கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும்

கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் கோத்தபாய ஜயரெட்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், இம்மாவட்டத்தில் 34 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்ற வாக்கு மோசடி தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இத்தகவலை அவர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிகின்றன
தற்போது கண்டி மாவட்ட அடிப்படையில் கெஹெலிய ரம்புக்வெல, மகிந்தானந்த அலுத்கமகே, எஸ். பி. திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் இடங்களிலும், ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் 4ஆம், 5ஆம் இடங்களிலும் உள்ளதாக தெரிவிக்க படுகின்றது







