Lankamuslim.org

One World One Ummah

Archive for October 22nd, 2009

பலபக்க அடிகளை சுமக்க முஸ்லிம் உம்மாஹ் தயாராக வேண்டும்

with 4 comments

http://lh6.ggpht.com/_mNL7kayLujA/RtgIAKVxBRI/AAAAAAAAABw/yJKVEhcOMC0/One+Ummah+Flag.gif.jpg

M.ஷாமில் முஹம்மட்: இரண்டு மஸ்ஜிதுகளில்  நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில்,70  பேர் வபாத்தானார்கள்  யார் உண்மையான சூத்திரதாறி ?

அமெரிக்காவின் ஒட்டு மொத்த  கொத்தடிமையாகி விட்டது 1000 கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள் .

ஏன் பல இஸ்லாமிய  இயக்கங்களை இஸ்லாமிய போராட்டங்கள் பற்றி பேசுவதில் இருந்து தூர படுத்தி உலகில் இஸ்லாமிய   ஆட்சி உதயமாவதைத் தடுப்பதே அதன் பிரதான நோக்கமாக இருக்கிறது.

காஷ்மீரை சீனாவும் சிங்கியாங்கை  இந்தியாயும் தமது அரசியல் இராணுவ லாபங்களுக்கு பயன்படுத்தி இரு முஸ்லிம் தேசங்களையும் இரு ஆப்கானிஸ்தான்களாக்க முயற்சிசெய்து வருகின்றன இப்படித்தான் ஆப்கானிஸ்தானை அமெரிக்கவும் ரஷ்சியாவும்  தமது அரசியல் இராணுவ லாபங்களுக்கு பயன்படுத்தி இஸ்லாமிய சக்திகளை தமக்குள்  மோதவிட்டு இன்றுவரையும் அழிவுகளை மட்டும் அந்த மக்கள் அறுவடை  செய்யும் சமுகமாக உலகுக்கு காட்டி அதனுடாக இஸ்லாமிய புரட்சிகளை அழிவுகளின் ஊற்றாக தோற்றம் செய்து அதில் வாகையும் சூடிவருகிறது

காஷ்மீரிலிருந்து விசா கோரி விண்ணப்பிப்போருக்கு தனியான விசாவைத் கொடுத்து  இந்தியாவை சீண்டி வரும் சீனா காஷ்மீர முஸ்லிம் தேசத்தின் உண்மையான நண்பன் அல்ல, தற்போது சீனா காஷ்மீரை தனி நாடாக காட்டி  இந்தியாவை எரிச்சல்படுத்தியுள்ளது. திபெத்துக்கு வரும் பத்திரிக்கையாளர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சீன அரசின் சார்பில் ஒரு கையேடு கொடு்க்கபடுகிறது . அதில் காஷ்மீரை தனி ஒரு தேசமாக சீனா  குறிப்பிட்டுள்ளது.

அந்த ஆவணத்தில்  திபெத்தின் எல்லைகளாக இந்தியா, நேபாளம், மியான்மர், காஷ்மீர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது காஷ்மீரை தனி நாடாக அது சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல, சீனாவில் கிடைக்கும் வரைபடங்களிலும் கூட காஷ்மீர் இல்லாத இந்தியாதான் காணப்படுகிறது இந்த இரு நாடுகளும் அமெரிகாவையும் ரஷசியாவையும் போன்று இஸ்லாமிய புரட்சியில் எதிரிகள்தான்  ஆனாலும் சீனா காஷ்மீரை ஆதறிப்பதற்கும் இந்தியா சிங்கியாங்கை ஆதறிப்பதற்கும் போக்கை கடைபிடிக்க முனைவற்கும் துய்மையான எந்த மனிதாவிமான காரணகளும் இல்லை தமது பொருளாதார இராணுவ காரணங்களை தவிர

இந்நிலையில் இந்தியா சீனாவில் சிங்கியாங் என்கிற  முஸ்லிம்  தேசம் பற்றி அதிக அக்கறை காட்ட தொடங்கியுள்ளது   சிங்கியாங்  சீனாவின் அதிகமாக அறியபடாத  முஸ்லிம் தேசம்  ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் (6/1 ) ஆறில் ஒரு பங்கு. இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி இது இலங்கை போன்று 27  மடங்கு பெரியது   அங்கு முஸ்லிம்கள் பேசமுடியாதவாறு முஸ்லிம்களின் குரல்வளை நெறிக்கபட்டுள்ளது இங்கு இந்தியா தனது உளவு நிறுவங்களை இறக்கியுள்ளது  இந்திய மாணவர்கள்  7,000 பேர் சீனாவில் பயில்கின்றனர் என்பது குறிபிடதக்கது.

இரு பிரமாண்டங்களின் இராணுவ அரசியல் விளையாட்டில் பந்தாட படுவது  முஸ்லிம் தேசங்கள்தான் எதிரிக்கு எதிரி நன்பன் என்ற வகையில் முஸ்லிம்கள் உதவிகளை பெற்றாலும்  இறுதியில் பாதிக்க படுவது முஸ்லிம்கள்தான் தமது இராணுவ பொருளாதார அடைவுகளை பெற்று கொள்ளும் முயட்சியின் இறுதியில் அழிவுகளை சுமப்பது முஸ்லிம்கள் மட்டுமாகத்தான் இருக்கும்   ஏன் என்றால் காஷ்மீர், சிங்கியாங் போராளிகளை  தூண்டும் புரட்சிகர விடுதலை சக்தியாக இருப்பது அவர்களால் சகிக்க முடியாத   இஸ்லாம் என்ற மாபெரும் சக்தி உலகின் பெரும் பகுதியை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்து மிக பிரமாண்டமான இஸ்லாமிய அரசை நிறுவி இருண்டு கிடந்த ஐரோப்பாவை தட்டி எலுப்பி அறிவியலையும் நாகரிகத்தையும் முதல் முதலில் உலகுக்கு கற்று கொடுத்த நாகரிக வல்லரசு, இந்த மனித நாகரிக இஸ்லாமிய புரட்சியை தடுப்பதற்கு எல்லாவிதமான அநாகரிக வழிமுறைகளையும்   எதிரி செய்கின்றான் முஸ்லிம் உம்மாஹ் முழுமையாக அதன் வலையில் சிக்கி விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று முன்தினம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக மொன்றில்  இடம்பெற்ற இரட்டைக் குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர்  வபாத்தானதுடன்  12 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் யார் கொல்லப்பட்டது   முஸ்லிம்கள்  யார் செய்ததாக காட்டப்பட்டது முஸ்லிம் தீவிரவாதிகள்  உண்மையான சூத்திரதாறி இஸ்லாத்தின் எதிரி ?.

அண்மையில் பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் இரண்டு மஸ்ஜிதுகளில்  நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில்,70  பேர் வபாத்தானார்கள்  யார் கொல்லப்பட்டது மஸ்ஜித் இமாம் உட்பட முஸ்லிம்கள்  யார் செய்ததாக காட்டப்பட்டது முஸ்லிம் தீவிரவாதிகள் இங்கும் உண்மையான சூத்திரதாறி  ?.

ஈராக்கில் பல தடவைகள் மஸ்ஜிதுகளில்  நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் பல நூறு மனிதர்கள் வபாத்தானார்கள்  யார் கொல்லப்பட்டது மஸ்ஜித் இமாம் உட்பட முஸ்லிம்கள்  யார் செய்ததாக காட்டப்பட்டது முஸ்லிம் தீவிரவாதிகள் உண்மையான சூத்திரதாறி இங்கும் ?.

ஆப்கானிஸ்தானில் இதை போன்று பல தடவைகள் மஸ்ஜிதுகளில்  நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் பல நூறு மனிதர்கள் வபாத்தானார்கள் இங்கும் அந்த கேல்வி அந்த பதில் ஆனால் உண்மையான சூத்திரதாறி இங்கும் அவர்கள்தான்

அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் 93 இல் மேற்கொண்ட பாகிஸ்தான் விஜயத்தை அடுத்து பாகிஸ்தான் அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முன்வந்தது. இன்று பாகிஸ்தான் அமெரிகாவின் ஒட்டு மொத்த  கொத்தடிமையாகி விட்டது 1000 கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள் அமெரிக்காவுக்கு உளவு பார்கின்றனர், அமெரிக்கா இடும் கட்டளைகளை விசுவாசமாக  அடிமைத்தனத்தை வெளிபடுத்தி செய்து முடிகின்றனர்.   அவர்கள் மஸ்ஜிதுகளில் குண்டும் வைப்பார்கள் முஸ்லிம் பாமரர்களின் உணர்வுகளை தூண்டி தமக்கு தேவையான மனித வெடிகுண்டுகளையும் உருவாக்குவார்கள்.

இதன்படி அமெரிக்காவைத் திருப்திப்படுத்த எண்ணிய பாகிஸ்தான் அமெரிக்காவின் அனைத்து ஆணைகளுக்கும் அடிபணிந்தது. அமெரிக்க உளவு நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் அரச இயந்திரத்தின் மூலம் உலகில் இஸ்லாமிய ஆட்சி உதயமாகப் போகின்றது என்ற கனவுகளைச் சுமந்திருந்த இஸ்லாமிய  போராட்டத்தை திசை மாற்றுவதே இவர்களின் நோக்காக இருந்தது அதன் படி செய்தும் காட்டினார்கள்.

இஸ்லாமிய  போராட்டத்தில்  பொது மக்களை இலக்கு வைக்கும   இப்படியான  தாக்குதல்கள் மூலம் முஸ்லிம்கள் மத்தியில்   குழப்ப நிலைகளைத் தூண்டுவதன் மூலம் உலகளாவிய   இஸ்லாமிய போராளிகளை முஸ்லிம் சமுகத்தில் இருந்து தூரப்படுத்தி ஏன் பல இஸ்லாமிய இயக்கங்களை இஸ்லாமிய போராட்டங்கள் பற்றி பேசுவதில் இருந்து தூர படுத்தி உலகில் இஸ்லாமிய   ஆட்சி உதயமாவதைத் தடுப்பதே அதன் பிரதான நோக்கமாக இருக்கிறது.

இந்த சதி நாசகார வேலைகளின் ஏகபோக  உரிமை அமெரிகா  ரஷ்சியாவிடமும் இருந்து இப்போது இந்தியா, சீனாவும் பெற்றுகொண்டுள்ளது  பலபக்க அடிகளை சுமக்க முஸ்லிம் உம்மாஹ் தயாராகவேண்டும்-

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (இறை ) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை நிச்சயமாக  முழுமைப்படுத்தி வைப்பான்  . (அல்குர்ஆன் 9:32)

Written by lankamuslim

October 22, 2009 at 10:19 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers