Lankamuslim.org

One World One Ummah

Archive for September 2011

இலங்கைக்கு எதிரான குறிப்பிட்ட சில நாடுகள் செயல்படுகின்றது

leave a comment »

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்தமாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து இலங்கைக்கு எதிரான குறிப்பிட்ட சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.இம்மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி   வரை மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் நகரில் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 30, 2011 at 9:59 pm

தொம்பே பிரதேசத்தில் பதட்டம்

leave a comment »

கம்பஹா மாவட்டம் தொம்பே பிரதேசத்தில் போலீஸ் தடுப்பு காவலில் இருந்த ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பில் தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதலை நடத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களையும் தீட்டுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றது இதன்போது போலீஸ் நிலையம் மீதும் தீபரவியுள்ளதுVideo Read the rest of this entry »

Written by lankamuslim

September 30, 2011 at 3:51 pm

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 95 பேர் கைது

leave a comment »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .சுவரொட்டிகள் எடுத்துச் செல்லப்பட்ட 18 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியதாக தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் 85 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

September 30, 2011 at 8:52 am

வர்த்தக தலைநகராக ஹம்பாந்தோட்டே

with one comment

கொழும்பின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் ஹம்பாந்தோட்டைக்கு நகர்த்தி அதனையே இலங்கையின் வர்த்தகத் தலைநகரமா மாற்றும் திட்டம் குறித்து தற்போது அரசு ஆராய்ந்து வருவதாக துறைமுக அதிகார சபையின் தலைவரான கலாநிதி பிறியத் பந்துல விக்கிரம தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை நகரை வர்த்தக மற்றும் தொழில் நுட்ப  நகரமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு  நகரை வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு திட்டமொன்றினை செயற்படுத்த கடந்த ஜூன் Read the rest of this entry »

Written by lankamuslim

September 30, 2011 at 8:44 am

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை

leave a comment »

ஓய்வு பெற்ற அரச அலுவலர்களும் பயன்பெறவெனத் திருத்தப்பட்ட 28/2010 சுற்றறிக்கையின் நன்மைகளுக்கு தகுதி பெற்ற சகலரும் தம் திணைக்களத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோக்கை விடுத்துள்ளது.

மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ““2006 வரவு செலவுத் திட்டதின் Read the rest of this entry »

Written by lankamuslim

September 30, 2011 at 8:00 am

சியாரம்: பெளத்த சாசன அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர் ஒருவர் இடமாற்றம்

with 2 comments

வட மத்திய மாகாணமான அநுராதபுரம் பழைய நகர் பகுதியில் பெளத்த மதகுருமாரார் தலைமை தாங்கிய பெளத்த மதக் குழுவொன்றினால்  பழமையான ஸியாரம் ஒன்று உடைத்து தகர்ப்பட்டது
தொடரில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செலாளர்களுள் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2011 at 7:59 pm

நீதியமைச்சரின் முஸ்லிம் சமூகத்துக்கான புதிய திட்டங்கள்

with one comment

ஏ.அப்துல்லாஹ்: நாட்டில் அலிலுள்ள முஸ்லிம் காதி சிவில் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகள் ஓரு வாரங்களில் நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளன என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த புதன்கிழமை கொழும்பு பிரதேச மஸ்ஜிதுகளின் கதீப் மார்கள் , மத்ரஸாகளின் உஸ்தாத்மார்களையும் , உலமாக்ளையும் தனது அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2011 at 8:59 am

வடக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில் தீர்வு

leave a comment »

முஹம்மத் ஜான்ஸின்
யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இந்த விடயத்தை சமுதாய நலன் விரும்பிகள் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

யுத்தங்கள் மூலம் பாரிய உயிரழிவுகளை சந்தித்த ஒவ்வொரு நாடும் பிரதேசமும் இவ்வாறான வன்முறைகளை எதிர் நோக்கியதையே வரலாறு நமக்கு கற்றுத் தந்துள்ளது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னரும் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னரும் இவ்வாறான நிலமைகள் ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் ஆட்கொண்டிருந்தன. Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2011 at 8:35 am

பொதுமக்கள் பொலிசாருக்கு எதிராக முறையிட ஏற்பாடு

leave a comment »

முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு வழங்கப்படும் சீட்டுப்பத்திரத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடைய தொலைபேசி இலக்கங்களை குறிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இது கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர். கோட்டத்திற்குப் பொறுப்பான Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2011 at 8:30 am

கரையொதுங்கிய டால்பின்களின் எண்ணிக்கை மிக அதிகம்

leave a comment »

கிழக்கு மகாணம் கல்முனை கடலோரத்தில் இயல்புக்கு மாறாக டோல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கியுள்ளதாக கல்முனைப் பகுதி மீனவர்களும், மீனவ அமைப்புகளும் தெரிவித்துள்ளன. Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2011 at 8:15 am

ஓபாமா: அமெரிக்காவின் முதல் யூத ஜனாதிபதியா ?

leave a comment »

அஷ்ஷெய்க் எஸ் .எம்  மஸாஹிம்(இஸ்லாஹி)
OurUmmah:பலஸ்தீன அபாஸ் நிர்வாகம் ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை இறைமையுள்ள சுதந்திர தனி நாடாக “sovereign, independent state” அங்கீகாரம் வழங்குமாறு கடந்த 16 ஆம் திகதி கோரியுள்ளது அந்த கோரிக்கை பெரும்பாலும் அமெரிக்கா, மற்றும் பிரிட்டனின் முயற்சியால் அமெரிக்காவின் வீட்டோவை பயன்படுத்தாமலேயே நிராகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

இன்னும் சில தினங்களில் அதன் முடிவு தெரிந்து விடும். அமெரிக்காவும் பிரிட்டனும் மற்ற நாடுகளை குறிப்பாக ஐ.நா பாதுகாப்பு சபை அங்கத்துவ நாடுகளை கோரிக்கையை நிராகரிக்குமாறு அழுத்திவருகின்றது  விரிவாக பார்க்க

Written by lankamuslim

September 28, 2011 at 11:57 pm

சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கு இலங்கை விசேட அதிரடிப்படை

leave a comment »

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மாநாட்டின் பாதுகாப்பிற்கு விசேட அதிரடிப்படை அதன் முழு பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளுடன் செல்லவுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 28, 2011 at 11:08 pm

கிழக்கின் முஸ்லிம் முதலமைச்சர் குரங்கு அப்பம் பிரித்த கதையாகுமோ ?

with 2 comments

ஏ.அப்துல்லாஹ்: கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே செல்வாக்கை இழந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் முதலமைச்சரைக் கோருவது மிகவும் வேடிக்கையாகவுள்ளதாக சுட்டிக்காட்டும் கிழக்கு மாகாண அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தங்களது கட்சிக்குள்ள மக்கள் ஆதரவை தேர்தலில் நிரூபித்துக் காட்டுமாறும் சவால் விடுத்துள்ளதுடன்

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அதிக செல்வாக்கை பெற்ற கட்சியாக அமைச்சர் ரிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) உள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 28, 2011 at 9:01 am

கிண்ணியா வலயக் கல்வி அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நேர்முகப் பட்சை

leave a comment »

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பட்சை நாளை 29 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கிண்ணியா எகுத்தார் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது . Read the rest of this entry »

Written by lankamuslim

September 28, 2011 at 8:09 am

பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களுக்கும் தலைமைத்துவ பயிற்சி

leave a comment »

நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களின் சிரேஷ்ட பட்டதாரி மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி விரைவில் வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச் சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரட்ண தெரிவித்துள்ளார்.

இந்த சிரேஷ்ட பட்டதாரி மாணவர்களுக்கு ஒரு வர்த்தக நிலையத்தை நடத்துதல், நிர்வாகத்துறை பயிற்சி உட்பட சகலவிதமான அம்சங்களையும் உள்ளடக்கக்கூடிய வகையில் பயிற்சி அளிக்கப்படும். Read the rest of this entry »

Written by lankamuslim

September 28, 2011 at 7:38 am

ரிஸானா நபீகைக்கை சவூதிக்கு அனுப்பியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

leave a comment »

இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீகை சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் தொடரந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த வயதுடைய ரிஷானா நபீகை சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதற்காக அவர் 27 வயது நிரம்பியவர் என போலி ஆவணங்களை தயாரித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென குற்றத்தடுப்புத் திணைக்களம் நிதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 27, 2011 at 9:11 pm

சவூதியில் வபாத்தானவரின் ஜனாஸா நல்லடக்கம்

leave a comment »

சில தினங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மாத்தறை பதூதா வீதியைச் சேர்ந்த ஏ.எஸி.எம். பைரூஸ்என்ற ௩௪ வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை வபாத்தானார் என்று சவூதி செய்திகள் தெரிவித்தன அன்னாரின் ஜனாஸா சவூதி அரேபியாவில் கடந்த 24 ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 27, 2011 at 8:56 pm

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பிலும் மேர்வின் தொடர்பிலும் விக்கிலீக்ஸ்

with one comment

இலங்கை அரசாங்கத்தில் போதைப் பொருள் வர்த்தகர்களும் அங்கம் பெறுகின்றனர் எனவும் இவர்களில் பிரதான நபராக பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டாக்டர் மர்வின் சில்வா விளங்குகிறார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா புட்டின்ஸ் “SRI LANKA NABS DRUG TRAFFICKERS” என்ற உப தலைப்பில் Read the rest of this entry »

Written by lankamuslim

September 27, 2011 at 5:48 pm

கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சருக்கான உத்தரவாதம் வேண்டும்

with 4 comments

அடுத்து வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றும்.

கிழக்கை ஆள வேண்டும் என அரசாங்கம் விரும்பினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கல்முனைக்கு வந்து முஸ்லிம் முதலமைச்சரை உத்தரவாதப்படுத்த வேண்டும். இல்லையேல் அத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் என்று பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

September 27, 2011 at 9:21 am

கல்வி செயல்பாடுகள் இராணுவ மயப்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

leave a comment »

கல்விச் செயற்பாடுகள் இராணுவ மயப்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசியர் சங்கம், தனது 54 ஆவது வருடாந்-த மாநாட்டின் ஊடாகக் கோ-க்கை விடுத்துள்ளது.

அனுராதபுரம் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் சங்கத் தலைவர் சி.ஜயதுங்க, உபதலைவர்களான எஸ்.சிவராஜ்குமார், ஜே.ஜயசிங்க, எச்.எல். சமீன், வசந்தி திசாநாயக்க ஆகியோர் உளளிட்ட குழுத்தலைமையில்  நடைபெற்ற இந்த மாநாட்டில்  நாடெங்கிலும் இருந்து பெரும் எண்ணிக்கையான பேராளர்கள் இதில் Read the rest of this entry »

Written by lankamuslim

September 27, 2011 at 8:49 am

சவூதி அரேபியாவில் பெண்களும் வாக்களிக்கலாமாம் !

leave a comment »

சவூதி அரேபியாவில் அரசாங்க உயர் நிர்வாகங்களை தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கபடவில்லை அங்கு மன்னர் ஆட்சி நடைபெறும் என்பதால் சிறிய அதிகாரம் குறைந்த அலகுகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கபட்டது அதில் ஆண்கள் பங்குகொள்ளும் நிலை தோன்றினாலும் பங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை தற்போது பெண்களும் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி முழுவதும் அதன் நிர்வாகம் எங்கும் மன்னர் குடும்பம் என்ற நிலைதான் இருக்கிறது. இஸ்லாத்தின் முக்கிய மக்கா, மதீனா தளங்களை கொண்டுள்ள Read the rest of this entry »

Written by lankamuslim

September 26, 2011 at 10:33 pm

வடமாகாண முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்

with one comment

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு தமது சொந்ததக்காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும் அவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாய்திறக்காதிருப்பது கவலையளிக்கிறது என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச். எம். அஸ்வர்  தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகலிருந்து எந்தவொரு நபரையும் அப்புறப்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாகவும் Read the rest of this entry »

Written by lankamuslim

September 26, 2011 at 9:55 am

தேர்தலின் பின் இணை நகர அபிவிருத்தி அதிகார சபை

leave a comment »

இணை நகர அபிவிருத்தி அதிகார சபையை நிறுவுவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கான சட்டத்தை தயாக்கும் நடவடிக்கைகளில் சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுகின்றது.

எதிர்வரும் 08 ஆம் திகதி நடத்தப்பட விருக்கின்ற முன்றாம் கட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் இந்த இணை நகர அபிவிருத்தி அதிகாரபையை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 26, 2011 at 9:02 am

பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத்துடனான பேட்டியின் முழுவடிவம்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் எழுத்தாளருமான பசீர் சேகுதாவூத்தை lankamuslim.org பேட்டி கண்டது இதன் போது எம்முடன் அவர் பகிர்ந்தவற்றை நான்கு பகுதிகளாக பதிவு செய்திருந்தோம் தற்போது அந்த போட்டி முழுவதையும் பதிவு செய்கின்றோம்.

முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் அடிக்கடி முஸ்லிம் தேசியம் என்ற பிரயோகத்தை பயன்படுத்துபவராக நீங்கள் இருகின்றீர்கள் என்ற வகையில் முஸ்லிம் தேசியம் என்று எதை நீங்கள் அடையாளப் படுத்துகின்றீர்கள் ? Read the rest of this entry »

Written by lankamuslim

September 26, 2011 at 8:14 am

காத்தான்குடி கல்விச் சாதனையை கண்டுகொள்ளத் தவறிய அரசியல்வாதிகள்

with one comment

அபூ றப்தான்
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்த காத்தான்குடி மாணவியை பாராட்டுவதற்கு காத்தான்குடியிலுள்ள அரசியல்வாதிகள் தவறி விட்டனர்.

தமது அரசியல் நடவடிக்கைளுக்காகவும் இலாபங்களுக்காகவும் எதையும் செய்யத்துணியும் இந்த அரசியல்வாதிகள் இவ்வாறான கல்விச்சாதனை ஈட்டும் மாணவர்களை கண்டு கொள்ளாமல் விடுவது அவர்களின் அரசியல் பலவீனத்தையே காட்டுகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 26, 2011 at 8:02 am

காணிகளுக்கு விண்ணப் பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்

leave a comment »

அம்ஹர்: கிழக்கு மாகாணத்தில் காணி அற்றவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கான விண்ணப்பங்களை மாகாண காணி நிர்வாக திணைக்களம் கடந்த 16 ஆம் திகதி கோரியிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை கிழக்கின் சகல கிராம சேவையாளர்களிடமும் இலவசமாக பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டது இந்த தகவல் மீண்டு நினைவூட்ட பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 25, 2011 at 2:08 pm

ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணை

leave a comment »

ஐநாவுக்கான இலங்கையின் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமொன்று அழைப்பாணை விடுத்துள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக தெற்கு நியூயோர்க்கிலுள்ள Read the rest of this entry »

Written by lankamuslim

September 25, 2011 at 1:22 pm

பொத்துவிலுக்கான கல்வி வலயம் வேண்டும்

leave a comment »

அம்ஹர்: நீண்ட காலமாக பொத்துவில் மக்களின் பொத்துவிலுக்கான கல்வி வலயம் என்ற கோரிக்கை நிறைவேற்றபாடாமல் இழுத்தடிக்க படுவதாக பொத்துவில் பிரதேச கல்வியாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கடந்த வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் பொத்துவில், கின்னியா, ஓமரங்கடவல ஆகிய மூன்று கல்வி கோட்டங்களும் உப வலயக் கல்வி அலுவலகமாக இயங்கி வந்தன. Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2011 at 8:46 pm

செய்மதி விழுந்த இடத்தை நாசா தேடிவருகின்றது

leave a comment »

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செயலிழந்த 6 தொன் எடையுள்ள UARS எனும் செய்மதி இன்று பூமியில் விழுந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. பசுபிக் சமுத்திரத்திற்கு மேலாக உள்ள விண்வெளியை ஊடறுத்து நுழைந்து விட்டதாகவும் எனினும் எந்த இடத்தில் விழுந்தது என உறுதியாகத் தெரியவில்லை எனவும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2011 at 2:07 pm

சில அரசியல்வாதிகள் பிரதேசவாதத்தை தூண்டி அரசியல் இலாபம் அடைய முயற்சிகின்றனர்

with 4 comments

மக்கள் மத்தியில் பிரதேசவாதத்தை தூண்டி அரசியல் ரீதியாக மக்களை பிரித்தாள்வதற்கு எனது பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர். என்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பார்சன அமைச்சர் எஸ். எம் .உதுமான் லெப்பை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதற்கு முன்பு அன்றைய அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் பிரதேசவாதத்தை தூண்டி பிரதேச ரீதியாக மக்களை பிரித்து வைத்து அரசியல் பிழைப்பு நடாத்திய வரலாறுகளை நாம் மறக்கவில்லை.முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை மர்ஹூம் அஷ்ரப் ஆரம்பித்ததன் பின் பிரதேசவாத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2011 at 2:00 pm

பெளத்த அமைப்பு ஒன்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

leave a comment »

கொள்ளுப்பிட்டி  லிபேர்டி வர்த்தக கட்டிடத் தொகுதியில் இயங்கிவரும் ”லோடஸ் புத்திஸம்” -தாமரை பௌத்தம்- என்ற பெளத்த மத பிரிவு ஒன்றின் நிறுவனதிற்க்கு எதிராக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குகள்  கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2011 at 10:47 am

ஐநா பொதுச் சபையில் உறுதியும் உருக்கமும் கொண்ட ஜனாதிபதி உரை

leave a comment »

ஏ. அப்துல்லாஹ் : ஐநா சபையின் 66 பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நேற்று இலங்கை நேரப்படி இரவு 9.00 மணியளவில் உரை நிகழ்த்தினார். அவரின் உரையின் முக்கிய பகுதிகள் இங்கு தமிழில் தருகிறோம் தனது உரையின் தொடக்கத்தில் ஐநா சபை கொண்டுள்ள நெகிழும் தன்மை அதன் அவசியம் பற்றி பேசியதுடன்

பலஸ்தீன அப்பாஸ் நிர்வாகம் ஐநாவில் முன்வைத்துள்ள பலஸ்தீனை சுதந்திர நாடாக அங்கீகரிக்க கோரும் பிரேரணைக்கு ஆதரவாக உரையாற்றினார். ஜனாதிபதி பலஸ்தீன கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும்Video Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2011 at 9:10 am

தர்க்கா தகர்ப்பும் தர்க்கங்களும் -அனுராதபுர அட்டகாசம்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
பகுதிஒன்று: அனுராதபுரத்தில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பிரதேசமாக பிரகடனப்படுத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ளதாக குறிப்பிடப்படும் முஸ்லிம் மக்களின் சமயத்துடனும் கலாச்சாரத்துடனும் அடையாளம் காணப்படும் சியாரம் ஒன்றினை சிங்கள பவுத்த பிக்குகள் சிலரும் சிங்கள பவுத்த இளைஞர்கள் சிலரும் சேர்ந்து தரைமட்ட மாக்கியிருக்கிரார்கள்.

அதுவும் இலங்கையின் காவற் துறையினர் கைகட்டி பார்த்து நிற்க இந்த மனித உரிமை மீறல் , சட்ட விரோத சம்பவம் நடை பெற்றிருக்கிறது. இதனனால் அப்பிரதேச முஸ்லிம் மக்கள் ஆத்திர முற்றிருக்கிரார்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2011 at 8:50 am

ஐநா பொதுச் சபையை அதிரவைத்த ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத்

with 8 comments

ஏ.அப்துல்லாஹ்: ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் நியூயோர்க் ஐநா தலைமையகத்தில் உலக பொருளாதார அபிவிருத்தி பற்றி உரையாடியுள்ளார் இங்கு உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் உலகம் தொடர்பான இஸ்லாமிய கோட்பாட்டை முன்வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார்.

பொதுச் சபையை கேள்வி கணைகளினால் அதிரவைதுள்ளார்.  உலகம் புதிய ஒழுங்கு முறை ஒன்றுக்கு வரவேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று உரையை ஆரம்பித்தவர் Video Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2011 at 7:25 pm

முஸ்லிம்களுக்கு தேசம், தேசியம் என்ற எல்லைகள் கிடையாது

with one comment

M.ரிஸ்னி முஹம்மட்: வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் எழுத்தாளருமான பசீர் சேகுதாவூத்துடன் lankamuslim.org சில குறித்த விடயங்கள் தொடர்பில் பேட்டி கண்டது இதன் போது எம்முடன் அவர் பகிர்ந்தவற்றில் இறுதிப் குதியை இங்கு பதிவு செய்கின்றோம்.

பிரதேசவாதம் எப்படி தேசிய முஸ்லிம் அரசியலை பாதிக்கின்றது ? அதை எவ்வாறு தடுப்பது ? பிரதேசவாதம் தேசிய முஸ்லிம் அரசியலை மிகவும் பாதித்துள்ளது. பாதித்து வருகின்றது  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேசிய அரசியலில் தோற்ற இடமும் அதுதான் . Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2011 at 5:19 pm

முஸ்லிம் காங்கிரஸும் இஸ்லாமிய தஃவா இயக்கங்களும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

with 3 comments

M.ரிஸ்னி முஹம்மட்: வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் எழுத்தாளருமான பசீர் சேகுதாவூத்துடன் lankamuslim.org சில குறித்த விடயங்கள் தொடர்பில் பேட்டி கண்டது இதன் போது எம்முடன் அவர் பகிர்ந்தவற்றில் மற்றுமொரு குதியை இங்கு பதிவு செய்கின்றோம்.

அரபு முஸ்லிம் உலகின் இன்று ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சி -துருக்கிய இஸ்லாமிய அரசியல் எழுச்சி , மற்றும் துனூசியா தொடக்கம் லிபியா வரை எழுந்துள்ள எழுச்சி  இலங்கையில் படித்த முஸ்லிம் மட்டங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2011 at 4:52 pm

முஸ்லிம்கள் உள்ளிட்ட எவரும் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள்

leave a comment »

முஸ்லிம் மக்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு வாழ் முஸ்லிம் மக்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் பொய்யானவை. முஸ்லிம்கள் உள்ளிட்ட எவரும் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள், மாறாக நகரத்தினரும் மக்களினதும் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2011 at 1:11 pm

ஐநா பொதுச் சபையில் ஜனாதிபதி இன்று உரைநிகழ்த் தவுள்ளார்

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொதுச் சபைத் தொடரில் இலங்கை நேரப்படி இரவு ஒன்பது மணியளவில் ஜனாதிபதி உரைநிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐநா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2011 at 10:02 am

செயலிழந்த செயற்கைக்கோள் இன்று பூமியை தாக்கும்

leave a comment »

