மேற்கத்திய ஆக்கிரமிப்பினை எதிர்த்து செயல்பட அனைத்து முஸ்லிம்களும் அணி திரளவேண்டும்
மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகிலுள்ள சகல முஸ்லிம்களும் அணி திரளவேண்டும் என சர்வமத ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் கம்புறுகமுவே வஜிர தேரர் அழைப்பு விடுத்துள்ளார். சமாதனத்தைப் பேணுவதற்காக நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை முஸ்லிம் நாடுகள் மீது தொடர்ச்சியான அத்துமீறல்களை மேற்கொண்டு சமாதனத்தை சீர் குலைத்து வருவதாகவும் இதற்கு எதிராக சர்வதேச மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என்றும் அவர் கோட்டுகொண்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிக்கும் மேற்கத்தியவாதிகள் தொடர்பிலான கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போன்று பின்னர் மேற்கு ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான தலைமையில் இடம்பெற்றுள்ளது.








கொழும்பு தெஹிவளை கல்போவில பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றுக்குள் பேரின மதகுருமார்கள் நுழைந்து அதனை மூடிவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அப்படி அச்சுறுத்தல் விடுக்கப் பட்டதால் மஸ்ஜித் கடந்த இரண்டு தினங்களாக மூடப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் மௌனம் காப்தாகவும் குறித்த மஸ்ஜித் அமைத்துள்ள பகுதியில் பிரபலமான ஜனாதிபதி ஆலோசகராக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும், முன்னால் பிரதி அமைச்சர் ஒருவரும் இருப்பதாகவும் தெரிவிகபட்டுள்ளது இது தொடர்பில் lankamuslim.org இன் செய்தியை எதிர்பார்கின்றேன்
Imath
June 20, 2011 at 8:56 pm