யுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட காணிக்கு வேலியிட்டு இராணுவ முகம் ஒன்று அமைக்கபட்டுள்ளதுடன் அவ்விடத்தில் தீகவாவி எனும் பெயர் பலகையும் Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 11:53 am

ஜெனீவா மீது திரும்பும் இலங்கையர் கவனம்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்:  ஜெனீவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறப்போகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கையில் இருந்து சுமார் 52 பேர் கொண்ட தூதுக் குழு கலந்து கொள்ளவுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று ஜெனீவா பயணமானார். குழுவின் ஏனைய உறுப்பினர்கள் இன்றும் நாளையும் ஜெனீவா பயணமாக உள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 10:27 am

அல்ஜெஸீராவின் பார்வையில் ஈரான் மீதான பொருளாதர தடையும் இலங்கையில் ஆர்பாட்டமும்

leave a comment »

ஈரான் மீதான பொருளாதர தடை இலங்கை பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடந்து இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்பட்டுள்ளதாகவும். ஈரான் மீதான பொருளாதர தடை இலங்கை ஈரானிடம் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் 93 வீதம் ஈரானின் எண்ணெய்யில் Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 10:04 am

அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

leave a comment »

இலங்கை இராணுவத்துக்குத் தண்டனை வழங்க எந்தவொரு சர்வதேச சக்தியாலும் இயலாது. நாட்டிற்கு எதிரான தீர்மானங்களுக்கு தலைமை தாங்கும் அமெரிக்காவுக்கு எதிராக அனைத்து இன மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

February 21, 2012 at 9:05 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,819 other followers