Lankamuslim.org

One World One Ummah

நேரும் எதிருமான அரசியல் நகர்வுகள்

leave a comment »

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியினர் அன்னம் சின்னத்தின் கீழ் பரந்து பட்ட கூட்டணியாக களமிறங்கியது போல் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியை மென்மேலும் விரிவுபடுத்தி போட்டியிடவே விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., அதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இணங்கி வரவில்லை என்றால் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தி விரிவான மாற்றும் கூட்டணியொன்றை அமைக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்ந்து  பாராளுமன்றத் தேர்தலை எதிரணிகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதை வரவேற்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜே.வி.பி. உட்பட எதிரணியிலிருக்கும் சகல கட்சிகளின் யோசனைகளை மீள்பரிசீலித்து மாற்று யோசனைகள் அடிப்படையில் முடிவெடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஜெனரல் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா எதிர்வரும் பொது  தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிகின்றன இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து மீண்டும் புதிய கூட்டணியில் போட்டியிட வேண்டும் என தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத்பொன்செகா தமது மனைவியின் மூலமும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ மூலமும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனக் தெரிய வருகின்றது

About these ads

Written by lankamuslim

February 15, 2010 at 12:59 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,798 other followers

%d bloggers like this: