Archive for March 26th, 2010
விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் திருமாவளவன்
(21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல – தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர். அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது – அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.
மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி சிறப்பாக இருந்தது. பேரா. அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் – பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து – ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது. விரிவாக பார்க்க…
20 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பகுதி நேர அரபு பாடசாலை ஆரம்பிக்க படுகின்றது
20 வருடங்களின் பின்னர் முதல் முறையாக நாளை யாழ்ப்பாணத்தில் பகுதி நேர அரபு பாடசாலை ஆரம்பிக்க படுகின்றது இந்த பாடசாலை மஸ்ரவுதீன் பாடசாலையில் இயங்கும் மஸ்ரவுதீன் பாடசாலை 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்ப , மற்றும் தரம் 5 வரை கற்பிக்கும் சிறுவர் பாடசாலையாகவும் மாலை நேர அரபு பாடசாலையாகவும் இருந்து வந்துள்ளது , இந்த பாடசாலை யாழ்ப்பாணத்தின் மிகவும் பழைய பாடசாலைகளில் ஒன்று இது 1903 ஆண்டு கட்டப்பட்டுள்ளது 1903 ஆண்டில் இருந்து 1991 வரை முஸ்லிம்களுக்கு கல்வி போதித்த பாடசாலை புலிகளில் அராஜக நடவடிக்கையுடன் தனது உயர்வான கல்வி சேவையை நிறுத்தி கொண்டது தற்போது மஸ்ரவுதீன் பாடசாலை மீண்டும் ஓர் அளவு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நிலையில் நாளை தனது அரபு கல்வி சேவையை தொடர் இருக்கிறது இன்ஷா அல்லாஹ்
இந்த அரபு பாடசாலை மீள் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ள உலமாக்கள் , சமுக பிரமுகர்கள் கல்வியாளர்கள் இன்று யாழ்பாணம் சென்றுள்ளனர் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி பகுதி நேர அரபு பாடசாலையை நாளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்








