கல்முனையில் ஆர்ப்பாட்டம்
இன்று புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் விழிப்புணர்வு குழவினரால் நடத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்துள்ளனர். காலை 9.30 மணி அளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இதேநேரம் இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, வைத்திய பணிப்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது







