Lankamuslim.org

One World One Ummah

“முஸ்லிம்” -என்பது விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்: M.ஷாமில் முஹம்மட்

with 5 comments

http://images-3.redbubble.net/img/art/size:large/view:main/1543341-3-lost-identity.jpg

நமது சமூக அடையாளம் ?
நமது அரசியல் அடையாளம் ?
நமது வரலாற்று அடையாளம் ?
நமது கோட்பாட்டு அடையாளம் ?
நமது இஸ்லாமிய கிலாபத் அடையாளம் ?

இருப்பு  சிந்தனையை தீர்மானிக்கிறது இருப்பு என்பது புறச்சுழல் சிந்தனை என்பது அகச்சூழல் . ஒரு முஸ்லிமை பொருத்தவரை சிந்தனைதான் இருப்பை தீர்மானிக்க வேண்டும் ஒரு முஸ்லிம் விவசாயியாகவும் தொழிலாளியாகவும் முதலாளியாகவும் மத்தியதர உயர்தர  வர்க்கத்தவனாகவும் இருகிறான் இது வர்க்க அடையாளம் , ஒரு முஸ்லிம் வடக்கு சார்ந்தவனாக கிழக்கு சார்ந்தவனாக இருகிறான் இது பிரதேச அடையாளம், ஒரு முஸ்லிம் ஆணாகவோ பெண்ணாகவோ இருகிறான் இது பாலியல் அடையாளம் ஒரு குடும்பதுக்குள் தந்தையாக, தாயாக, மகனாக இருகிறான் இது உறவு முறை அடையாளம் .

இந்த அடையாளங்களைப்   போன்ற ஒரு அடையாளம்தான் மொழி அடையாளம் மொழி ரீதியாக தமிழ் பேசுபவானாக, சிங்களம் பேசுபவானாக, அரபு பேசுபவானாக, சீன மொழி பேசுபவானாக இருகிறான் இது மொழிஅடையாளம் விரிவாக பார்க்க இந்த அடையாளங்கள் எல்லாம் முஸ்லிம் என்ற சிந்தனை கோட்பாட்டு அடையாளத்தினுள் மிக சிறிய அடையாள அடுக்குகளாக இருக்கிறது இந்த சிறிய அடையாள அடுக்குகளை புறக்கணித்து முஸ்லிம் என்ற அடையாள முத்திரையை ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுதான்  இஸ்லாமிய சித்தாந்தம் போதிக்கும் அடையாளமாகும் விரிவாக பார்க்க

இந்த அடையாளத்தை அடையாளப்படுத்தும் போதுதான்  இஸ்லாமிய   சித்தாந்தம் வலுவடைகிறது. இந்த அடையாளத்தை கொண்ட  மனிதம் பலம் பெருக்கிறது. முஸ்லிம்மனிதம் பலம் பெரும்போது எமது அடையாளம் தலை நிமிர்த்தும்.  முஸ்லிம் தன்னை எப்போதும் ஒரு முஸ்லிமாக மட்டும்தான் அடையாள படுத்த முடியும் முஸ்லிம் சமூகத்திடம் அதன் அனைத்து அடையாளங்களையும் மீறி நாம் முஸ்லிம் என்ற அடையாளம் வெளிப்பட வேண்டும் , முஸ்லிம் அடையாளம் என்பது  இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டை  ஏற்று கொண்டவர்களின் அரசியல் அடையாளமாகும் , இஸ்லாம் முஸ்லிம் என்ற கோட்பாட்டு சமுதாய அடயாளத்தை கட்டமைத்து உருவாக்கி எம்மிடம் தந்துள்ளது இந்த அடையாளத்தை பாதுகாப்பது எமது இருப்பை பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். இன்று  பிரதேசவாத சிந்தனைகள் முஸ்லிம் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக  மாறிவருகின்றது இந்த சிந்தனைகள், வாதங்கள் முற்றிலும் இஸ்லாமிய சிந்தனைக் கோட்பாடுகளுக்கு விரோதமானது என்பதுடன் இவற்றை ஆதரிப்பது பெரும் தவறாகும் அதேபோன்று இன அடையாளங்கை முதன்மை படுத்திய அரசியல் ,சமூக நடத்தைகள் இஸ்லாமிய சகோதரத்துவத்தை பிளவு படுத்தும் நிலை ஏற்பட்டால் அது முற்றிலும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும்

இஸ்லாமியர் என்பதை கூட சரியான அடையாளமாக ஏற்று கொள்ளமுடியாது இஸ்லாத்தை ஏற்றுகொண்டவர்களை அல் குர்ஆன் இஸ்லாமியூன் – இஸ்லாமியர் என்று அழைக்கவில்லை அதற்கு மாற்றமாக முஸ்லிம் என்று அழைக்குமாறு கற்றுத்தருகின்றது

இந்த அடையாளம்தான் இலங்கையிலும் எமது அடையாளம் இலங்கையில் மூன்று பிரதான இனக் குழுக்கள் வாழ்கின்றன சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்பது இலங்கை இனங்கள் பற்றிய ஆய்வில்  ஏற்றுகொள்ளப்பட்ட   அணுகுமுறையாக இருக்கிறது.  இருப்பினும் இதற்கு சமாந்திரமான வாதங்கள் முன்வைக்கப்படுவதுண்டு இலங்கையில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமிழ் மொழியை தமது தாய் மொழியாக கொண்டிருப்பதால் சில தமிழ் சிங்கள  ஆய்வாளர்கள் முஸ்லிம்களை தமிழ் இனத்தின் ஊடாக அடையாளப்படுத்த முற்பட்டுள்ளனர் இவர்கள் முஸ்லிம்களை தமிழ் இனத்தின் ஒரு மதப் பிரிவாக காட்ட முனைத்துள்ளனர் எனினும் இந்த முனைப்பு முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்ட முனைப்பாக அமைந்ததுடன் முஸ்லிம்களை தமிழர்களின் ஒரு மதப் பிரிவாக பார்க்கும் அணுகு முறை வளர்ச்சிக்கு முற்றுபுள்ளி வைத்தது.

ஏழாம்   நூற்றாண்டு  முற்பட்ட காலத்தில் இருந்து இலங்கையுடன் அரபிகள் மிக நெருக்கமான வியாபார தொடர்பை பேணி வந்ததுடன் இலங்கையில் வாழ்ந்தும் வந்தனர் இதற்கு சாதகமாக பல சான்றுகள் முன்வைக்கப்படுகின்றது  எனிலும் இஸ்லாமிய கோட்பாடானது ஏழாம்  நுற்றாண்டுக்கு இறுதிப் பகுதியில் இலங்கையில் அறிமுகமானது    ஏற்கனவே    இலங்கையில் வாழ்ந்த அரபிகள் இஸ்லாத்தை ஏற்றதாலும் புதிதாக வந்தவர்கள் இலங்கை பெண்களை திருமணம் முடித்ததாலும் இஸ்லாமிய கோட்பாடு இலங்கையில் வேர் ஊன்றியது புதிதாய் ஏழாம் நூற்றான்டில் அறிமுகமான கோட்பாட்டு அரபியருக்கும் சிங்களவருக்கும் தமிழருக்கும் முஸ்லிம் என்ற ஒரு அடையாளத்தை  கொடுத்தது  அதை மட்டும்தான் அது அங்கீகரித்தது மற்றைய அடையாளங்களை அனைத்தையும் அது கழற்றி வீசிவிட்டது.

ஏழாம் நூற்றாண்டில் பின்னர்  சர்வதேச முஸ்லிம்களின் வர்த்தக தொடர்பு இலங்கையுடன் மிகவும் அர்த்த புஷடியுள்ளதாக காணப்பட்டது பல நாடுகளின் இருந்து முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தனர் சிரியா, மொரோகோ , யெமன் , எதியோபியா , ஈரான் , ஈராக் , மலேசியா இந்தியவின் தமிழ் நாடு , கேரளா,குஜராத் போன்ற நாடுகளில் இருந்து பல மொழி பேசக்கூடிய பல இன மக்கள் வந்தனர் இவர்கள் வியாபார மொழியாக அரபி தான் பேசினார்கள் ஆனால் இவர்கள் அனைவரும் முஸ்லிம் என்ற தமது கோட்பாட்டு அடையாளதை மட்டும் தான்  முதன்மை படுத்தினர் இஸ்லாமிய கோட்பாட்டு தன்னை ஏற்றுகொண்ட பல விதமான இனமக்கள் கூட்டத்தை முஸ்லிம் என்று மட்டும்தான்.

அடையாள படுத்தியது இப்படி தன்னை அடையாளபடுத்திய  கோட்பாட்டு சமுதாயம் பல இன பிரிவுகளின் இரத்த கலப்பாக உருவானது  இது தனி ஒரு இனத்தை பிரதிநிதித்துவ படுத்தவில்லை  சிரியர் , மொரோகர் யெமனிகள், எதியோபியர், ஈரானியர், ஈராக்கியர், மலேசியர், இந்தியர் என்ற இனங்களுடன் சிங்களவர் , தமிழர் என்ற இரத்தங்கள் ஒன்றாக கலந்து முஸ்லிம் என்ற புதிய கோட்பாட்டு அடையாளம்  உருவானது இது பிரிக்க முடியாத இரத்த கலப்பை கொண்டது  இங்கு இனவாதம் இல்லை கோட்பாட்டுவாதம் மட்டும் தான் உண்டு இதுதான் எமது முஸ்லிம் என்ற அடையாளம் ,முஸ்லிம் என்ற அடையாளம் ஒரு சிந்தனை கோட்பாட்டின் பெயர் இந்த  அடையாளத்தினுள் பல நூறு இனங்கள் இருக்கலாம் ஆனால் அவை இந்த சிந்தனைக்  கோட்பாட்டை  ஏற்றுகொண்டவுடன் அனைத்து அடையாளங்களையும் இழந்து விடும் தம்மை முஸ்லிம் என்ற ஒரு அடையாளதால்  மட்டும் அடையாள படுத்தும் .

இந்த அடையாளத்தால்  மட்டும்தான் 1924 ஆண்டு துருகியில்  வீழ்த்தப்பட்ட இஸ்லாமிய கிலாபத்  மீண்டும் உலகில் ஏற்படுத்தபடுவதற்கு அடிப்படையாக அமையும் என்பதுடன் இலங்கை முஸ்லிம்களை சர்வதேச முஸ்லிம் உம்மாவின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக நிலைநிறுத்தும்

Written by lankamuslim

October 13, 2009 at 5:12 pm

5 Responses

Subscribe to comments with RSS.

  1. இன்று வடக்கிலும் கிழக்கிலும் அடையாள விற்பனைக்கு பேரங்கள் பேசபடுகிறது குறிப்பாக முஸ்லிம் என்ற அடையாளத்தை விற்று தமிழ் முஸ்லிம் என்ற அடையாளத்தை வாங்க பேரங்கள் பேசபடுகிறது – Sufiyan Khan-

    Sufiyan khan

    October 13, 2009 at 10:44 pm

  2. salam very informative art – “Muslim identity”

    Ibra

    October 14, 2009 at 11:05 am

  3. பல நாடுகளின் இருந்து முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தனர் சிரியா, மொரோகோ , யெமன் , எதியோபியா , ஈரான் , ஈராக் , மலேசியா இந்தியவின் தமிழ் நாடு , கேரளா,குஜராத் போன்ற நாடுகளில் இருந்து பல மொழி பேசக்கூடிய பல இன மக்கள் வந்தனர் இவர்கள் வியாபார மொழியாக அரபி தான் பேசினார்கள் ஆனால் இவர்கள் அனைவரும் முஸ்லிம் என்ற தமது கோட்பாட்டு அடையாளதை மட்டும் தான் முதன்மை படுத்தினர்

    I like this exposes – Munef

    Munef -

    October 16, 2009 at 10:25 pm

  4. Dear sir please provide the sources for the historical writings

    Ansar -Col

    October 17, 2009 at 10:35 pm

  5. Hats off to u Mr. Samil. This artical very good information about us “Muslim identiy”

    Mohd Munas

    August 19, 2011 at 7:54 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers