Lankamuslim.org

One World One Ummah

Archive for February 24th, 2010

கல்முனை- யாழ்ப்பாண இரவு நேர பஸ்சேவை

leave a comment »

http://www.kalaproduction.com/tt/img/prevost-conversion-bus-picture.jpg

கல்முனையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை  யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கு  தினமும் பிறிதொரு பஸ்சேவையை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை யாழ்ப்பாண மக்களால் அமைச்சர்களிடம் தெரிவிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கல்முனை இ.போ. சபை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 6.00 மணிக்கு புறப்படும் பஸ் காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவையூடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து மீண்டும் மறுநாள் மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனை நோக்கி புறப்படவுள்ளது

Written by lankamuslim

February 24, 2010 at 7:22 pm

இலங்கை பிரிட்டனுக்கு கண்டனம் அமெ. பிரதிநிதி பிளேக்கு எச்சரிக்கை

with one comment

இலங்கையிலுள்ள பிரிட்டனின் பதில் உயர் ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த  போகொல்லாகம கண்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதை முன்னிட்டேரோஹித்த  போகொல்லாகம   கண்டனம் தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது .

பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்  இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உயரிய வாய்ப்பு காணப்படுவதாக பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்திருந்தார்  என்பதுடன்   எதிர்வரும் நாட்களில் லண்டனில் நடைபெறவுள்ள உலக தமிழர் மாநாட்டில், டேவிட் மிலிபாண்ட் கலந்து கொள்ளவிருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்திருந்தும் குறிபிடத்தக்கது  .

இதற்கிடையில் டேவிட் மிலிபாண்ட், உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை, இலங்கை அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான உறவை மேலும் விரிசலடையச் செய்யலாம் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதும் குறிபிடத்தக்கது

இதே வேலை இலங்கை  அமெ. பிரதிநிதி பிளேக்கு இலங்கை விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்று  தெரிவித்துள்ளது இலங்கையின் நீதி விவகாரங்களில் தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கு கருத்துத் தெரிவிக்க   உரிமை இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன  தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

February 24, 2010 at 6:23 pm

மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டம் 500 மில்லியன் ரூபாவில் தொடங்கி . இன்று 6000 மில்லியன் ரூபாவையும் கடந்துள்ளது

leave a comment »

http://www.dailynews.lk/2009/10/10/z_p09-sda4.jpg

நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபிவிருத்தியாகட்டும், யுத்தமாகட்டும் நாம் போதிய நிதியைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை. உள்ளதை வைத்தே தொடங்கினோம். மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தை 500 மில்லியன் ரூபாவை வைத்தே ஆரம்பித்தோம். எனினும் இதுவரை 6000 மில்லியன் ரூபா நிதியைச் செலவு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று அங்கு விஜயம் செய்ததுடன் மொரகஹகந்த பாலம் உட்பட பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

Written by lankamuslim

February 24, 2010 at 6:06 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

http://www.freeiconsdownload.com/site-images/Large/PlayStopPauseIcons_452.jpgகண்டியை மையமாகவைத்து இயங்கும் U.C.M.C அல்லது மலையக முஸ்லிம் பேரவை என்ற அமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில்போட்டியிட  இடமளிக்கக்கூடாது  என  ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சி பேச்சாளர் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது என்று செய்திகள் தெரிக்விகின்றன

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும்  சில  நாட்களில்  வெளியிடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு  விடுக்கப்பட்ட அழைப்பை ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்

ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுப் பத்திரத்தில் இன்று கையொப்பமிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்ததுள்ளது

Written by lankamuslim

February 24, 2010 at 5:54 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers