Archive for December 15th, 2011
தொழுகைக்காக கடைகளை மூட அக்குரணை பிரதேச வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்
அஸ்லம் அலி: கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேசம் முஸ்லிம் வர்த்தகர்கள் தொழுகைக்காக தமது வர்த்தகங்களை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். அக்குரணை பிரதேசம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும் அங்கு 90 வீதமான வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்கு உரியதாகும். அங்குள்ள மஸ்ஜிதுகளில் பாங்கு -தொழுகைகான அழைப்பு- செய்யப்படும்போது முஸ்லிம் வர்த்தகர்கள் தமது கடைகளை குறித்த நிமிடங்கள் தொழுகைக்காக மூடிவிட ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். Read the rest of this entry »
இலங்கையில் சர்வதேச நடுத்தீர்ப்பு மையம்
இலங்கைக்கு அதிக வருவாயை ஈட்டித்தரவல்ல. சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் விரைவில் கொழும்பில் நிறுவப்படவுள்ளது என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதம் மூலம் வேறு நாடுகளில் வெவ்வேறு தரப்பினரிடையே ஏற்படும் வர்த்தக மற்றும் கட்டிட நிர்மாணத்துறை பிரச்சினைகள், தகராறுகள் போன்றவற்றை இங்கு விசாரித்து மத்தியஸ்தம் செய்து வைக்கப்படவுள்ளது. Read the rest of this entry »
சவூதி அரேபிய வர்த்தகர் குழுவுடன் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
F.M.பர்ஹான்: சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த உயர் வர்த்தகர்களைக் கொண்ட குழு இன்று -15.12.2011- வருகைதந்தனர். இலங்கையில் தொழில் முயற்சிகளில் முதலிடுவது தொடர்பாகவும், ஏனைய சமூக பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை அவரது அமைச்சில் சந்த்திந்து கலந்துரையாடினர். Read the rest of this entry »
கள்ளியங்காட்டு க (தை)தா நாயகன் பித்தன் ஷா கலந்தர் லெப்பை முஹம்மது ஷா ஒரு நினைவோட்டம்
எஸ்.எம்.எம்.பஷீர்
கள்ளியங்காட்டு க (தை)தா நாயகன் பித்தன் ஷா (கலந்தர் லெப்பை முஹம்மது ஷா ( 31. 07.1921 – 15.12.1994): ஒரு நினைவோட்டம்: “உண்மையும் உருவமற்றுப் போய்விட்டதோ? எல்லாமே பைத்தியக்காரத்தனம் சீ…!” பித்தன் (பாதிக் குழந்தை) மட்டக்களப்பு கள்ளியங்காட்டு முஸ்லிம் கொலனியில் வாழ்ந்து, உள்நாட்டில் ஏதிலியாகி அங்கேயுள்ள முஸ்லிம் மையவாடியில் அடக்கப்பட்ட (கிழக்கிலங்கையின் சிறு கதை இலக்கிய முன்னோடியான மறைந்த பித்தன் ஷா மரணித்து இன்றுடன் பதின் ஏழு வருடங்களாகின்றன.கள்ளியங்காட்டு கிராமத்தின் உயிர்நாடியாய் திகழ்ந்த கிழக்கின் முஸ்லிம் சிறுகதை இலக்கிய பிதாமகனை கள்ளியங்காடு முஸ்லிம் Read the rest of this entry »
யாழ்ப்பாணம் உஸ்மானியா கல்லூரிக்கு புதிய அதிபர்
யாழ்ப்பாணம் உஸ்மானியா கல்லூரிக்கு புதிய தகைமையுள்ள அதிபர் ஒருவரை விரைவில் நியமித்து அப்பாடசாலையின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு யாழ். உஸ்மானியாக் கல்லூயின் பழைய மாணவர் சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜஹான்கீர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் யுத்தம் நிறைவடைந்து சமாதான சூழ்நிலை Read the rest of this entry »
ஜனாதிபதியின் மகன் சட்டத்தரணியாக பதவியேற்பு
பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலரும் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டனர். Read the rest of this entry »









