Archive for January 2010
கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்
86 வது வருடதிற்கு இன்னும் 31 நாட்கள் இருகின்றன
1924 மார்ச் 3 இம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலிபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீபா அப்துல் மஜீத் இவர் கிலாபத் அழிக்கபட்டு ஒரு மணித்தியால அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி, முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது , ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது விரிவாக பார்க்க…
எதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் ?
எதிர்வரும் ஏப்ரல்மாதம் 9ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது சுதந்திரத் தினத்திற்கு மறுநாள் நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்க ப்படுகிறது. சிங்களத் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டப்படுகிறது புத்தாண்டு காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அதன் மூலம் பல்வேறு பாதிப்புக்கள் எற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் மக்களுக்கு இடையூறு அற்ற வகையில் தேர்தல்களை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிவசங்கர் மேனன்- கருணாநிதி சந்திப்பு!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களை சந்தித்து இலங்கை விடயம் தொடர்பாக பேச்சு நடாத்தியுள்ளார். மேனன் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேச்சுநடாத்தியுள்ளார். இந்திய அரசு இலங்கையுடன் இணைந்து புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம் தமிழர்களுக்கான அதிகாரபரவால்க்கல் உட்பட பல்வேறு விடயங்கள் என்பனவற்றை இந்தியா முன்னெடுத்து வருவதாகவும் கருணாநிதியிடம் மேனன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, சிவசங்கர் மேனன் பதவியேற்று கொண்டதன் பின்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பாகும், இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகுவம் தெரிவித்தார்.
முதவ்வருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து மேனன் அவர்கள் தெரிவிக்கையில், மீனவர் பிரச்சினை, இலங்கையின் வடக்கே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
யார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..

எஸ். எம்.எம். பஷீர்
சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக நான் எழுதிய “ஹீரோ டு ஜீரோ” (From Hero to Zero) என்ற கட்டுரையில் குறிப்பிட்ட மேற்குலக சக்திகளின் பின்னணிகள் பற்றிய அனுமானங்கள் பல என்று ஆதாரங்களாகி வருகின்றன. அந்தப் பின்னணியில் இன்னுமொரு புதிய செய்தி இலண்டனில் இருந்து வெளிவரும் தெளிக்ராப் (The Daily Telegraph) எனும் பத்திரிக்கை செய்தியுமாகும். அதாவது முன்னாள் பிரித்தானிய மரபுவாதக் கட்சியின் அதன் இன்றைய தலைவரான டேவிட் கமரூன் (David Cameron) பாரிய லண்டன் நகர மேயராகவிருக்கும் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) ஆகியோருக்கு ஆலோசகராகவிருந்த ஜேம்ஸ் மக்ராத்(James McGrath) என்பவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு அவரது தோல்வியின் பின்னரான ஹோட்டல் பத்திரிகை பேட்டி, அதனை தொடர்ந்த மகிந்தவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு பின்னனியிலிருந்தார். அப்பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகையில் ஜெனரல் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் அதன் புகழ் இவருக்கே சாரும், ஏனெனில் இவர் ஒரு மாதமாக பொன்சேகாவின் பிரச்சார செயற்பாட்டின் உபாய வகுப்பாளராக இலங்கையில் செயற்பட்டிருந்தார் என்ற விரிவாக பார்க்க…
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
மேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
பலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது
அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.
கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.
1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..

ஹமாஸ் உயர் பீட உறுப்பினர் இஸ்ரேல் உளவு ஏஜண்டுகளால் துபாயில் படுகொலை
பலஸ்தீன் விடுதலை போராட்டத்தின் முக்கிய போராளிகளில் ஒருவரும் ஹமாஸ் இராணுவ கட்டமைப்பான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாமின் உயர் நிலை உறுப்புரிமை பெற்றவருமான மஹ்மூத் அப்துறவூப் அல் மப்ஹூஹ் -Mahmoud Abdul Raouf al-Mabhouh- துபாயி நாட்டில் இவர் தலையில் நவீன கருவி ஒன்றினால் மின்சாரம் செலுத்தபட்டு கொலை செய்யபட்டார் இந்த கொலையின் பின்னணியில் இஸ்ரேல் உளவு பிரிவான மொசாட்-Mossad-இருபதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் அடக்கு முறைக்கு எதிரான முதல் இன்திபாழாவின் போதும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தை சேர்ந்த இருவரை கைப்பற்றிய நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்காற்றியுள்ளார் இவர் 1989 முதல் சிரியாவில் வாழ்ந்து வந்தார். விரிவாக பார்க்க..
இரகசிய இடங்களில் தடுத்து வைத்து விசாரணை செய்யும் நாடுகள் பட்டியலில் இலங்கையும்
இரகசிய இடங்களில் மக்களை தடுத்து வைத்து விசாரணை செய்து தகவல்களை பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என ஐக்கியநாடுகள் மனித உரிமை விசாரணையாளர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான், பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இலங்கை ஆகியன உட்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொள்ளும் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்து மக்களை இரகசியமாக தடுத்து வைக்கும் நடைமுறைகள் பற்றி ஐக்கியநாடுகள் விரிவான முறையில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விவரங்கள் மேற்படி 221 பக்க அறிக்கையில் அடங்கியுள்ளன.
இலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான நீண்டகால யுத்தம் காரணமாக இரகசியமாக பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொதுவாக, இலங்கை இராணுவ அதிகாரிகள், இராணுவ சீருடையில் அல்லது சிவில் உடையில் தமிழ் இனத்தவர்களை கைது செய்து வாரக்கணக்கில் அவர்களை இரகசிய இடங்களில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் என்று மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக பார்க்க..
