Lankamuslim.org

One World One Ummah

Archive for January 20th, 2010

Dr.ஆபியா சித்தீக்கி கோட் ரூமை விட்டும் பொலிசாரினால் வெளியேற்றபட்டார்

with one comment

தனிமைச்  சிறையில்    அடைக்கப்பட்டிருகும் முஸ்லிம் பெண்  Dr.ஆபியா வழக்கு நேற்று 19.01.2010 அமெரிக்க நேரம் கலை 9.00 மணிக்கு    நியூ யார்க் நகரின்  விசாரனைக்கு வந்தது இவர்மீது அல் கைதாவுடன்  தொடர்புடைய எந்த குற்ற சாட்டுகளும் அரச தரப்பால் முன்வைக்க முடிய வில்லை ஆனால் அமெரிக்க புலனாய்வு ஏஜன்ட்டுகாளால்   ஆப்கானிஸ்தான் இரகசிய சிறையில் அடைக்கப்பட்திருந்த போது ஒரு FBI அதிகாரியிடம் துப்பாகியை பறித்து அந்த FBI அதிகாரியையும் ஒரு இராணுவ அதிகாரியையும்  சுட்டார் என்றும் , பேரழிவு தாக்குதல் -mass-casualty attacks-என்று எழுதப்பட்ட ஒரு ஆவணம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்த பட்டுள்ளார். இதை Dr.ஆபியா வின் சட்டத்தரணி முற்றாக மறுத்தார் ,  அல் கைதாவுடன் தொடர்புடைய எந்த ஆதாரமும் இல்லாத போதும்  Dr.ஆபியாவை      போலியான ஆதாரங்களின் ஊடாக ஆயுள் தண்டனையை  பெற்று கொடுபதற்கு அமெரிக்க புலனாய்வு  தரப்புகள் முயல்வதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன , வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் பார்வையாளர் பக்கம் திருப்பி பேசிய  Dr.ஆபியா தனக்கு எந்த விரிவாக பார்க்க..

Written by lankamuslim

January 20, 2010 at 5:56 pm

இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் “தலைமகன்” விருது அளிப்பு

with one comment

கல்முனை மாநகர  சபையின் 2010ஆம் ஆண்டுக்கான உயர் விருதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் “தலைமகன்” விருது கல்முனை மாநகர மேயர் எச்.எம்.எம். ஹரீஸால் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. கூறியதாவது: கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன். விரிவாக பார்க்க…

Written by lankamuslim

January 20, 2010 at 5:35 pm

தமிழர்களும் முஸ்லிம்களும் புட்டும் தேங்காய்ப் பூவும் போல என்று செல்கிறாராம் இரா சம்பந்தன்

leave a comment »

தமிழர்களின் விடுதலைப் போராட்டமானது ஆயுதங்களுடன் ஆரம்பிக்கப்படவில்லை. ஆயுதப் போராட்ட முடிவுடன் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறவுமில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் இல்லாமல் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் இல்லாமல் தமிழர்களும் வாழ முடியாது என்ற யதார்த்தத்தை இன்று தமிழ் பேசும் மக்கள் உணர்ந்துள்ளனர். தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை தேர்தல் முடிவு மூலம் எடுத்துக் காட்டுவோம்

தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய காலம் கனிந்துவிட்டது.வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல் முஸ்லிம்களும் இல்லை. முஸ்லிம்கள் இல்லாமல் தமிழர்களும் வாழ முடியாது என்ற யதார்த்தம் தமிழ் பேசும் மக்களால் உணரப்பட்டுள்ளது. விரிவாக பார்க்க…

Written by lankamuslim

January 20, 2010 at 5:28 pm

புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு

leave a comment »

புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு தாம் பின்னால் இருந்து செயற்பட்டதாக வெளியாகும் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். வெளிநாட்டு  தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள்கூறுகின்றன .

இந்தநிலையில் 2005 ஆம் ஆண்டு தமது தோல்விக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.கருணா, தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்தமையானது அவர்களின்  உள்ளகப் பிரச்சினையாகும். அது தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவ்வாறு சாட்சியம் இருக்குமானால், அதனை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.திருகோணமலை மாவிலாறு பிரச்சினையே, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கான காரணமாகும்.இந்தநிலையில் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கவே செயற்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

January 20, 2010 at 4:31 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,702 other followers