தைரியமிகு பெண்மணிக்கான அமெரிக்க விருது பெரும் ஜென்ஸிலா மஜீத்


2010 ஆம் ஆண்டிற்கான தைரியமிகு பெண்மணிக்கான விருது இலங்கையரான ஜென்ஸிலா மஜீத் என்பவருக்கு கிடைத்துள்ளது. நேற்று இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க ராஜாங்கச்செயலாளர் ஹிலரி கிளின்டன், அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா ஆகியோருடன் ஜென்ஸிலா மஜீத் காணபடுகின்றார்
அரச சார்பற்ற துறையில் சேவை புரியும் ஜன்சிலா மஜீட் என்ற முஸ்லிம் பெண்னுக்கு அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் தைரியமிகு பெண்மணிக்கான விருது கிடைத்துள்ளது. இவர் முல்லைத்தீவு மாவட்டம் தண்ணீர் ஊற்றை பிறப்பு இடமாகவும் புத்தளத்தை கடந்த 20 வருடங்களாக வாழ்விடமாகவும் கொண்டவர் இவர் தனது கல்வியை யாழ்ப்பாணம் கதீஜா கல்லூரியிலும் , உயர் தர கல்வியை யாழ் . ஒஸ்மானியா கல்லூரியிலும் தொடர்ந்தவர் என்பது குறிபிடதக்கது அனைத்துலக ரீதியில் தெரிவுசெய்யப் பட்ட 10 பேர் கொண்ட பட்டியலில் இவறும் உள்ளடக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவருக்கான விருதை வழங்கவுள்ளார். புலிகளினால் முஸ்லிம்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும், இடம்பெயர்ந்து புத்தளத்தில் 20 வருடங்களாக அகதியாக வாழ்ந்து வருகின்றார் என்பது குறிபிடதக்கது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும் Video








