Archive for December 30th, 2011
புலிகள் இழைத்த கொடுமைகளை யாழ்.மாநகர சபையில் பேசமுடியாத மிக ஆபத்தான நிலை ?
இணைப்பு -2 யாழ் இஷாக்: யாழ்.மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. சபை ஆரம்பித்தவுடன் முதல்வரின் விசேட அனுமதி பெற்ற ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயக்காந், ‘சிறைகளில் வாடுவோரின் விரைவான விடுதலையும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையும்’ என்ற தலைப்பிலான பிரேரணை முன்வைத்து உரை நிகழ்த்தினார். Read the rest of this entry »
யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனதிற்கு எதிராக வழக்கு தொடருவோம் : அமைச்சர் ரிஷாத்
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது என கைத்தொழில் மூதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்திற்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சு ஜனவரி 17 இல் முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி தயாராகி விட்டதா ?
முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியை உருவாக்க எந்த ஏற்பாடுகளையும் காணமுடியவில்லை: அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவும் பேச்சுநடத்தித் தீர்மானிப்பார்கள் என பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் அரசாங்கக் குழுப் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
யாழ். பிரதி மேயராக ஒரு முஸ்லிம் நியமனம்
யாழ். பிரதி மேயராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இவர் விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்துள்ளார். Read the rest of this entry »
உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் 10 இடத்திற்குள் தெரிவான முஸ்லிம் மாணவர்கள்
2011 ஆம் ஆண்டு க.பொ.தா. உயர்தர பெறுபேறுகளுக்கமைய விஞ்ஞான, கணித கலை, வர்த்தக, பிரிவுகளில் சிறப்பு சித்தி பெற்ற முதல் 10 பேரின் பட்டியலை பரீட்சைகள் திணைக்க ஆணையாளர் அநுர எதிரிசிங்க நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். இதன்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி எம்.எஸ். பாத்திமா ஹாலிதா மூன்றாவதாகவும், கணித பிரிவில் கொழும்பு தேர்ஸ்டர்ன் கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம். ஜவாத் சாலி 10 ஆவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
புற்றுநோயை பரப்புகின்றதாக அமெரிக்கா ?: சாவிஸ் குற்றச்சாட்டு
அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றதா என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவரைத் தவிர பரகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகியோரும் Read the rest of this entry »
பாணந்துறையில் வர்த்தகர் கோடரியினால் வெட்டி கொலை
பாணந்துறை கொறக்கானை என்ற இடத்தில் வர்த்தகர் ஒருவர் கோடரியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் (28) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதையுடைய முகம்மது சித்தீக் என்பவர் என பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். Read the rest of this entry »







