Archive for August 10th, 2011
பெண்களுக்கான தனியான பஸ் சேவை வெற்றி பெறவேண்டும்
இலங்கையில் இந்தியாவை போன்று பெண்களுக்கு மட்டுமான தனியான பஸ் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முயற்சி இலங்கையில் இரண்டாவது தடவையாக முன்னெடுக்கபடுகின்றது பல ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி காலத்தில் போக்குவரத்துக்கு அமைச்சராக இருந்த பௌசி இந்த திட்டத்தை முதல் கட்டமாக கொழும்பில் ஆரம்பித்து வைத்த போதும் அந்த திட்டம் வெற்றிபெறாமையால் Read the rest of this entry »
மர்ம மனிதனால் ஓட்டமாவடியில் போலீஸ் பொதுமக்கள் மோதல்
ஓட்டமாவடி வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் மர்ம மனிதன் என்று தெரிவிக்கப்படும் நபர் ஒருவனை பொது மக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர் அந்த நபரை போலீசார் விடுவித்துள்ளனர் என்ற வதந்தி பரவியதை அடுத்து பொது மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இருபத்தைந்து பொலிஸார் மற்றும் நான்கு பொது மக்களும் காயப்பட்டுள்ளனர் என்று கல்குடா முஸ்லிம் தெரிவிக்கின்றது.
அந்த செய்தியில் இன்று ஓட்டமாவடியில் காலை கேணி நகர் கிராமத்தில் உசனார் மர்சூக்கா எனும் இரண்டு பிள்ளைகளின் தாய் மர்ம மனிதன் என்று தெரிவிக்கபடும் நபரினால் தாக்கப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் படங்கள் Read the rest of this entry »
முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்படாத தீர்வு முயற்சி தோல்வியில் முடியும்
இனப்பிரச்சினைக்காண தீர்வு முயற்சியில் முஸ்லிம் தரப்பு உள்ளடக்கப்படாது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடுதல் தோல்வியில் முடியும் என்று நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசியல் ராஜதந்திரிகள் அடங்கிய குழுவினரை சந்தித்த அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
30 வருட கால யுத்தம் முடிந்துள்ள இந்த நேரம் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுகொள்ளக் கூடிய தீர்வை வழங்குவதற்கான ஒரு சந்தர்பம் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும், அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாகவும் Read the rest of this entry »
யாழ்.மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபை பகிஷ்கரிப்பு
இஷாக்: யாழ்.மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் மாநகர சபை அமர்வை தொடர்ந்தும் பகிஷ்கரித்து வருகின்றனர். கடந்த மாதம் ஜூலை 28 ஆம் திகதி மூன்று கோரிக்கைகள் அடங்கிய விசேட கவனயீர்ப்பு பிரரேரணையினை முன்வைத்து வெளியேறிசென்றனர். இருந்தும் இது வரையிலும் முன்வைக்கப்பட்டகோரிக்கைகள் தொடர்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவர்கள் தமது பகிஷ்கரிப்பை தொடர்ந்து வருகின்றனர். Read the rest of this entry »
கிண்ணியா வைத்தியசாலையில் பெண் தாதியர் பற்றாகுறையால் பெண் நோயாளர்களுக்கு சிரமம்
கியாஸ் ஷாபி: கிண்ணியா தள வைத்தியசாலையில் பெண் தாதியாருக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதால் பெண் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்கு பணிபுரிந்த பெண் தாதியர் பலர் பதில் கடமை ஒழுங்கின்றி இடமாற்றப்படடுள்ளதால் பெண் தாதியருக்கு இங்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இவ் வைத்தியசாலையின் அதிகமான பிரிவுகளில் ஆண் தாதியரே கடமை புரிய வேண்டிய Read the rest of this entry »
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் தொண்டர் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கியாஸ் ஷாபி: கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் தங்களுக்கு நிரந்தர நிளமனம் வழங்குமாறு கோரி இன்று திருகோணமலையில் அமைந்துள்ள சுகாதார அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். எட்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தொண்டர்களாக பணிபுரிந்து வரும் தங்களை உரிய பதவியில் நிரந்தரமாக்க வேண்டும். Read the rest of this entry »
திருகோணமலை: பதவிநிலை உத்தியோகத்தர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை
T.இர்ஃபான்: திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் பதவிநிலை உத்தியோகத்தர் கடமைகளில் முஸ்லிம்கள் எவரும் இல்லையெனத் தொரிவிக்கப்படுகிறது. இக்காரியாலயத்தில் இருக்கின்ற எட்டு பதவிநிலை உத்தியோகத்தர்களில் ஐந்து சிங்களவர்களும் மூன்று தமிழர்களும் கடமையாற்றுகின்ற அதேவேளை முஸ்லிம்கள் எவரும் இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் என்று சுட்டிகாட்டப்படுகின்றது.
திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயம் இறுதியாக 2008 ஆம் ஆண்டு வெளியிட்ட இம்மாவட்ட மக்கள் தொகை புள்ளி விபரத்தின் படி முஸ்லிம்கள் 41.85 வீதமாகவும் தமிழர்கள் 28.94 வீதமாகவும் சிங்களவர்கள் 24.56 வீதமாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது Read the rest of this entry »
அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படுகின்றது
அவசரகாலச் சட்டத்தை முற்றாக நீக்குவது தொடர்பாக அரசு தற்சமயம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
கிறீஸ் பூதம் என்ற மர்ம மனிதர்கள்
நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- என்ற மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த மர்ம மனிதர்கள் பற்றிய பல கதைகள் கூறப்படுகின்றது. அவற்றில் அரசியல் பின்னணியுடனும், மத பின்னணியுடனும் கதைகள் உலாவருகின்றது.
இன்னும் ஊடகங்கள் குறிப்பாக சிங்கள மொழி ஊடகங்கள் கிறீஸ் பூதம் -கிறீஸ் யக்கா- வார்த்தைகளின் ஊடாக கொடுத்த முக்கியத்துவம் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சமூக விரோத கும்பல்களை இவ்வாறான மர்ம மனிதர்களாக நடமாட ஊக்குவித்துள்ளது என்றும் கூறலாம். Read the rest of this entry »









