ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் தயாரிக்கபடுள்ளது
ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் ஒன்று தயாரிக்கபடுள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூலை தயாரிப்பதற்காக சட்டத்தரணி என்.எம்.சஹீட்டை ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமித்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிகின்றன
இவ்வழிகாட்டி நூலில் ஹஜ் முகவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு அமைய வேண்டும், ஹஜ் முகவர்களாக செயற்படுவதற்கு எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், ஹஜ் விவாகாரம் தொடர்பில் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் எவ்வாறு செயற்பாட வேண்டும்விரிவாக பார்க்க என்பன உள்ளடக்கப்பட்டுள்ளனதுடன் அத்துடன், ஹஜ் மருத்துவ குழுவின் பணிகள், அக்குழு ஹஜ் யாத்திரிகர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சேவைகள், ஹஜ் நிதி எவ்வாறு கையாளப்பட வேண்டும், ஹஜ்ஜுக்கான கட்டணங்கள் எவ்வாறு அறவிடப்பட வேண்டும் மற்றும் சகல தகுதிகளையும் கொண்ட ஹஜ் முகவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பவற்றை கொண்ட அறிவுறுத்தல்கள் அடங்கிய நூலாக இது அமைத்துள்ளதாக அறிய முடிகின்றது இந்த சட்டத்தரணி என்.எம்.சஹீட்டினால் தயாரிக்கப்பட்டு இன்று புதிய ஹஜ் குழு தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானாவிடம் கையளிக்கப்படவுள்ளது









