Archive for June 13th, 2010
சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ள போதும் கிழக்கில் பதட்டம் தொடர்கின்றது

இந்து சமுத்திரத்தின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 7.5 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கையின் மத்திய பகுதி, கிழக்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில்-கொழும்பு, கண்டி, அனுராதபுரம், மட்டக்களப்பு- நிலநடுக்கத்திற்கான அறிகுறி உணரப்பட்டிருந்தது என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது . மட்டக்களப்பு , கல்முனை , அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சுனாமி அப்பிரதேசங்களில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது இலங்கையின் கிழக்கு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரத்தின் ஊடாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அறிவித்தலும் விடுக்கப்பட்டதை அடுத்து கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் விரிவாக பார்க்க Read the rest of this entry »







