Archive for January 22nd, 2010
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட அறிக்கை
விசேட அறிக்கை:
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் பெயரை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிபதாக உலமா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது, ஜனாதிபதி வேட்பாளர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் எவரும் இலங்கை முஸ்லிம்களின் தாய் அமைப்பான எந்த அரசியல் சார்பும் இன்றி இயங்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பண்படுத்த கூடாது என்று கண்டிப்பாக கேட்டு கொண்டுள்ளதுடன் தாம் யாரையும் ஆதரிக்குமாறு கேட்டு கொள்ளவில்லை என்றும் குறிட்பிடுள்ளது இந்த விசேட அறிக்கை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் பிரதிப் பொது செயலாளர் அஷ்ஷெக் தாசிம் வெளியிட்டுள்ளார்.
யாழ் குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை !
1996 இல் யாழ் குடாநாடு புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கபட்ட பின்னரும் யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque – பள்ளியின் நிலை இன்றுவரை இப்படிதான் தொடர்கிறது இந்த படங்கள் 10.01.2010 அன்று எடுக்கப்பட்டவை,குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இருந்தும் 2 மஸ்ஜிதுகள் தான் பழையை நிலைக்கு ஓரளவு திரும்பி இருக்கிறது என்பது குறிபிடதக்கது ,மற்ற மஸ்ஜிதுகள் அனைத்தும் அழிக்கபட்ட, சிதைக்கபட்ட நிலையில் தான் இன்னும் இருக்கிறது,இது தொடர்பாக எமது தொடர் செய்திகளை எதிர்பாருங்கள்
யாழ்ப்பாணம் பெரிய பள்ளி The Grand Mosque இன்றைய தோற்றம் படம் 10.01.2010


















