Archive for March 19th, 2010
புதிய மன்னார் பாலங்கள் நேற்று திறக்கபட்டுள்ளது
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் மேன்பாலதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப் பரப்பையும் இணைக்கும் இப்பாலமும் மேன்பாலமும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன் கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை- தள்ளாடி சந்தி-, மேன்பாலமும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இவ் வைபவத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் எம். பிக்களான சிவநாதன் கிஷோர், பி. சுமதிபால, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்
புத்தளத்தில் இலங்கையின் முதலாவது காற்றாலை மின்சார உற்பத்தியாக்கி

தனது முதல் மின் உற்பத்தியை அடுத்த மாதம் அளவில் தொடங்கவுள்ளது
புத்தளத்தில் இலங்கையின் முதலாவது காற்றாலை மின்சார உற்பத்தியாக்கி wind energy plant புத்தளம் நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்க பட்டு வருகின்றது இது தனது முதல் மின் உற்பத்தியை அடுத்த மாதம் அளவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்க படுகின்றது அதே வேளை புத்தள நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்டத்துக்கான நிர்மாண வேலைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் .மின் நிலையத்தின் இரண்டாவது கட்டம் 600 மெகாவோட் மின்சாரத்தை 2012ம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும். நுரைச் சோலை மின் நிலையத்துக்கான மொத்த செலவையும் சீனா வழங்கியுள்ளது என்பது குறிபிடதக்கது
இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் 10 ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி கொள்ளும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை நாகரிகமின்றி தலையிடுமாயின் உள்நாட்டிலிருந்து ஐ. நா. அலுவலகத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் எழுதப்பட்ட பேட்டியின் பிரதியை கடற்படை தலைமையகத்திலிருந்து கடத்திச்சென்று பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய சூத்திரதாரி மக்கள் விடுதலை முன்னணியே என அரசாங்கப் பேச்சாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான டளஸ் அழகப்பெரும குற்றஞ்சாட்டியுள்ளார்
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனின் ஆதரவாளர்கள் இருவர் மீது கண்டி கலஹா பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு

எஸ்.எம்.எம்.பஷீர்
“சுடரொளி” வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன் இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார். மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில் பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி. விரிவாக பார்க்க…







