இந்தியா மகிந்த ராஜபகச்சவை தோற்கடிக்க முயன்றது: இந்தியா மறுப்பு
ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபகச்சவை தோற்கடிக்க இந்தியாவில் சில குறித்த அதிகாரிகள் முயன்றதாகவும் இந்திய மத்திய புலனாய்வுத் துறையான Research and Analysis Wing -RAW- நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் தபால் சேவைகள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் குற்றசாட்டை இந்தியா மறுத்துள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிகின்றன
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அமைச்சர் நந்தன குணதிலக்க இக்குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார் மேலும் புலிகளையும், ஏனைய ஆயுத அமைப்புகளையும் இந்திய மத்திய புலனாய்வுத் துறை வலுப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார் .
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய அரசு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலும், அவரைத் தோற்கடிப்பதற்காக RAW நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்
கொள்கைரீதியாக இந்திய அரசம், RAWவும் சில சமயங்களில் வெவ்வேறு வகையான முடிவுகளை எடுத்து செயற்படுவதாகவும் அவர் இப்பேட்டியில் கூறியுள்ளார். “How the RAW operates and the way that the government of India operates are sometimes very different,” Goonathilake
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய பிரதமரின் இந்தியாவுக்கான் அழைப்பை கையளித்தமை குறிபிட தக்கது