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள் பல ஆண்டுகளுக்கு செயலிழந்த நிலையில் இன்று பூமியைத் தாக்கலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 1991ம் ஆண்டு 3,525 கோடி ரூபாய் செலவில் யூ.ஏ.ஆர்.எஸ். என்ற உயர் வளிமண்டல ஆராய்ச்சி செயற்கைக் கோளை ஏவியது. இது பூமியின் வளிமண்டலம் குறித்த தகவல்களை திரட்டித் தந்து கொண்டிருந்தது. 14 ஆண்டுகள் தகவல்களை அனுப்பிய யு.ஏ.ஆர்.எஸ். 2005ம் ஆண்டு செயலிழந்தது.Video Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2011 at 9:18 am

கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயர்களின் படங்கள் அகற்றம்

leave a comment »

கொழும்பு மாநகர சபைக்குரிய கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கொழும்பு மாநகர மேயர்களின் படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டிருப்பதாகவும் இதன் பின்னணியில் மாநகர உயரதிகாரிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது.

நேர்மையற்ற இந்தச் செயற்பாடுகள் குறித்து மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான் ,ஜயந்த டி சில்வா ஆகியோர் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரண துங்கவின் கவனத்துக்கு Read the rest of this entry »

Written by lankamuslim

September 22, 2011 at 11:44 pm

முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு என்பது முன்னால் ஜனாதிபதி சந்திரிக்காவின் சிபாரிசு: பசீர் சேகுதாவூத்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்: வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் எழுத்தாளருமான பசீர் சேகுதாவூத்துடன் lankamuslim.org  சில குறித்த விடயங்கள் தொடர்பில் பேட்டி கண்டது  இதன் போது எம்முடன் அவர் பகிர்ந்தவற்றில் மற்றுமொரு குதியை இங்கு பதிவு செய்கின்றோம். முள்ளிவாய்காலுக்கு பின்னரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

தமிழ் அரசியல் தரப்புக்கும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் தரப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையான முரண்பாடான விடையமாக பார்க்கப்படும் வடக்கு கிழக்கு இணைவதா ?  பிரிவதா ? என்ற விடயம் இது தொடர்பாக என்ன தெரிவிக்கின்றீர்கள். Read the rest of this entry »

Written by lankamuslim

September 22, 2011 at 5:43 pm

முஸ்லிம் தேசியம் படு பாதகமான பின்னடைவை சந்தித்துள்ளது: பசீர் சேகுதாவூத்

with 4 comments

M.ரிஸ்னி முஹம்மட்: வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் எழுத்தாளருமான பசீர் சேகுதாவூத்துடன் lankamuslim.org சில குறித்த விடயங்கள் தொடர்பில் பேட்டி கண்டது  இதன் போது எம்முடன் அவர் பகிர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றோம்.

முஸ்லிம் அரசியல் வாதிகள் மத்தியில் அடிக்கடி முஸ்லிம் தேசியம் என்ற பிரயோகத்தை பயன்படுத்துபவராக நீங்கள் இருகின்றீர்கள் என்ற வகையில் முஸ்லிம் தேசியம் என்று எதை நீங்கள் அடையாளப் படுத்துகின்றீர்கள் ? Read the rest of this entry »

Written by lankamuslim

September 22, 2011 at 5:19 pm

திருட்டுத் தனமாக மாடுகளை அறுப்பவர் களையே எச்சரித்தாராம்

with 6 comments

அமைச்சர் மேர்வின் சில்வாவின் சில செயல்பாடுகளினால் முஸ்லிம்கள் மத்தில் அச்சம் மற்றும் விசன நிலை ஏற்படிருந்தது இது தொடர்பாக பல முஸ்லிம் அரசியல் வாதிகள் கருத்துரைதிருந்தனர். இந்த நிலையில் இன்று கொழும்பு தெவடகஹ பள்ளிவாசலுக்கு சென்றுள்ள அமைச்சர் திருட்டுத் தனமாக மாடுகளை அறுப்பவர்களையே தான் எச்சரித்தேன். மாற்றமாக முஸ்லிம்கள் மாடு அறுப்பதையோ குர்பான் கொடுப்பதனையே தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படியே மாடுகளை அறுக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் போது மஸ்ஜிதுக்கு நன்கொடை Read the rest of this entry »

