Lankamuslim.org

One World One Ummah

Archive for March 3rd, 2011

கிலாபத் இன்றி 87 ஆண்டுகள் கிலாபத் நோக்கி முஸ்லிம் உம்மாஹ் மீண்டும் எழுச்சி பெறுகின்றது

leave a comment »

OurUmmah: இன்று 3.3.2011 இதே திகதியில் 3.3.1924 ஆம் ஆண்டு திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது மனித குலத்துக்கு விடுதலையாய் இருந்த முஸ்லிம்களின் சாம்ராஜ்யம் வீழ்த்தப்பட்டது மேற்கு கண்ட கனவு நிஜமானது இஸ்லாத்தின் கிலாபத்தின் எஞ்சிய பகுதிகளையும் எதிரிகள் துருக்கிய இஸ்லாமிய சாம்ராஜியத்தை தமது முகவர்களின் ஊடாக வெற்றி கொண்தன் மூலம் அழித்தனர்

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகள் மனித இனத்திற்கு அருளாய் இருந்த வந்துள்ளது கிலாபத்தை உலகை விட்டும் அழிக்க தேசியவாதம் என்ற  விரிவாக

Written by lankamuslim

March 3, 2011 at 12:12 pm

மாத்தளை வாகன விபத்தில் வாலிபர் வபாத்

leave a comment »

மாத்தளை நகரில் கண்டி மாத்தளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ரகீஸ் முஹம்மத் ரிஸ்லான் என்ற 22 வதான வாலிபர் ஒருவர் வபாத்தானார்  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது இவர் வரகாமுறையில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து மாத்தளையில் இவர் நடாத்திவரும் வர்த்தக நிலையத்துக்கு போகும் வழியில் வாகன பழுது பார்கும் நிலையத்தில் தீடீரென இருந்து பிரதான வீதி நோக்கி பின்புறமாக வந்த காரில் மோதுண்டு விழுந்த நிலையில் கனரக லோரி ஒன்றில் சிக்கி வபாத்தாகியுள்ளார் என்று எமது மாத்தளை செய்தியாளர் தெரிவித்துள்ள்ளார்

Written by lankamuslim

March 3, 2011 at 12:00 pm

கிபீர் விபத்துக்குள்ளான போது விமானிக்கு மாரடைப்பு !

leave a comment »

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கிபீர் விமான விபத்தில் உயிரிழந்த விமானப்படையின் விமானியான லெப்டினன் மொனத் பெரேராவிற்கு, விபத்து இடம்பெறும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ஏற்பட்ட மாரடைப்பினால் தனது விமானத்தை, குறித்த விமானியினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமையே இந்த விபத்திற்கான காரணம் என நீர்கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

March 3, 2011 at 9:51 am

சிலர் பாகிஸ்தான் கிரிக்கட் விளையாட்டு அணிக்கு ஆதரவளித்ததன் எதிரொலி !!

with 5 comments

பாகிஸ்தான் அணியை இலங்கையர்கள் ஆதரிப்பது கவலைக்குரியது: திலங்க-இலங்கையர்கள் அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்துமாறும் இவ்வருட உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்குமாறும் இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கூறியுள்ளார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின்போது இலங்கையர்கள் சிலர் பாகிஸ்தான் அணியை ஆதரித்தமை கவலைக்குரியது எனவும் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் கூறினார் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

March 3, 2011 at 9:02 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,827 other followers