Archive for April 24th, 2011
காத்தான்குடியில் பல பாடசாலைகளுக்கு அதிபர்களும் இல்லை
காத்தான்குடியில் பல பாடசாலைகளுக்கு அதிபர்களும் இல்லை கல்வி அதிகாரியும் இல்லை: மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தில் உள்ள காத்தான்குடி கல்வி பிரிவில் பல பாடசாலைகளில் நிரந்தரமான அதிபர்கள் நியமிக்கபடாமையால் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் நிரப்படாமையாலும் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கபடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் , அல் அமீன் வித்தியாலயம் , ஹைராத் வித்தியாலயம் ,அல் ஹஸனாத் வித்தியாலயம், இக்பால் வித்தியாலயம், மொத்தபள்ளி வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் அதிபர்கள் நியமிக்கப்படாது அங்கு பணி புரியும் ஆசிரியர்கள் சிலரே பாடசாலைகளின் நிர்வாகத்தை கவனிப்பதாகவும் அதேபோன்று விரிவாக Read the rest of this entry »
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளிவருகின்றது
கடந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளதாக உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரடன தெரிவித்துள்ளார் .
வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்களும் தெரிவித்துள்ளது என்றும் மே மாதம் பல்கலை கழக நுழைவுக்கான விண்ணப்பங்களும் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கபடுகின்றது.
இனப் பிரச்சினை தீர்வினை உடன் முன்வைக்கவேண்டும்
இனங்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய முறுகல் நிலையயை தவிர்க்கும் வகையில் இனப் பிரச்சினைக்குத் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட்ட வேண்டும் அதன் மூலம் இன ஒற்றுமையையும் சமாதானத்தையும் , சக ஜீவனத்தையும் இனங்களுக்கிடயே பேண முடியும் என நீதியமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார் மன்னார் மாவட்டம் அரச அதிபர் அரச அதிகாரிகள் போன்ற பிரமுகர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கடந்த யுத்த காலங்களில் தமிழ் , மற்றும் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது இன ரீதியான முறுகல் நிலையினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதற்கான காலம் தற்போது தோன்றியுள்ளது இந்த புண்களை ஆற்றிக்கொண்டு அணைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக கைகோர்த்து செயல்படவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.