Written by lankamuslim

September 22, 2011 at 4:18 pm

தேசிய அடையாள அட்டையில் தொப்பிகான தடை நீக்கம்

leave a comment »

முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிந்த நிலையில் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர அறிவித்துள்ளார்.

இதன் படி இனிமேல் முஸ்லிம் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய முஸ்லிம்களும் தலையை மூடிய நிலையில், நெற்றியோ, Read the rest of this entry »

Written by lankamuslim

September 22, 2011 at 1:23 am

தூக்குத் தண்டனை என்ற நிலையிலேயே அரசு சிக்கிக் கொண்டுள்ளது

leave a comment »

அரசாங்கத்தின் தலைவிதி ஆபத்தானதாகவே அமைந்துள்ளது. சர்வதேசத்திடம் அடிபணிந்தாலும் தூக்கினை எதிர்த்தாலும் தூக்குத் தண்டனை என்ற நிலையிலேயே அரசு சிக்கிக் கொண்டுள்ளது.

எனவே உள் நாட்டில் குழப்பகரமான சூழல்களை ஏற்படுத்தாது பொதுமக்களின் ஆதரவை முழு அளவில் பெற்றுக்கொண்டு சர்வதேச போர்க்குற்ற சவாலை எதிர்கொண்டால் மாத்திரமே அரசாங்கம் தப்பிக்க முடியும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 21, 2011 at 1:26 pm

மிலிந்த, ஜம்இய்யதுல் உலமா சந்திப்பு

leave a comment »

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்துக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளர் மிலிந்தமொரகொட விஜயம் மேற்கொண்டு ஜம்இய்யதுல் உலமாவின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றினார் இதன்போது கொழும்பு நகரில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கியுள்ளார்.

குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் தொடர்பான தமது திட்டங்களை விளக்கவுள்ளனர். கொழும்பு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் Read the rest of this entry »

Written by lankamuslim

September 20, 2011 at 7:35 pm

ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன்: நீதியமைச்சர்

with 24 comments

‘அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன்.

ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்’ என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

September 20, 2011 at 6:16 pm

பேரினவாதிகளின் அடுத்த இலக்கு ஜெயிலானி

with 6 comments

பேரினவாதிகளின் அடுத்த இலக்கு ஜெயிலானியிலுள்ள தர்ஹாவும் அங்குள்ள பள்ளிவாயலும் என கூறப்படுவதாக உள்நாட்டு வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

பல நூற்றாண்டுகள் பலமை வாய்ந்த அநுராதபுரத்திலுள்ள சியாரம் மற்றும் பள்ளிவாசல் என்பன பேரின வாதிகளினால் உடைத்து தகர்க்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

September 20, 2011 at 5:12 pm

முஸ்லிம் சமூகம் புறக்கணிக்க, ஒடுக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

with one comment

இந்த நாட்டிலே அரசியல் தீர்வின் போதும், அதிகாரப் பகிர்வின் போதும் முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதையோ, புறக்கணிக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனையில் Read the rest of this entry »

Written by lankamuslim

September 20, 2011 at 4:23 pm

முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே இம் முறை முன்னுரிமை

leave a comment »

ஹஜ் கடமையை நிறைவேற்றவென முதற்தடவையாக செல்பவர்களுக்கே இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்றுத் தெரிவித்தார்.

அதேநேரம் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுபவர்களிடம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் முகவர் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். Read the rest of this entry »

Written by lankamuslim

September 20, 2011 at 12:17 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers