Archive for April 13th, 2011
நிபுணர் குழு அறிக்கை தவறானது, பாரபட்சமானது: அரசு
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பான தனக்கு ஆலோசனை வழங்க நியமித்த நிபுணர் குழு சமர்ப்பித்துள்ள இலங்கையின் பொறுப்புடைமை தொடர்பான அறிக்கை தவறானதும் பாரபட்சமானதுமாகும் என இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
மூன்று அங்கத்தவர்கள் கொண்ட மேற்படி நிபுணர் குழு இன்று ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது விரிவாக Read the rest of this entry »
தமிழ் நாட்டில் 234 சட்ட சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது
இன்று தமிழ் நாட்டில் 234சட்ட சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றுள்ளது இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றுள்ளது . பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் துணை இராணுவ படையினர் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள். இதில் ஆண்கள் 2 கோடி 37 லட்சத்து 4,802, பெண்கள் 2 கோடி 34 லட்சத்து 10,716, திருநங்கைகள் 1,169 பேர். 234 தொகுதிகளிலுமாக 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 2 லட்சத்து 88 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் விரிவாக Read the rest of this entry »
ஐநா நிபுணர் குழு அறிக்கை தயாரித்து வழங்கியுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்க ளுக்குப் பொறுப்புக்கூறுதல் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை கூறவென ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு தனது அறிக்கையை நேற்றுக் கையளித்துள்ளது . அதன் ஒரு பிரதி அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற போது மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் இடம்பெற்றதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஐ.நா. பொதுச் செயலாளர், மூவர் அடங்கிய குழு ஒன்றை நியமித்திருந்தார் விரிவாக Read the rest of this entry »







