இந்திய மீனவர்கள் இன்று விடுவிக்கப் படவேண்டும்:கிருஸ்ணா
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 138 இந்திய மீனவர்களையும் இன்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா கண்டிப்பாகக் கூறியுள்ளாராம்
இந்த நடவடிக்கை குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை அமைச்சர் பீரிஸிடம் வெளியிட்டுள்ளதாகவும் இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் சட்டத்தை தமது கையில் எடுத்து கொண்டுள்ளது குறித்தும் அவரிடம் கூறியதாகவும் 136 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன அதேவேளை விரிவாக இந்திய மீனவர்களின் இலங்கையின் வட பகுதி கடற் பரப்பில் அத்துமீறி கடந்த பத்து மாதங்களில் ஒரு கோடி 15 லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதமாக்கியும் திருடியும் உள்ளனர் . மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்வதற்கு அஞ்சுவதாகத்வும் யாழ்பாண இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது







