Lankamuslim.org

One World One Ummah

Archive for December 24th, 2009

அபூபக்கர் (றழி) அவர்களை முஸ்லிம்கள் கிலாபத்தின் ஆட்சி தலைவராக நியமித்தபோது

leave a comment »

அபூபக்கர் (றழி) தனது பதவியேற்பு உரையில்:

“உங்களின் பொருப்பாளனாக நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.  நான் உங்களைவிட மேலானவன் அல்ல. உங்களின் விடயத்தில் நான் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் போதெல்லாம் எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். நான் அவனுக்கு மாறு செய்தால் என்னை திருத்திவிடுங்கள்” என அனைவரையும் வேண்டிகொள்கிறேன் என்றார்கள்

Written by lankamuslim

December 24, 2009 at 1:33 pm

Posted in ஹதீஸ்

மஹிந்த சிந்தனையின் இரண்டாம் கட்ட கொள்கைப் பிரடகடனம்

leave a comment »

மஹிந்த சிந்தனையின் இரண்டாம் கட்ட கொள்கைப் பிரடகடனம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரமாளவில் குறித்த சிந்தனைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வெளியிடப்படும் என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நாடு முழுவதனையும் உள்ளடக்கிய பாரிய அபிவிருத்தித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர் வடிகாலமைப்பு, பெருந்தெருக்கள், விவசாயம், உள்ளிட்ட பல துறைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.மஹிந்த சிந்தனையின் இரண்டாம் கட்டத்தின் அடிப்படையில் நாட்டின் சகல மக்களுக்கும் மின்சார வசதி வழங்கப்பட உள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

December 24, 2009 at 12:43 pm

மட்டு, அம்பாறை மாவட்டங்களில் வெள்ளம்; 23,000 குடும்பங்கள் பாதிப்பு

leave a comment »

அம்பாறை மாவட்ட த்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக இம் மாவட்டத்தில் 23, 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அம்பாறை அரச அதிபருக்கு வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் பணிப்புரை விடுத்துள்ளார்.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 300 குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 150 குடும்பங்கள் இடம் பெயர்ந்து ள்ளன. அக்கரைப்பற்று பிரதேச செய லாளர் பிரிவில் 1800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு 200 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலாளர் பிரிவில் 1400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 70 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

Written by lankamuslim

December 24, 2009 at 12:27 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,816 other followers