Lankamuslim.org

One World One Ummah

ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது

with one comment

அபூ அய்யூப் முஹம்மத்
ஒவ்வொரு அநியாயக்காரனினதும் சர்வாதிகாரியினதும் தவனை முடிவுக்கு வருகிறது. புதியதோர் எதிர் காலத்துக்கு ஆல்லாஹுத் தஆலா அடித்தளமிடுகிறான்: அநியாயக்காரன் இம்மையிலும் மறுமையிலும் எவ்வாறான இழிவுகளை அடைவான் என்பதற்கான மற்றுமோர் உதாரணமே கடாபியின் தோல்வியாகும்.

கடாபியையும் அவனது சர்வாதிகார ஆட்சியையும் இல்லாமல் செய்தமை விசுவாசிகளுக்கு மிகச் சிறப்பான ஒரு செய்தியாகும். وَبَشِّرِ الْمُؤْمِنِينَ 10:87. மேலும்இ நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!’ ஜ10:87ஸ இவன் தனது 42 வருட சர்வாதிகார ஆட்சியில் ஆயிரக்கணக்கானோரை படுகொலை செய்து, பல்லாயிரக்கணக்கானோரை சித்திரவதை செய்து, மில்லியக் கணக்கானோருக்கு சொல்லொனா அநியாயங்களைப் புரிந்தான். தன்னை எதிர்த்தனர் என்பதற்காக சிலரையும் இஸ்லாமிய நம்பிக்கை பற்றி தான் கொண்டிருந்த சிந்தனைக்கு எதிராக, குறிப்பாக நபிகளாரின் சுன்னாவை மறுத்த போது தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்டனர் என்பதற்காக இன்னும் பலரையும் கொலை செய்தான்.சிறையிலடைத்தான். துன்புறுத்தினான்.

இவன் தான், மேற்குலகின் குறிப்பாக பிரித்தானியா, இத்தாலி போன்ற நாடுகளின் விருப்பு வெறுப்;புக்களை ஆபிரிக்காவில் நிறைவேற்றி வந்தவன். கடாபியை நேடோ படை எதிர்த்துப் போராடியது என்பது மக்களின் புரட்சியோடு கலக்கப்பட்ட ஒரு நாடகமே. பிரித்தானிய பொலிஸ் அதிகாரியைக் கொன்றான், ஐ ஆர் ஏ என்ற பயங்கரவாத அமைப்புக்கு உதவினான் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு பிரத்தானிய வரலாற்றின் மிகப் பெரிய பயங்கரவாதி எனக் கருதப்பட்ட போதிலும் பிரித்தானியாவின் முன்னால் பிரதம மந்திரி டோனி பிளேயர் கடாபியை கட்டித் தழுவியமையைக் கண்டோம்.

‘டோனி பிளேயரை’த் தொடர்ந்து வந்த ‘கோடன் பிரவுன்’ நத்தார்ப் பண்டிகை வாழ்த்து அட்டை அனுப்பியமையும், தற்போதைய பிரதமர் டேவிட் கமரூனோ, கடாபியின் ஆட்சி முடிந்து விட்டது என்ற இறுதிக் கட்ட நிலையில் தான் கடாபிக்கு எதிராக கருத்துக் கூறியமையும், 2011 ம் ஆண்டு வரை கனரக ஆயுதங்களை கடாபிக்கு விற்பனை செய்தமையும் கடாபியின் மகனோடு மிக நெருக்கமான உறவை பேணி வந்தமையும் அவதானிக்கத் தக்கது.

லிபியாவின் மக்களோ அயலில் உள்ள அரபு ஆட்சிகளின் உதவிகள் கிடைக்காததன் காரணமாக நேடோ படைகளின் உதவியைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர். நேடோவின் பங்களிப்பு கடாபி, முபாரக், பென் அலீ, பஷார அல் அஸத், அலீ அப்தல்லாஹ் ஸாலிஹ், பஹ்ரைனின் ஹம்மாத் பின் ஈஸா, மற்றும் அல் ஸஊத் பரம்பரையின் முடி ஆட்சி ஆகிய அநியாயக்கார சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு உதவுவதாகவே உள்ளது. நேடோவின் செயல்கள் எப்போதும் சுய லாபம் கருதியதாகவே உள்ளது..ஒரு போதும் மனிதாபிமானம் என்ற ரீதியில் இருந்ததேயில்லை.

கடாபியின் கேவலமான முடிவு உலகெங்கும் பரவிய இந்த வேளையில் ஒவ்வொரு அநியாயக்காரனும் சர்வாதிகாரியும் தத்தமது தவனையும் முடிவுக்கு வந்து விட்டது என்பதை கண்கூடாகப் பார்த்து பாடங்களைக் கற்றுக் கொள்ளட்டும். புதியதோர் எதிர்காலத்துக்கு ஆல்லாஹுத் தஆலா அடித்தளமிடுகிறான் என்ற நல்லுணர்வை எமது சமூகம் பெற்றுக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தின் நீதி மட்டும் தான் தமக்கு பாதுகாப்பையும் சாந்தி சமாதானத்தையும் நிச்சியம் தரும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தும் பணி புரியும் போது நிச்சியமாக அல்லாஹ் வாக்களித்த அனைத்தும் நிறைவேறியே தீரும்.

24:55 وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا ۚ يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا ۚ وَمَن كَفَرَ بَعْدَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ

24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களைஇ அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல்இ பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும்இ இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும்இ அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும்இ அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; ‘அவர்கள் என்னோடு (எதையும்இ எவரையும்) இணைவைக்காதுஇ அவர்கள் என்னையே வணங்குவார்கள்;’ இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

Written by lankamuslim

October 21, 2011 at 8:42 am

One Response

Subscribe to comments with RSS.

  1. லிபியாவின் மக்களோ அயலில் உள்ள அரபு ஆட்சிகளின் உதவிகள் கிடைக்காததன் காரணமாக நேடோ படைகளின் உதவியைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர். நேடோவின் பங்களிப்பு கடாபி, முபாரக், பென் அலீ, பஷார அல் அஸத், அலீ அப்தல்லாஹ் ஸாலிஹ், பஹ்ரைனின் ஹம்மாத் பின் ஈஸா, மற்றும் அல் ஸஊத் பரம்பரையின் முடி ஆட்சி ஆகிய அநியாயக்கார சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு உதவுவதாகவே உள்ளது. நேடோவின் செயல்கள் எப்போதும் சுய லாபம் கருதியதாகவே உள்ளது..ஒரு போதும் மனிதாபிமானம் என்ற ரீதியில் இருந்ததேயில்லை

    very nice

    ala

    October 23, 2011 at 12:19 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers