Archive for August 31st, 2010
ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் தயாரிக்கபடுள்ளது
ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் ஒன்று தயாரிக்கபடுள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூலை தயாரிப்பதற்காக சட்டத்தரணி என்.எம்.சஹீட்டை ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமித்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிகின்றன
இவ்வழிகாட்டி நூலில் ஹஜ் முகவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு அமைய வேண்டும், ஹஜ் முகவர்களாக செயற்படுவதற்கு எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், ஹஜ் விவாகாரம் தொடர்பில் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் எவ்வாறு செயற்பாட வேண்டும்விரிவாக பார்க்க Read the rest of this entry »
மேர்வின் சில்வா குற்றம் அற்றவர் என அறிக்கை
சமுர்த்தி ஊழியர் முஹமட் நிசாம் என்பவரைமரத்தில் கட்டியது தொடர்பாக மேர்வின் சில்வா மீது விசாரணை நடத்த லங்கா சுதந்திர கட்சியினர் நியமித்த குழு அவர் குற்றம் அற்றவர் என தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிகின்றன.
முன்னாள் பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் மேர்வின் சில்வா சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியதாக கூறப்படுவதற்கு எதுவிதமான ஆதாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேலையினை சரிவர செய்யாதவருக்கு வழங்கும் தண்டனை இவ்வாறு அமையுமென அதிகாரியின் அனுமதியுடன் தான் உதாரணம் ஒன்றை செய்து காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் குற்றம் அற்றவர் என குறிப்பிட்ட குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பித்துள்ளது என அமைச்சர் மைதிரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்











