இஸ்ரேலிய தாக்குதலுக்கு இலங்கை அரசு கண்டனம்

பாலஸ்தீன் காஸாவை நோக்கிச் சென்ற நிவாரண உதவி கப்பல்களின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது இந்த தாக்குதல் இலங்கை அரசுக்கும் , மக்களுக்கும் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும் . சம்பவத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் இலங்கை அரசு தனது அனுதாபத்தினையும் தெரிவிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது
முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட 6 கப்பல்கள் கொண்ட நிவாரண தொகுதியை திங்ககிழமை சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய படை சுற்றிவளைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியது இதில் 6 துருக்கி நாட்டு கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது இதில் 20 பேர் கொல்லப்பட்டும் பலர் காயம் அடைத்துமுள்ளனர்







