Archive for August 26th, 2010
மின்தடையென்றால் 1987 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்
மின்சார விநியோகம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் 1987 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பாவனையாளர்களைக் கேட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கம் தொடர்பாக முன்னரும் மக்களுக்கு அறிவித்திருந்தபோதிலும் அவர்கள் மின்சார சபையின் பிரதேச அலுவலகங்களுக்கே அறிவிப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவிக்கிறார்.
மின்சாரப் பாவனையாளர்கள் 1987 என்ற இலக்கத்தினூடாக அறிவிப்பதன் மூலம் மின்சாரத் தடைக்கான காரணம் மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய தீர்வு நடவடிக்கை போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
பொறியியலாளர் எம்.எம். ஏ. அப்துர்றஹ்மான் ஒரு சிறந்த இஸ்லாமிய போதகனாக
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளாரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம். எம். ஏ. அப்துர்றஹ்மான் அவ் இயக்கம் நடாத்திய இப்தார் நிகழ்வில் உரையாற்றும் போது இது ரமழான் காலம் என்பதால் நம் மத்தியில் ஆன்மீக உணர்வும் தேடலும் அதிகரித்து காணப்படுவது இயல்பானது, அதிலும் குறிப்பாக இது போன்ற நோன்பு திறக்கின்ற வேளைகளில் மிகைத்த ஆன்மீக உணர்வோடு இறைவனின் மன்னிப்புக்காகவும் அவனது நற்கூலிக்காகவும் நாம் ஆவல் கொணடிருப்பதும் இயல்பானதே. ஆனாலும் நம் மத்தியில் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்கைத்திட்டம் என நாம் வாயாற் பேசிக்கொண்ட போதிலும் அதனை செயல்படுத்துவதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை என தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய பொறியியலாளர் எம்.எம். ஏ. அப்துர்றஹ்மான்; தொழுகை, நோன்பு , மற்றும் சுன்னத்தான வணக்க வழிபாடுகள் போன்ற ஆன்மீக நடவடிக்கைகள் மாத்திரமே நமது கடமைகள் என்றும் அவை மாத்திரமே இறைவனின் முழுமையான திருப்தியையும் நற்கூலியையும் பெற்றுக்கொள்வததற்கு போதுமானவை என்றும் நாம் துரதிஷ்ட வசமாக நம்பிக்கொண்டிருக்கிறோம் விரிவாக பார்க்க Read the rest of this entry »