லங்கா பத்திரிகை ஆசிரியர் கைது
லங்கா சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த நேற்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது கைது தொடர்பாக தமக்கு தெரியவந்த போதிலும் அது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் உத்தியோகபூர்வமான முறையில் அறிவிக்கப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார்
விமான நிலையத்திலிருந்து ரூ.45 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
![]() |
45மில்லியன் ரூபா பெறுமதியான கொகேன் போதைப் பொருட்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த போதைப் பொருட்கள் அடங்கிய பயணப் பொதியினை விமான நிலையத்திலேயே விட்டு தப்பிச் சென்றதாக சொல்லப்படும் ஈரான் நாட்டுப் பிரஜையும் கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதிகளில் நடந்த வன்முறைகள்!
இலங்கையின் கிழக்கு மாகாண பகுதியான ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பகுதிகளில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 4 பேர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதோடு வான் வண்டி ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க் கிழமை பிற்பகல் 4 மணியுடன் வாக்களிப்பு முடிந்த பின்னர் இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்காக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வாக்கெடுப்பு முகவராக கடமையாற்றி விட்டு குறித்த வான் வண்டியில் இவர்கள் வீடு நோக்கி வரும் வேளையில் ஆளும் தரப்பு இளைஞர் கோஷ்டி ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் குறித்த வான் வண்டியின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. விரிவாக பார்க்க
சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கை அரசியலில் தீர்மான சக்தியல்ல என்பதை..
நடைபெற்று முடிந்த ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 57.88 வீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளார். இவர் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவை விட 1,842,749 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளதுடன், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மேலதிக வாக்குகளைப் பெற்ற சாதனையையும் படைத்துள்ளார். இத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 16 தேர்தல் மாவட்டங்களில் அமோக வெற்றியீட்டியதுடன், 06 மாவட்டங்களில் தோல்வியினை தழுவியிருந்தார். இந்த 06 மாவட்டங்களும் சிறுபான்மை சமூகத்தினர் செறிவாக வாழும் மாவட்டங்களாகும். வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திகாமடுல்லை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தில் தோட்டத் தொழிலாளர் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் இவர் தோல்வியடைந்தார்.விரிவாக பார்க்க
அதிரடி இணையத்தின் அவசர வேண்டுகோள்..

நேற்றைய இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளைப் பார்வையிடும் வாசகர்களால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அதிரடி.கொம் மற்றும்
நேற்றைய இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளைப் பார்வையிடும் வாசகர்களால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அதிரடி.கொம் மற்றும் அதிரடி.ஓர்க் ஆகிய இணையங்கள் தற்காலிகமாக செயற்படவில்லை. இதில் மாற்றம் செய்யும் வரை (முடிந்தால் நாளை வரை) வாசகர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அதுவரை அதிரடி இணையத்தின் அனைத்து செய்திகள் ஆக்கங்களை நியுஅதிரடி.கொம் ஊடாகப் பார்வையிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி..!! -அதிரடி நிர்வாகம்.
பஹ்ரெய்னில் தீ விபத்து ஒன்றில் மூன்று இலங்கை பெண்கள் உயிரிழந்துள்ளனர்
![]() |
பஹ்ரெய்னில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மூவரும் பெண்கள் எனவும் ,பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும், இவர்கள் மூவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சுவாசப் பிரச்சினை காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
பொது நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் அரசு

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சர் மைத்திரபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அது கலைக்கப்படவுள்ள திகதி குறித்த எவ்வித தகவல்களையும் அவர் வெளியிடவில்லை.
கவ்காஸஸ் இஸ்லாமிய விடுதலை போராட்டமும் ரஷ்ய உளவுத்துறையின் (FSB) சதி நாசவேலைகளும்
M. ஷாமில் முஹம்மட்
.
பல நூற்றாண்டுகளாக செச்னியா முஸ்லிம்கள் கம்யூனிஸத்துகு முன்பும் பின்பும் ரஷ்யாவுக்கு எதிரானபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் தங்களை கவ்காஸஸ் என்றே அழைக் கின்றனர். செச்சன் என்பது ரஷ்யா வினால் சூட்டப்பட்ட பெயர். 18ம் நூற்றாண்டில் உள்நாட்டு மக்களுக்கும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையிலான யுத்தத் தின்போது யுத்தம் தொடங்கிய கிராமம் அல்லது பரந்த காட்டு பகுதி ஒன்றின் பெயரே செச்சன் என்பதாகும்
பல நூற்றாண்டுகளாக அடகு முறைகளை சந்தித்த இந்த செச்னியா மக்கள் 1991ம் ஆண்டில் கம்யூனிஸ சோவியத் யூனியன் சிதறிய பிறகு. முதல் அதிபராக போரிஸ் எல்ட்சின் தேர்வானார் சோவியத் ஒன்றியத்தின் அழிவுடன் சுதந்திர செச்னியா என்ற தமது இஸ்லாமிய சுதந்திர தாகத்தை நிறைவேறுவதற்கான வாய்ப்பாக செச்னியா முஸ்லிம்கள் கருதினர் . ஆனால் மேலாதிக்க வெறிபிடித்த போரிஸின் மற்றும் விளாடிமி்ர் பூட்டின் மற்றும் டிமிட்ரி மெட்வடே ஆகியோரின் ஆக்கிரமிப்புக் கொள்கை அதற்குத் தடைகளை போட்டுள்ளது
மிக அதிகமான எண்ணை வளமிக்க செச்னியாவை தொடர்ந்தும் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்க தீர்மானித்தது செச்னியாவின் விடுதலை பிராந்தியத்திலுள்ள ஏனைய ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கும் ஓர் விடுதலை மாதிரியாய் அமைந்து விடும் என ரஷ்யா கருதியதுடன் எண்ணை வளமிக்க செச்னியாவை ஒருபோதும் விடுதலை அடைய விடமுடியாது என்ற தீர்மானத்துக்கு வந்தது . விளைவு , செச்னியாவின் சுதந்திரப் பிரகடனத்தை அதன் முனைப்புகளை ரஷ்யா கொடூரமாக ஒடுக்கியது . விரிவாக பார்க்க…
தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும்
வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ள அவர், இத்தேர்தல் முடிவுகளை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு 10 காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயத்தினை சினமொன் லேக்சைட் ஹோட்டலில் இருந்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அவர், தனது வெற்றி மோசடிமூலமாக பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் எதிர்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் தங்கயிருந்த ஜெனரல் பொன்சேகா அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
அரசியல் சோதிடர்களும் சோப்ளாங்கி அரசியல் ஆய்வாளர்களும்
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இதுவரை நடைபெற்ற எல்லா ஜனாதிபதி தேர்தல்களையும் விட சுமூகமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இத்தேர்தலில் வழக்கமாக யார் வெல்லுவார் என்று பலர் இலங்கையிலும் புலம் பெயர் தேசத்திலும் வெறுமனே ஆரூடம் கூறிகொன்டிருக்காமல் யார் வெல்ல வேண்டும் என்பதில் கூடிய சிரத்தை காட்டியமைக்கு மிக முக்கிய காரணம் . இந்த தேர்தல் இலங்கை மீது இதுவரை மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதிக்கம் செலுத்திவந்த அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் இலங்கை மீதான பிடியை மீண்டும் இறுக்கிக்கொள்ள ஒரு புறம் யார் வெல்லவேண்டும் எனத் தீர்மானிக்க அதற்கு இலங்கையின் முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் சக்திகளின் துணையுடன் ஒருபுறம் முயற்சிக்க மறுபுறம் அத்தகைய புறச்சக்திகளின் உதவியுடன் மீண்டும் தமது தேசியக்கனவுக்கும் பழிவாங்கலுக்கும் ஒரு சரியான சந்தர்ப்பமாக புலம் (புலன்) )பெயர் தமிழ் தேசிய (தனி ராட்சிய ) புலி வால்களும் வரிந்து கட்டிக்கொண்டு மஹிந்த எதிர்ப்பு அரசியலை மட்டுமே செய்து வந்தனர்.விரிவாக பார்க்க..
மகிந்த ராஜபக்ச முடிவுகளின்படி 18 லட்சம் வாக்குகள் முன்னிலையில் மாபெரும் வெற்றி
22 தேர்தல் மாவட்டங்களிலும் வெளியிட்ட முடிவுகளின் பிரகாரம் மகிந்த ராஜபக்சவுக்கு 6,015,934 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு 4,173,185 இதன் படி மகிந்த ராஜபக்ச 1,842,749 அதிகப்படியான வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் இருளில் மூழ்கும் காஸா
ஐரோப்பிய யூனியன் எரிபொருளுக்கான தனது நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளதால் இதுவரை காஸாவில் இயங்கிவந்த ஒரேயொரு மின்னுற்பத்தி நிலையமும் எதிர்வரும் வியாழக்கிழமை (28.01.2010) முதல் இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளதென பலஸ்தீன் எரிசக்தி அதிகாரசபையின் பிரதித் தலைவர் கினான் உபைத் தெரிவித்துள்ளார்.
அவர் பலஸ்தீன் ஊடகமையத்தினூடே வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்த இக்கட்டான நிலையிலிருந்து காஸா மக்களைப் பாதுகாக்குமுகமாகத் துரித நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு அரபுநாடுகளையும் உலகெங்கிலுமுள்ள சுயாதீன அமைப்புக்களையும் நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவாக பார்க்க….
காத்தான்குடி பிரதேசத்தில் சிறு சிறு தேர்தல் வன்முறை சம்பவங்கள்
மட்டகளப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சிறு சிறு தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றதாக தெரிகிறது இன்று காலை 10 மணியளவில் வன்முறை சம்பவம் ஒன்றில் புதிய காத்தான்குடி-3 முகைதீன் பள்ளிவாயல் வீதியில் சலீம் என்ற சரத் பொன்சேகாவின் ஆதரவாளர் ஒருவரின் கார் ஒன்று தாக்கப்பட்டு சேதமாக்கபட்டுள்ளது எனத்தெரியவருகிறது
மடவளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளரின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மடவளையில் நேற்று நள்ளிரவு கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது. மடவளை தெல்தெனிய ரோட்டிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளரான எம்.எஸ்.எம். ரிஸ்மி என்பவரது வீட்டிற்கே இக்கைக் குண்டு வீசப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அவரது வீட்டிற்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது.வீசப்பட்டது பாரிய குண்டாயினும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.சம்பவம் நடந்த சமயம் வீட்டு உரிமையாளரான ரிஸ்மி அலுவல் ஒன்று காரணமாக வெளியே இருந்துள்ளார்.வத்துகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்னர் 13 இடங்களில் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மக்கள் குழுவினராகச் சென்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன
வாக்கு மோசடி முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள விசேட பிரிவு
இடம்பெறும் வாக்கு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவென தேர்தல் திணைக்களத்தினால் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் வாக்கு மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக அறிவிக்கும் பட்சத்தில் அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.
112-877629, 0112-877630, 0112-877631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும். இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை வரை இந்த பிரிவு செயற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளரை காணவில்லை
சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார். ஹெக்நேலியகொட ராஜகிரியவில் உள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகத்தில் இருந்து நேற்றிரவு 9 மணியளவில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போதே காணமால் போயியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9.30 முதல் அவரது கையடக்க தொலைபேசி செயலிழந்துள்ளது.
நேற்றிரவு 9.30 மணிக்கு முன்னர், ஹெக்நேலியகொடவின் தொலைபேசியில அவரது நண்பர் ஒருவர் அழைப்பை எடுத்த போது கொஸ்வத்தை பிரதேசத்திற்கு அல்ல எனக் கூறுவதை கேட்க முடிந்ததுள்ளது. ஹெக்நேலியகொட லங்காஈநியூஸ் இணையத்தளத்தில் சுயாதீன ஊடகவியலாளராக அரசியல் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்துடன் தேசிய புத்திஜீவிகள் சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகிறார்
புத்தளம் – மன்னார் வீதி நேற்று திறந்து வைப்பு
கடந்த 19 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுக் கிடந்த புத்தளம் – மன்னார் வீதி நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
105 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பாதையை அபிவிருத்தி செய்ய 650 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டது.
மீள்குடியேற்றம், அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் வீதி திறப்பு வைபவம் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக இளைஞர் படையணித் தலைவர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டார். மற்றும் வட மாகாண ஆளுநர் – பிரதியமைச்சர் கே. ஏ. பாயிஸ் ஆகியோர் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
பாதை திறப்புக்குப் பின்னர் சுமார் 160க்கு மேற்பட்ட வாகனங்கள் மன்னாரை நோக்கி பயணமாகின.
இதேவேளை, புத்தளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுடனான கலந்துரையாடலொன்று புத்தளம் நகர மண்டபத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாமல் ராஜபக்ஷ உரையாற்றினார்.
இம்மாதம் 27ம் திகதி முதல் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் தீவிரமாக முன்னேடுத்துச் செல்லப்படும். இதன் பயனாய் பல இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.
ஜனாதிபதித் தேர்தலில் தீர்மான சக்தி சிறுபான்மை. ஆனால், ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கப்போவது ?
![]() |
பி.எம்.புன்னியாமீன்
எதிர்வரும் 26ஆந் திகதி இலங்கையில் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றினை நோக்குமிடத்து 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலையடுத்து நாட்டில் சுமுகமான நிலையில் நடைபெறும் ஒரு தேர்தலாகவே இந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிட முடியும்.
1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற வேளையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் பலத்த நெருக்கடிகள் காணப்பட்டிருந்தன. அதேநேரம், தென்னிலங்கையிலும் மக்கள் விடுதலை முன்னணியினரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் உச்ச நிலையையடைந்திருந்தன. மிகவும் பயங்கரமான ஒரு நிலையிலேயே இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர். 1994ஆம் ஆண்டு மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலகட்டத்திலும் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள் நாடளாவிய ரீதியில் வியாபித்தே காணப்பட்டிருந்தன. இத்தேர்தலில் போட்டியிட்ட பிரதம வேட்பாளர்களில் ஒருவரான காமினி திசாயநாயக்கா கொலை செய்யப்பட்டார். அச்சமிகு சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல 1999ஆம் ஆண்டு நான்காவது ஜனாதிபதித் தேர்தலின்போதும் 2004ஆம் விரிவாக பார்க்க…
ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸ் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு
ஜனாதிபதித் தேர்தலில் அன்னாசிப் பழச் சின்னத்தில் சுயாதீனமாக போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ஐ. எம். இல்யாஸ் எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்துள்ளார். இதனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இனவாதமற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே தான் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் வெளியிடப்பட்டது. இதன்போது ஐ. தே. கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தலைவரும், சுயாதீனக் குழுவின் வேட்பாளருமான டாக்டர் ஐ. எம். இலியாஸுக்கு கைலாகு கொடுத்து வரவேற்றார்.
26, 27 மதுபானசாலைகளும் முடப்படும் ,வன்முறைகளில் ஈடுபடுவோரையும் கண்ட இடத்தில் சுடுவதற்கு உத்தரவு
ஜனாதிபதி தேர்தலின் போது குழப்பம் விளைவித்து வன்முறைகளில் ஈடுபடுவோரையும் தேர்தல் சட்டத்திட்டங்களை மதிக்காதோரையும் கண்ட இடத்தில் சுடுவதற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். சகல மதுபானசாலைகளும் வாக்களிப்பு தினமான நாளையும் மறுநாள் 27ஆம் திகதியும் மூடப்பட்டிருக்கும் என்று கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. கலால் திணைக்களத்தின் விதியை மீறுகின்ற மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில் சட்டவிரோதமான மதுபானங்களை விற்பனை செய்வோர் அல்லது முன்கூட்டியே கொள்வனவு செய்து விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்திருப்பதுடன் விசேட சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தனது ஆதரவாளர்களை ஜெனரலுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அவர்களை நேற்று நண்பகல் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா சந்தித்தார். இச்சந்திப்பை அடுத்து ஊடகவியலாளர் மாநாட்டில் சந்திரிகா தனது ஆதரவை ஜெனரலுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் நாட்டில் ஜனநாயகத்தினை மீளக் கொண்டுவரும் பொருட்டு ஜெனரலுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கு பேசிய அவர் மஹிந்த தலைமையிலான அரசு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாட்டில் ஜனநாயக உரிமைகளை மறுத்துள்ளதுடன் குடும்ப ஆட்சிக்கு வழிதிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சந்திப்பின்போது ஜெனரலின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்டதுடன் அது அவரால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது
அடிப்படை வசதிகளின்றி அல்லலுறும் 55,000 பலஸ்தீனர்களும் இஸ்ரேலுக்குக் கூஜாதூக்கும் எகிப்தும்
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகருக்குக் கிழக்குப் பகுதியைச் சுற்றியுள்ள பிராந்தியம் இஸ்ரேலிய பிரிவினைச் சுவரினால் துண்டாடப்பட்டுள்ளமையால், அப்பிரதேசங்களில் வசித்துவரும் 55,000 பலஸ்தீனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அடிப்படை வசதிகள் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சமய விவகாரங்களுக்கான பலஸ்தீன் அமைச்சர் கலாநிதி தாலிப் அபூ ஷஅர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி அபூ ஷஅர் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில், மேற்படி பிரதேசங்களில் வாழ்ந்துவரும் பலஸ்தீன் மக்கள் வேறுவழியின்றித் தாமாகவே தமது வீடுகளையும் நிலங்களையும் கைவிட்டுச் செல்வதற்கு நிர்ப்பந்திப்பதே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் ‘பலஸ்தீனரைத் தனிமைப்படுத்தும் கொள்கை’யின் அடிப்படை நோக்கமாகும் என்று விபரித்துள்ளார். விரிவாகக் பார்க்க..
2010 ஆம் ஆண்டை வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் திரும்பிச் செல்வதற்கான ஆண்டாக பிரகடன படுத்துமாறு வேண்டுகோள்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் திரும்பிச் செல்வதற்கான ஆண்டாக 2010னை ஆக்குமாறு வேண்டுகோள்.
இலங்கை முஸ்லிம்களின் சிவில் சமூகக் குழுக்கள் என்ற ரீதியிலே வடக்கு முஸ்லிம்களின் திரும்பிச் செல்வதற்கான உரிமை தொடர்பில் காட்டப்படும் மெத்தனம் மற்றும் அங்கீகாரம் பற்றி நாம் ஆழமான கரிசணை கொண்டுள்ளோம். 2009ம் ஆண்டு வைகாசி மாதம் யுத்தம் முடிவடைந்த போதிலும், மேலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் கௌரவமாக திரும்பிச்செல்லுதல் பற்றிய ஒரு அறிவித்தலைப் பெற இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் காத்துக்கிடக்கின்றனர்.விரிவாக பார்க்க…
ஜனாதிபதித் தேர்தல் : வெள்ளிக்கிழமை மாலை வரை 730 வன்முறைகள்
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மாலை வரை 730 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் வன்முறைகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் 33பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 16 தீவைப்பு சம்பவங்களுடன் 5 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற மாவட்டமாக குருணாகலில் 71 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலன்னறுவையில் 63 வன்முறைச் சம்பவங்களும், மாத்தறையில் 56 வன்முறைச் சம்பவங்களும் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு 69,000 பொலிஸார், முப்படைகள் கடமையில்
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற நிலையில் நாடுமுழுவதிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
இதற்கமைய இம்முறை தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், பொலிஸாருக்கு உதவியாக முப்படையின ரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.27 வருடங்களுக்கு பின்னர் நாடு முழு வதிலும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறு வது இதுவே முதற்தடவையாகும். இம்முறை நாடு முழுவதிலும் 11 ஆயிரத்து 155 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 413 பொலிஸ் நிலையங்களும், 40 பொலிஸ் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழு வதிலும் 2,523 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு பொலிஸ் குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஐவர் இருப்பர்.ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பொலிஸார் ஆயுதங்களுடன் கடமையில் ஈடுபடுவார்கள்.வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தெற்கின் சில பிரதேசங்களிலும் தேவைப் படும் சில வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸாருடன், முப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார்
ஓட்டமாவடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் வீட்டிற்கு கைக்குண்டு தாக்குதல்
மட்டக்களப்பு ஓட்டமாவடி ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான 38வயதுடைய எம்.எம். முபாரக் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் சுவர் என்பன சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை 3.00 மணியளவில் இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. நகைக் கடையொன்றினை நடத்திவரும் இவர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராவார். இவர் வீட்டில் நித்திரைசெய்து கொண்டிருக்கும் வேளையில் இவரை இலக்குவைத்து இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளபோதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழருடன் உடன்பாடுகள் செய்ததாக சிங்களமக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்படுகின்றன
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
தமிழருடன் உடன்பாடுகள் செய்ததாக கூறி அவை சிங்களமக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்படுகின்றன. அவ்வாறு உடன்பாடுகள் எவற்றிலும் யாரும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழர் பிரச்சினைகளை தீர்ப்போம் என்கின்றவர்கள் ஏன் உடன்பாடுகளுக்கு அஞ்சுகிறார்கள்? தமிழர்களுடன் உடன்பாடு வைக்காமல் எவ்வாறு தமிழர் பிரச்சினைகளை தீர்க்கப்போகின்றார்கள்? தமிழர்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்ற எண்ணம் மறைய வேண்டுமானால் இத்தேர்தலில் சிறுபான்மையினரும் பெரும்பான்மை இனமக்களும் தோளோடு தோள்நின்று சேர்ந்து இனத்துவேஷத்தை அழிக்கவேண்டும். ஊழலை ஒழிக்கவேண்டும். சட்டத்துக்கு உட்பட்ட நிர்வாக செயற்பாட்டு முறையை அறிகம்செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். தற்கால நிலைவரம் மற்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தகவல்கள்கூறுகின்றன .
இறை சிந்தனை + இஸ்லாமிய எழுச்சி = இஸ்லாமிய இயக்கங்கள் பாகம்-2
கணக்கு அறிவே இல்லாத கற்காலத்திலும் 5 + 5 = 10 ஆகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , கண்டுபிடிக்கவில்லை என்பதால் கற்காலத்தில் 5 + 5 = 12 என்றிருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அது போல் இறைவனை காணமுடியவில்லை என்பதால் அல்லாஹ் இல்லை என்ற முடிவுக்கு மனிதனின் ஆறாவது அறிவால் வரமுடியாது . எந்த ஒரு இயற்பியல் , வேதியல் விதியும் ஏற்படுத்தப்பட்டவை தான் . அதைப் பற்றி ஆராய்சி செய்யும் போதுதான் அதைப்பற்றி அறிந்து கொள்கிறோம். எனவே வேதியல் , இயற்பியல் வினைகள் இதற்கு முன்பு இவ்வாறு இல்லை என்று சொல்ல முடியாது, அறிந்தபிறகே இப்பொழுதுதான் கண்டுகொண்டோம் என்று சொல்லவதே சரி. அதே போன்றுதான் இறை இருப்பு சிந்தனை மனிதனின் ஆறாவது அறிவால் மறுக்கமுடியாத சிந்தனையாகிறது
ஆகவே இறைவனை ஏற்றல் இறைவனின் இருப்பை ஏற்றல் என்பது 21ஆம் நூற்றாண்டு விஞ்ஞானமாகி விட்டது என்பதுடன் இன்றைய இஸ்லாமிய எழுச்சியின் பிரதான இயக்கியாகவும் மாறிவிட்டது
எனவேதான் மனிதனில் இறைவன் பற்றிய எழுச்சிக்கு மனித இயல்பூக்கம் , மனிதனின் பகுத்தறிவு ,என்பனவும் உலகில் இஸ்லாமிய எழுச்சிக்கு இவை இரண்டுடன் மனிதனின் உணர்வு போன்ற முன்றாவது இயற்கை காரணியும் நான்காவதாக இஸ்லாம் போதிக்கும் கோட்பாடுகளும் இன்றைய நாவீன இஸ்லாமிய எழுச்சிக்கு அத்திவாரமாய் அமைந்து இருக்கிறது விரிவாக பார்க்க…
தேர்தல் பிரச்சாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி, சுவரொட்டி ஒட்டுதல், பதாகை அமைத்தல், துண்டுப் பிரசுர விநியோகம் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் நள்ளிரவுடன் முடிவுறுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.மேலும், கட்சி அலுவலகங்கள் நாளைய தினம் நள்ளிரவுக்குள் அகற்றிக்கொள்ளப்பட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஒரு கட்சிக் காரியாலத்தை பேண முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஷாப்பிங் பாக்” (Shopping Bag) புகழ் முன்னாள் ஈழவர் தலைவரும்; “தமிழ் பேசும் மக்களின் தலைமகனும்” ஒரே மேடையில் சப்பைக்கட்டு.
இப்போது எதிரிகள் சகோ தர வாஞ்சைகள் பொங்கி பிரவகிக்க ஆளை ஆள் அணைத்து கொள்கிறார்கள், இதற்கு முன்பும் குறுகிய கால பகைவர்களும் குறுகிய கால நண்பர்களும் அரசியலில் காணப்பட்டனர் ; ஆனால் இன்றைய அரசியல் சூழலில் வரும் செய்திகள் தன்னை கிள்ளி நாம் காண்பது கனவா என்று நம்மையே ஒரு உணர்வுப் பரிசோதனை செய்யவேண்டி இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, எனக்கு பழைய நினைவுகளை இவ்வாறான புதினச் செய்திகள் மீட்டச்செய்கின்றன; ஒருவேளை நான் இங்கு குறிப்பிடும் சில அரசியல்வாதிகள் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த அந்த “ஆண்டிகளை” போல அமைந்துவிட்டதால் ஒரு விதத்தில் நான்அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அண்மையில் சம்பந்த சகோதரர்கள் முன்னாள் ஈழவ சகோதரர்கள் , தமிழ் பேசும் மக்கள் என ஒரு புதிய கூட்டு மகிந்தவை கவிழ்த்துவிடும் கனவில் மட்டுமல்ல தமது கட்சிகளின் எதிர்கால இருத்தலை உறுதிசெய்வதில் இந்த தேர்தலை தமது ஜீவ மரண போராட்ட அரசியலாக பார்க்கிறார்கள். விரிவாக பார்க்க..
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் விசேட அறிக்கை
விசேட அறிக்கை:
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் பெயரை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிபதாக உலமா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது, ஜனாதிபதி வேட்பாளர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் எவரும் இலங்கை முஸ்லிம்களின் தாய் அமைப்பான எந்த அரசியல் சார்பும் இன்றி இயங்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரை பண்படுத்த கூடாது என்று கண்டிப்பாக கேட்டு கொண்டுள்ளதுடன் தாம் யாரையும் ஆதரிக்குமாறு கேட்டு கொள்ளவில்லை என்றும் குறிட்பிடுள்ளது இந்த விசேட அறிக்கை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையில் பிரதிப் பொது செயலாளர் அஷ்ஷெக் தாசிம் வெளியிட்டுள்ளார்.
யாழ் குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை !
1996 இல் யாழ் குடாநாடு புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கபட்ட பின்னரும் யாழ்ப்பாணம் பெரிய பள்ளி- The Jaffna Grand Mosque – பள்ளியின் நிலை இன்றுவரை இப்படிதான் தொடர்கிறது இந்த படங்கள் 10.01.2010 அன்று எடுக்கப்பட்டவை,குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இருந்தும் 2 மஸ்ஜிதுகள் தான் பழையை நிலைக்கு ஓரளவு திரும்பி இருக்கிறது என்பது குறிபிடதக்கது ,மற்ற மஸ்ஜிதுகள் அனைத்தும் அழிக்கபட்ட, சிதைக்கபட்ட நிலையில் தான் இன்னும் இருக்கிறது,இது தொடர்பாக எமது தொடர் செய்திகளை எதிர்பாருங்கள்
யாழ்ப்பாணம் பெரிய பள்ளி The Grand Mosque இன்றைய தோற்றம் படம் 10.01.2010
Dr. தாரிக் FBI க்கு வேலை செய்ய மறுத்ததால் போலி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று 92 டாவது நாள் !
உலகில் முஸ்லிம் நாடுகள் பல ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, இனசுத்திகரிப்பு , போன்ற மேற்கு மேலாதிக்க பயங்கரவாதிகளின் இராணுவ இயந்திரத்தின் கொடுமைகளை எதிர் கொள்வதை போன்று உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம்கள் கடத்தல் , கைது , விசாரணை ,சித்திரவதை ,கொலை போன்ற அரச பயங்கரவாத்தின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர் தினமும் முஸ்லிம் வாலிபர்கள் வதை முகாம்களை சந்திக்கின்றனர் , வதைக்க பட்டு கொலை செய்யபடுகின்றனர் , கடத்த படுகின்றனர் வெளி உலகுக்கு தெரியாமல் வதைத்து புதைக்க படும் வாலிபர்கள் தொகை தினமும் அதிகரித்து செல்கிறது கடத்த படும்போது அறியப்பட்டவர்கள் மட்டும் விசாரணை என்ற பெயரில் மீண்டும் வதைக்க படுகின்றனர்.
டாக்டர் தாரிக் மேஹன்னா இவர்களில் ஒருவர் டாக்டர் தாரிக் மேஹன்னா 27 வயது நிரம்பிய இளம் முஸ்லிம் அமெரிக்கர் இவர் அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவில் உயர்கல்வி கற்று Phd பட்டம் பெற்ற ஒரு புத்திஜீவி இஸ்லாமிய துடிப்பு , சமுக சேவை , மாற்று மத சமுகம் மத்தியில் சமாதான செயல் பாடுகள் போன்ற வற்றால் மிகவும் அவரின் பகுதியில் அறியப்பட்டவர் இவரிடம் இருந்த சமுக தொடர்பாடல் , முஸ்லிம் சமுகத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு விரிவாக பார்க்க…
இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும். 07
தமிழீழ விடுதலைப் புலிகளின் முடிவைத் தேடித்தந்த ஐந்தாவது ஜனாதிபதித் தேர்தல்
இலங்கையில் 3வது ஜனாதிபதித் தேர்தல் 1994.11.09ஆந் திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்கவின் பதவிக்காலம் 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆந் திகதி முடிவடைவதற்கு இருந்தது. இந்நிலையில்தான் 4வது ஜனாதிபதித் தேர்தலை 1999.12.21ஆந் திகதி தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக அரசியல் அமைப்பின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கிணங்க முன்கூட்டியே நடத்தினார். இத்தேர்தலிலும் வெற்றியீட்டிய சந்திரிக்கா குமாரதுங்க 1999.12.22ஆந் திகதி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
2005ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் சந்திரிக்கா குமாரதுங்க 4வது ஜனாதிபதித் தேர்தலின்போது முன்கூட்டி தேர்தலை நடாத்தியதால் தமது எஞ்சிய பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதன்படி சந்திரிக்கா குமாரதுங்கவின் முதலாவது பதவிக்காலம் 6 ஆண்டுகாலம் முடிவடையும் நேரத்திலும் (2000 நவம்பர்) அவர் மீளவும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விரிவாக பார்க்க
ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும்-முற்றும்
1988 ஜனாதிபதி தேர்தல் முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்காரணம் , மாகாணசபைத்தேர்தலின் பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஜே. வீ. பீ தொடக்கம் தெற்கிலே உள்ள தேசிய சக்திகள் முடுக்கி விட்ட தேசிய வாதமும் ( இத் தேசிய வாதம் அரசியல் ரீதியில் இன முரண்பாடு கூர்மையடைந்த ஒரு புள்ளிகளில் ஒன்றாக இந்திய இலங்கை ஒப்பந்தம் அமைந்ததால் சிங்கள தேசிய வாதமாக அடாயாளப்படுத்த பட்டது ) இவ் ஒப்பந்தம் ஜே ஆர் ஜெயவர்த்தனவின் அரசில் உட்கிடையான கலகத்தை ஏற்படுத்தி அக்கட்சியின் முக்கிய சில உறுப்பினர்களின் எதிர்ப்புக்களுடன் நிறைவேற்றப்பட்டதால் அக்கட்சியிலிருந்து முதலில் விவசாயத்துறை அமைச்சர் காமினி ஜெயசூரிய வெளியேறி இனவாத அடிப்படையில் “சிங்கள ஆரக்சக சந்விதாணய” (Sinhala Araksaka Sanvithaanaya ) என்ற கட்சியினை உருவாக்கினார். இக்கட்சி வழக்கம் போலவே சிங்கள மக்களால் இனவாத கட்சியாக நிராகரிக்கப்பட்டது. இத்தகு முன்னரும் பல சிங்கள தேசிய வாத , இனவாத கட்சிகள் சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டது. அப்படியாயின் எப்படி சிங்கள இனவாத கட்சியாக இன்று அறியப்படும் சிஹல உறுமய எப்படி நாடாளுமன்றத்தில் உள்ளிடும் அளவுக்கு செல்வாக்குப்பெற்றது என்பது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.விரிவாக பார்க்க
Dr.ஆபியா சித்தீக்கி கோட் ரூமை விட்டும் பொலிசாரினால் வெளியேற்றபட்டார்
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருகும் முஸ்லிம் பெண் Dr.ஆபியா வழக்கு நேற்று 19.01.2010 அமெரிக்க நேரம் கலை 9.00 மணிக்கு நியூ யார்க் நகரின் விசாரனைக்கு வந்தது இவர்மீது அல் கைதாவுடன் தொடர்புடைய எந்த குற்ற சாட்டுகளும் அரச தரப்பால் முன்வைக்க முடிய வில்லை ஆனால் அமெரிக்க புலனாய்வு ஏஜன்ட்டுகாளால் ஆப்கானிஸ்தான் இரகசிய சிறையில் அடைக்கப்பட்திருந்த போது ஒரு FBI அதிகாரியிடம் துப்பாகியை பறித்து அந்த FBI அதிகாரியையும் ஒரு இராணுவ அதிகாரியையும் சுட்டார் என்றும் , பேரழிவு தாக்குதல் -mass-casualty attacks-என்று எழுதப்பட்ட ஒரு ஆவணம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்த பட்டுள்ளார். இதை Dr.ஆபியா வின் சட்டத்தரணி முற்றாக மறுத்தார் , அல் கைதாவுடன் தொடர்புடைய எந்த ஆதாரமும் இல்லாத போதும் Dr.ஆபியாவை போலியான ஆதாரங்களின் ஊடாக ஆயுள் தண்டனையை பெற்று கொடுபதற்கு அமெரிக்க புலனாய்வு தரப்புகள் முயல்வதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன , வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் பார்வையாளர் பக்கம் திருப்பி பேசிய Dr.ஆபியா தனக்கு எந்த விரிவாக பார்க்க..
இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் “தலைமகன்” விருது அளிப்பு
கல்முனை மாநகர சபையின் 2010ஆம் ஆண்டுக்கான உயர் விருதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களின் “தலைமகன்” விருது கல்முனை மாநகர மேயர் எச்.எம்.எம். ஹரீஸால் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய சம்பந்தன் எம்.பி. கூறியதாவது: கல்முனை மண்ணில் இன்று எனக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் எனக்குரியதல்ல. தமிழ் முஸ்லிம் உறவை எதிர்பார்த்து நிற்கும் அனைவருக்கும் உரியதாகும். அரசியலில் நேர்மை. உண்மை என்பவற்றைக் கொண்ட பாரம்பரியத்துடன் நான் கடந்து வந்த பாதைக்குக் கிடைத்த கௌரவம் என்றே இதனைக் கருதுகின்றேன். விரிவாக பார்க்க…
தமிழர்களும் முஸ்லிம்களும் புட்டும் தேங்காய்ப் பூவும் போல என்று செல்கிறாராம் இரா சம்பந்தன்
தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய காலம் கனிந்துவிட்டது.வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல் முஸ்லிம்களும் இல்லை. முஸ்லிம்கள் இல்லாமல் தமிழர்களும் வாழ முடியாது என்ற யதார்த்தம் தமிழ் பேசும் மக்களால் உணரப்பட்டுள்ளது. விரிவாக பார்க்க…
புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு
புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு தாம் பின்னால் இருந்து செயற்பட்டதாக வெளியாகும் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள்கூறுகின்றன .
இந்தநிலையில் 2005 ஆம் ஆண்டு தமது தோல்விக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.கருணா, தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்தமையானது அவர்களின் உள்ளகப் பிரச்சினையாகும். அது தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அவ்வாறு சாட்சியம் இருக்குமானால், அதனை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.திருகோணமலை மாவிலாறு பிரச்சினையே, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கான காரணமாகும்.இந்தநிலையில் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கவே செயற்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினர் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் புடவைத்துண்டு போல் சரத்பொன்சேகா
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் :ரவூப் ஹக்கீம்
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்தையோ அவர்களுடைய ஆயுதப் போராட்டத்தையோ கீழ்த்தரமாகப் கொச்சைப்படுத்திப் பேசுகின்ற அரசியலில் ஈடுபட்டதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஹக்கீம் இங்கு தொடர்ந்து பேசுகையில்ஏன் ஜெனரல் சரத்பொன்சேகாவை இந்தத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களும் நான்கு, ஐந்து மணித்தியாலங்கள் பேசினோம். அதன் போது சரத்பொன்சேகா என்றால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் இராணுவ நடவடிக்கைகளை கொடூரமாகச் செய்தவர் என்ற வித்தியாசமான கருத்து இருந்தது. இவரை எப்படித் தமிழ் மக்கள் மத்தியில் சந்தைப்படுத்துவது என்ற அச்சம் காணப்பட்டது.விரிவாக பார்க்க
அக்கரைப்பற்றில் துப்பாக்கி சூடு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் காயம்
அக்கரைப்பற்று பழைய திரையரங்கு பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இன்று காலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளரான சூர்த்தீன் றிபாஸ் (19 வயது) காயமடைந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது .இந்த சம்பவத்திற்கு கருணா தரப்பினரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின், சாகாமம் வீதியில் அமைந்துள்ள வியாபார கட்டிடத்தொகுதி நேற்று நள்ளிரவு தீயிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




































