Archive for November 30th, 2009
முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றிய “நேர் அணுகுமுறை”( Positive approach) :M.ஷாமில் முஹம்மட்
M.ஷாமில் முஹம்மட்
முஸ்லிம்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறுதிதூதர் என நம்புகிறார்கள்முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வேத நூலை அல்குர்ஆனை முழுமையாக நம்புகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸஹிஹான ஹதீஸ்களை முழுமையாக நம்பி விசுவாசிக்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகைக்காக அழைகின்றார்கள்.
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு இறைவனை , ஒரு திசையை நோக்கி தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் இறைவனை தொழுகிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு வைக்கின்றார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஸகாத் கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ஜை கடமையை தமது கடமையாக கொள்கிறார்கள் விரிவாக Read the rest of this entry »
ஜனாதிபதி வேட்பாளர்கள் 6 ஆகுமா ?

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 6 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும், புதிய இடதுசாரி முன்னணி விக்ரமபாகு கருணாரத்னவும், சோசலிச சமசமாஜ கட்சி விஜே டயஸ், பிக்குகள் முன்னணி தேரர் பத்தரமுல்ல சீலாரத்னவும் அதே நேரம் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பல தரப்பினரும் முனைந்து வருவதாக தெரிகிறது









