Lankamuslim.org

One World One Ummah

ஜெனரல் சரத் பொன்சேகாவை உறவினர்கள் பார்வையிட அரசாங்கம் அனுமதி வழங்கும்

leave a comment »

http://www.tamilwin.net/newsimages/spokesmanjp.jpg

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக சகல வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உறவினர்கள் அவரை பார்வையிட கோருவார்களேயாயின் அவர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இராணுவத்தில் கடமையாற்றுகையில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் போன்றவற்றிற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இராணுவப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து விலகிய ஆறு மாதங்களுக்குள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் இராணுவப் பேச்சாளர் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Written by lankamuslim

February 9, 2010 at 6:56 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

Gravatar
WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 63 other followers