Lankamuslim.org

One World One Ummah

Archive for December 22nd, 2009

இந்திய அரசாங்கம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி

leave a comment »

வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான வடக்கு பகுதியின் புகையிரத சேவையை புனரமைக்கும் முகமாக இந்திய அரசாங்கம் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய அரசாங்கம் இந்த நிதியுதவி குறித்து அறிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவியின் கீழ் ஓமந்தை முதல் பலாலி வரையிலான புகையிரத பாதையில், வரையறுக்கப்பட்ட இந்திய ரெயில்வே கொன்ஸ்டக்சன் நிறுவனம், நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது.இந்தியா,வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தமது முதலீடுகளையும் அதிகரித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

December 22, 2009 at 9:15 pm

மீண்டும் கூடிய த.தே.கூட்டமைப்பு தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை

leave a comment »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்று ஆராய்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில், இந்த சந்திப்பு இன்று, முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றது.இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களும் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.

இந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.இதனையடுத்து எதிர்வரும் 4 ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதென்றும் அதுவரையில் மீண்டும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும்

Written by lankamuslim

December 22, 2009 at 9:05 pm

என் அண்ணன்கள் அக்காக்கள் எங்கே..??!

with 2 comments

பிரித்து செதுக்கியவர்  M. ஷாமில் முஹம்மட்

உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி
வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??!
களப்பலியாய் போனவர் போகட்டும்

ஆனால்..
சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய்
உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???!

கவிபாடும் தமிழ் சொல்லாலே
முஸ்லிம்களை தமிழீழத் துரோகிகள் என பாடி புலியெனப் பாய்ந்த
புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??!

“ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு” என்ற சொல்லை வகுத்து
ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து
புலிப் பாசறை புகுந்து முஸ்லிம்கள் ஈழத்தின் கேன்சர் என போதித்த
அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??!

விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 22, 2009 at 2:02 pm

வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

leave a comment »

என் சபேசன்

கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 22, 2009 at 11:49 am

பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்

leave a comment »

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி கோரிக்கை:

கடந்த மே மாதம் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின் போது மூன்று சிரேஷ்ட விடுதலைப்புலி உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் மரணமடைந்த சூழ்நிலை குறித்து விளக்கமளிக்குமாறு நீதி விசாரணையற்ற கொலைகள் அல்லது தன்னிச்சையான மரண தண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் இளைப்பாறிய ஜென ரல் சரத் பொன்சேகா டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வெளியான ஆங்கில வாரப்பத்திரிகையான சண்டே லீடருக்கு அளித்த பேட்டி ஒன்றில் மேற்படி கொலைகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டியதை அடுத்தே அது பற்றி விளக்கம் கோரப்படுவதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

December 22, 2009 at 11:11 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,801 other followers