Lankamuslim.org

One World One Ummah

Archive for March 23rd, 2010

மன்னார் மாவட்டத்தின் நாச்சி குடா முஸ்லிம் கிராம மஸ்ஜித் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

leave a comment »

இந்த முஸ்லிம் கிராமம் 20 வருடங்களின் பின்னர் தனது முதலாவது ஜும்மாஹ் தொழுகையை நடத்தியுள்ளது   மன்னார் மாவட்டத்தில் 60 கும் அதிகமான்  மஸ்ஜிதுகள்  இருந்தன   தற்போது இவைகளில் அதிகமானவை சிதைவடைந்த நிலையில் தான் இன்னும் காணபடுகின்றன எனிலும் மஸ்ஜிதுகளை மீளவும் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பாகியுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் விடையம் சிதைவடைந்த மஸ்ஜிதுகளில் ஒன்றுதான் இந்த நாச்சி குடா மஸ்ஜித்

வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த பல பிரதேசங்களில் நாச்சி குடாவும் ஒன்று இங்கு முஸ்லிம்கள் மிகவும் மகிழ்ச்சியாக பரம்பரை பரம்பரையாக புலிகள்   முஸ்லிம்கள் மீது தனது பயங்கரவாத    பற்களை பதிக்கும் வரை வாழ்ந்து வந்தார்கள் . இங்கு முஸ்லிம் பாடசாலை , பெரிய மஸ்ஜித் என்பனவும் கம்பிரமாக அந்த அழகிய கடற்கரை கிராமத்தை அழகு படுத்திகொண்டு இருந்தது இந்த பிரதேச கடல் அழகான ஆழம் குறைந்த கடற்பகுதி, பெருமளவு இறால் கணவாய் நண்டு என்பவற்றுக்குப் பேர்போன இடம். முஸ்லிம்கள் இங்கும் பொருளாதார பிரச்சனைகள் இன்றி வாழ்ந்து வந்தார்கள் 1990 இல் வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளை   விட்டும்    புலி பயங்கரவாதத்தால்  முஸ்லிம்கள் வெளியேற்றபட்டனர்    அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலிகளால்   கொள்ளையிடப்பட்டது   அணைத்தையும்  இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர்  அவர்களுடன் இந்த கிராம முஸ்லிம் மக்களும் அகதிகளாக ஆகினர்.

20 வருடங்களின் பின்னர் நாச்சி குடா கிராம முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசத்துக்கு சிறிய அளவில் போக ஆரம்பித்துள்ளனர் தற்போது அங்கு 50 வரை முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளது அங்கு இருக்கும் பாடசாலை , மஸ்ஜித் என்பன மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன , இங்கு காணப்படும் மஸ்ஜித் கடந்த கிழமை உலமாக்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இது பற்றிய பிந்திய செய்திகள்

எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஈ-மெயில் செய்தி ஒன்றில் பஷீர் என்பவர் குறிபிடுகையில் நாச்சி குடா மஸ்ஜித் திறக்க பட்ட செய்தி தவறானது என்றும் கடந்த வாரம் மூன்று வாகனங்களில் சென்ற பல பிரதேசங்களை சேர்ந்த வாலிபர்கள் வெள்ளி கிழமை நாச்சி குடா மஸ்ஜித் வளாகத்தில் சும்மாஹ் தொழுகை நடத்தியதாகவும் அதை தொடர்ந்து மஸ்ஜித்   திறக்கபட்ட செய்தி அறிவிக்க பட்டுள்ளதாகவும்  இது தவறான செய்தி என்றும் நாச்சி குடா மஸ்ஜித் இன்னும் சிதைவடைந்த திறக்கபாடாத நிலையில் தான் இருப்தாகவும் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

March 23, 2010 at 7:38 pm

ஓட்டமாவடி பாத்திமா மகளிர் கல்லூரி லண்டன் சென்பற்றிக்ஸ் கல்லூரியுடன் இணைப்பு ?

leave a comment »

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் வகுப்பறைகளை இணைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கையாக மட்டு. மத்தி கல்வி வலயத்தின் சிபாரிசுக்கமைவாக பாலிகா ம.வி. கணனி கற்கை வள நிலைய பெறுப்பாசிரியர் எம்.என்.எம். பைசல் 10 நாள் கல்விசார் சுற்றுலாவொன்றை லண்டன் நகரத்தில் மேற்கொண்டு இணைப்பு பாடசாலையை பார்வையிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் எதிர் காலத்தில் இப்பாடசாலை லண்டன் பாடசாலையுடன் நட்புறவு அதிகரிப்பு, மொழி விருத்தி, தகவல் தொழிநுட்ப அறிவு விருத்தி, கலாசாரப் பரிமாற்றம் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களுக்காக ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக வித்தியாலய அதிபர் எம்.ரி.எம். அஷ்ரப் தெரிவித்தார் என்று செய்திகள் தெரிவிகின்றன .

Written by lankamuslim

March 23, 2010 at 12:40 pm

காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 50 வது ஆண்டு பொன் விழா

leave a comment »

http://thesamnet.co.uk/wp-content/uploads/2009/03/kattankudy.jpgகாத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 50 வது ஆண்டு பொன் விழாவைக் கொண்டாடுவதற்கு விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் தலைவரும் காதி நீதிபதியுமான எம். எம். மஹ்றூப் கரீம் தெரிவித்துள்ளார் .

நவ இலக்கிய மன்றத்தின் பொன் விழா ஏற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தலைவர் மஹ்றூப் கரீம் தெரிவித்தார். காத்தான்குடி நவ இலக்கிய மன்றமானது 13 நூல்களை இதுவரையில் வெளியிட்டுள்ளது. இதன் பொன் விழாவன்று 9 நூல்களை இலவசமாக வெளியிட தீர்மானித்துள்ளது

Written by lankamuslim

March 23, 2010 at 12:36 pm

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்?

leave a comment »

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அதன் உள்ளடக்கங்களை பார்க்கும்போது எங்களுக்கு கவலையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

March 23, 2010 at 12:34 pm

புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது

leave a comment »

http://www.sulangaenergy.com/images/wind-energy-in-action.jpgபுத்தளம் மாம்புரியில் நிர்மாணிக்கப்பட்டு வரும்  காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நேற்று திறந்து வைத்துள்ளார் .செனக் தனியார் நிறுவனம் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளது. 10 மெகா வோர்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.தற்போது 5 காற்றாலை மின் விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று விசிறிகள் அடுத்த மாதம் முடிவடைவதற்குள் பொறுத்தப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின் விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு,அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்று தெரிவிக்க படுகின்றது

Written by lankamuslim

March 23, 2010 at 12:26 pm

புதிய ஓட்டமாவடி பாலம் நாளை திறக்கபடுகின்றது

leave a comment »

http://farm1.static.flickr.com/10/15919110_36012d7c0d.jpg?v=0ஓட்டமாவடி – கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக் கப்பட்ட 250 மீற்றர் நீளமான புதிய பாலம் நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 2.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் மற்றும் அமீர் அலி விளையாட்டரங்கு என்பன நாளை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும்.

அத்துடன் அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் அமீர் அலி விளையாட்டரங் கில் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறும். இக்கூட்டத்தில் மட்டு. மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு வேட்பாளர்களனைவரும் கலந்து கொள்வர்என்று தெரிவிக்க படுகின்றது

Written by lankamuslim

March 23, 2010 at 12:12 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,831 other followers