மன்னார் மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரமும் தொழிலுக்கு செல்ல முடியும்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த நடைமுறை மற்றும் ஏனனய கெடுபிடிகள் நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண முகாமைதுவ அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதாவது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினை தொடர்பாக தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், இதன் பேரில் ஜனாதிபதி மன்னார் மாவட்ட கடற்தளபதிகளுடன் உரையாடியதோடு மன்னார் மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரமும் தொழிலுக்கு செல்ல முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
Advertisement








